இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 9 ஜூலை, 2013

உன் மருமகளுக்கு டெலிவரி ஆச்சே, எப்படி
இருக்காங்க?

மாமியார் : பேயும் , ......சேயும்.... நலம்!!!??
**********************************

ஒரு காட்டில் எப்பிடி இரண்டு சிங்கம் இருக்க
முடியாதோ., அதே போல…

தலைவரே போதும்…’சிங்கம் டூ’ வந்தாச்சு..!

***********************************
என்ன இது, குற்றப்பத்திரிகையோட, சாம்பார்தூள்
பாக்கெட்டும் சேர்த்து கொடுத்துட்டுப் போறார்?

ஏற்கனவே இரண்டு முறை குற்றப்பத்திரிகை

அனுப்பியும்…நீங்க வாங்கிக்கவே இல்லையாமே…!

***********************************
தலைவரே..உழைச்சு சம்பாதிச்ச காசுதான்
நிலைக்குமாம்..!

அதுக்கென்னய்யா இப்போ…என்கிட்டே இருக்கிறது

பூராவும் மக்கள் உழைச்சு சம்பாதிச்சதுதான்..!
************************************

மகளிரணி தலைவியோட ரவுசு அதிகமாயிடுச்சு..!

எப்படி சொல்றீங்க தலைவரே?

அவங்க எழுதின சமையல் குறிப்பை அரசிதழில்

வெளியிடணும்னு அடம் பிடிக்கிறாங்களே..!
*******************************************

உங்க மாமாவுக்கு விபத்துல அடியாமே. எந்த இடத்துல?”
-
“”தண்டுவடத்துல”
-
“தமிழ் நாட்டுல அப்படி ஒரு ஊர் இருக்கா?”

**************************************

சோமன்; எதுக்குங்க பைய்யன இப்படித்திட்ற்றீங்க?

ராமன்: ஃபேஸ்புக்ல அக்கௌண்ட் ஓபன் பண்ணுடான்னா 'அக்கௌன்ட் ஓபன் பண்ணா எத்தினை % இன்டரஸ்ட் கிடைக்கும்னு கேக்கரான்!!!

************************************
நாய் ஜாக்கிரதை’ போர்டு மாட்டியிருக்கேன்னு பயந்து
வாசல்லேயே நிக்குறேன்”

“”தைரியமா உள்ளே வாங்க, நாயை விற்றுவிட்டேன்”

“”அப்புறம் ஏன் சார் இந்த போர்டை இன்னும் வச்சிருக்கீங்க?”

“”போர்டை விற்க முடியலை, அதான்”
*****************************
மனைவி : “ என்னங்க! இதுவரைக்கும் ரெண்டு பேரா இருந்து வந்த நாம, இனிமே மூணு பேரா ஆகப் போறோம்”

கணவன் : “ அடி கள்ளி… எங்கிட்ட சொல்லவே இல்லையே…. எத்தனை மாசம் ?”

மனைவி : “ அதில்லைங்க எங்கம்மாவும் நம்ம கூடவே வந்து செட்டில் ஆகப் போறாங்க”

நன்றி முழுமுதலோன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக