இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 ஏப்ரல், 2014

காதல் செய் கருணை வரும் ...!!!

காதல் செய் கருணை வரும் ...!!!
-------------------------------------------------

உயிரே

உன்மீது கொண்ட உயிர்
காதலால் உனக்கு ஒரு
பூவை பறித்து தரகூட
என் மனம் தயங்குகிறது ..!!!

தண்டுடன் காதல் செய்த
பூவை நான் பறித்தால்
பூவின் சாபத்தாலோ
தண்டின் சாபத்தாலோ
நம் காதலும் பறி போகிடுமோ ...?

ஏக்கத்தால் தடுக்கிறது மனம்
காதல் செய்தால் கருணையும்
வளரும் என்பது உண்மைதான்
உயிரே ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக