இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 14 ஏப்ரல், 2014

என்னவளே எங்கிருக்கிறாய் ....?

அன்பு வாசகர்களே ....!!!
---------------------------------

காதலால் காதல் 
செய்து உண்மை அன்பை அன்பைத்தான் 
உயிராக மதித்து காதலித்த 
உயிர் காதலர்களின் பிரிவு 
கொடுமையிலும் கொடுமை 

----------------------------------

" கொடியது கொடியது இளமையில் காதல் கொடியது "
அதனிலும் கொடியது 
"உண்மை காதல் பிரிவது கொடியது "
அதனிலும் கொடியது 
"பிரிந்த காதலரை பார்க்காமுடியாமல் போவது "

என்பேன் 
-------------------------------------

இந்த சூழ்நிலையை கவனத்தில் கொண்டு இந்த கவிதைகள் அமையும் தொடர்கிறேன்
--------------------------
வீட்டாருக்கு பயந்து பயந்து
உறவுகளுக்கு பயந்து பயந்து
நண்பர்களுக்கு பயந்து பயந்து
காதல் கொண்டோம் காதலும்
செய்தோம் .....!!!

ஒரு நொடி உன் நினைவில்
நான் இல்லாமல் இல்லை
என் நினைவில் நீ
இல்லாமலில்லை ,,,!!!

ஒரு நொடி உன்னை காணும் ...
நேரம் தாமதித்தால் ஒரே கண்ணில்
கண்ணீர் கூட வந்து விடும் ...
அப்படி துடித்த நம் இதயம் .....
இப்போ நாம் பிரிந்து பல ஆண்டுகள் ...!!!

நமக்கிடையே ஏற்பட்டது காதல்
தோல்வியில்லை ...!!!
காதல் பிரிவும் இல்லை ....!!!
இன்றுவரை காதலுடன் நான்
இருக்கிறேன் ...
நீயும் நிச்சயம் இருப்பாய் உயிரே
நம் காதல் அத்தனை தூய்மையானது ...!!!

உன் முகம் பார்க்கும் வரை ..
உன் பதில் கிடைக்கும் வரை ...
என் கவி பணி தொடரும் ..
நான் உன்நினைவோடு இருக்கிறேன்
நீ உயிரோடு இருக்கிறாயா .....?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக