இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 8 ஏப்ரல், 2014

நண்பா நீ இப்போ எங்கிருகிறாய் ...? 03

அப்பு துறை தாத்தாவின் .....
மாங்காய் தோட்டத்தில் ....
உச்சி வெய்யில் மண்டை எரிய....
ஒளிச்சு ஒளிச்சு மரத்தில் ஏறி..
மாங்காய் பிடுங்கும் நேரம் ...
பார்த்து -அப்புத்துரை தாத்தா ..
தடியோடு ஓடிவர  -நீ ஓடிவிடுயாய்
என்னை விட்டு ....!!!

மரத்தில்
நின்றபடியே -உன்னை ..
நான் கூப்பிட செய்வதறியாது ..
மரத்தில் இருந்து குதிக்கவழி....
தெரியாது மரத்தில் நின்று....
அழும்போது -  நீ .
இன்னொரு மரத்தில் ..
ஏறுவாய் உன்னை துரத்தி ...
வரும் போது நான் குதித்து...
ஓடிவிடுவேன்  ....!!!

வீட்டில்  தாத்தா முறைப்பாடு
செய்தவுடன் உனக்கும் பூசை
எனக்கும் பூசை  -அடிவிழும் போது
திடசந்தர்போம் எடுப்போம் ...
நாளை மாங்காய் பிடுங்காம
விடுவதில்லை என்று  -அத்தனையும்
இனிக்குதடா நண்பா அவற்றை
நினைக்கையில் ....!!!
*
*
*
நண்பா
நீ இப்போ எங்கிருகிறாய் ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக