இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 9 ஏப்ரல், 2014

நண்பா நீ இப்போ எங்கிருக்கிறாய் ...? 04

நாம் செய்த சின்ன சின்ன
குறும்புகள் என்றும் பெரிய
பெரிய நினைவலைகள் ....!!!
மரவள்ளி தோட்டத்தில்...
அடர்ந்திருக்கும் இடம் பார்த்து ....
யாரும் இல்லாத நடு வெய்யில்....
நேரம் பார்த்து .....வீட்டில்..
களவெடுத்ததீப்பெட்டியுடன் ...
ஆந்தைகண் அகழத்துடன்...
தோட்டத்துக்குள் புகுவோம் ....!!!
மரவெள்ளி சருகு எடுத்து ...
கொண்டு போன பேப்பர் ....
துண்டை -சுருட்டுபோல்....
சுற்றி உனக்கு ஒன்று ....
எனக்கொன்று - தீப்பெட்டியை ....
நீயும் நானும் உரசுவோம் ..
காற்று எமக்கு வில்லானாய்
மாறினாலும் இறுதியில் நாம் ..
வெற்றி பெற்றோம் ....!!!
இழுத்த முதல் இழுவையில் ....
புரக்கேறி நான் இரும ....
என் தலையில் ......
நீ தட்ட மூச்சு திணறி நான் ..
துடிக்க செய்வதறியாது நீ
முழிப்பாய் .....!!!
அந்தநேரம்.....
பார்த்து தோட்ட பக்கம் .....
யாரோ வர தலை தெறிக்க ....
ஓடினோமே ...அந்த ஓட்டத்தின் .....
மூச்சு வாங்கல் இன்றுவரை ....
இருக்குதடா நண்பா .....!!!
இப்போ என்னிடம் அந்த ...
பழக்கமும் ...இல்லை ..
என்னருகில் நீயும் இல்லை ....!!!
*
*
*
நண்பா நீ
இப்போ எங்கிருக்கிறாய் ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக