இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 8 செப்டம்பர், 2013

மனதுக்குள் பலமுறை

என் வீட்டு மல்லிகை
எத்தனை முறை பூத்தாலும்
வாசமில்லை ...!!!

என் வீட்டு அழைப்பு மணி
எத்தனை முறை அடித்தாலும்
பதட்டமில்லை ...!!!

எப்போது நீ வருவாய் என்று
சொல்கிறாயோ அப்போது
மல்லிகை வாச தொடங்கும் ....!!!

அழைப்பு மணி எப்போது
அடிக்கிறதோ இல்லையோ
மனதுக்குள் பலமுறை
அடித்துவிடும் அழைப்பு மணி ....!!!