இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 30 ஜனவரி, 2014

நமக்குள் ஏன் இடைவெளி ..?

நிச்சயமாக எனக்குள் நீ
உனக்குள் நான் இருந்தும்
நமக்குள் ஏன் இடைவெளி ..?

நான் காதலில் துடிக்கிறேன்
என்றால் துடிக்க பண்ணியது -நீ
என்னை வதைக்கும் அளவுக்கு
என்னிடம் நீ நிறைந்து இருக்கிறாய் ..!!

உணர்வு நான் வெளிப்பாடு நீ

நான் எழுதும் கவிதையில்
வரிகள் நான் வார்த்தைகள் நீ
ஆரம்பிப்பது நான் முடிப்பது நீ
உணர்வு நான் வெளிப்பாடு நீ 

நீ எங்கு இருக்கிறாய் ...?

உன்னிடம் காதல் கொண்டு
பழகினேன் என்னிடம் உன்
காதலும் சேர்ந்து இருக்கிறது
நீ எங்கு இருக்கிறாய் ...?

என்னை வதைக்கிறது ...!!!

கவிதை எழுதுகிறேன்
சில நேரம் அவள் வருகிறாள்
சில நேரம் கவிதை வருகிறது
இரண்டும் என்னை வதைக்கிறது ...!!!

உயிர் போனால் அது உன்மடியில் போகனும்

உயிர் போனால் அது உன்மடியில் போகனும்
--------------------------------------------------------------

எனக்கு உயிர் நண்பன் இல்லை
உயிராய் இருந்தவனும் முதுகில்
குற்றி விட்டான் - பதிலாக
இதயத்தில் குற்றியிருக்கலாம்
என்னை கொண்றிருக்காலாம்...!!!

வந்தாய் நீ தந்தாய் அன்பை
உன் அன்பை என்றாலும்
சற்று சந்தேகம் -நீ
நீர் குமிழியா ..? நீர் வீழ்ச்சியா ..?
சற்று தடுமாறியது மனம் ....!!!

உணர்ந்தேன் உன் அன்பை
என்னை விட என் குணங்களை
நன்றாக புரிந்து கொண்டாய்
எனக்கே இருந்த குணத்தை எனக்கே
தெரியாமல் அற்புதமாய் சொன்னாய் ...!!!

உள்ளத்தால் உண்மை சொன்னாய்
உள்ளத்தால் அன்பு தந்தாய்
உள்ளத்தால் கண்ணீர் விட்டாய்
உள்ளத்தால் என்னை வாழ்த்தினாய்
உள்ளமே உள்ளத்தை உயிராய் தந்தாய் ...!!!

உன்னுடைய  அன்பால் உயிர் பெற்றேன்
உயிரே போகும் வரை உன்னுடம்
உயிர் நண்பனாய் இருக்க துடிக்கிறேன்
உயிர் போனால் அது உன்மடியில் போக
உயிராய் துடிக்கிறேன் அன்பே நட்பே ...!!!

பெற்றோரே ஒருமுறை வாரீர்

வெளி நாட்டு மணமகன்
வெளிநாட்டில் தான் திருமணம்
சுற்றத்தார் மத்தியில் புகழாரம்
திருமணம் சிறப்பாய் நடைபெற்றது
வாழ்க்கையும் வெளிநாடு பறந்தது ...!!!

சுற்றத்தாரின் பேச்சில்லை
உற்ற நண்பியின் ஆதரவுமில்லை
ஆறுதல் வார்த்தை சொல்ல
ஆனந்தமாய் வார்த்தை சொல்ல
அருகில் யாரும் இல்லை .....!!!

நான்கு சுவருக்குள் இன்பம்
அதே சுவருக்குள் துன்பம்
மாறி மாறி வாழும் சுவர்
வாழ்க்கை தான் வெளிநாட்டு
வாழ்க்கை வெறுத்தே போகிறது ...!!!

உற்ரத்தாரின் கொண்டாட்டம் இல்லை
சித்திமகளின் காதுக்குத்து இல்லை
மாமாவின் மகளின் பூப்புனிதம் இல்லை
கூட்டத்தோடு கோயில் செல்லும் சுகமில்லை
வாழ்த்துக்களுடன் கழிந்தன இவை ...!!!

ஊரில் நல்ல வரன் வந்தும்
என் பிள்ளையை வெளிநாட்டில் தான்
வாழவைப்பேன் என்று பெருமை போடும்
பெற்றோரே ஒருமுறை வாரீர்
மகளின் இயந்திர வாழ்க்கையை பாரீர் ....!!!

என்று தணியும் இந்த வெளிநாட்டு
மோகம் எப்போது நம்புவர் -இவர்கள்
உள்ளூர் உற்பத்தி நன்று என்று
கூடி வாழ்ந்த சமூகம் இப்போ
சிதறிக்கிடக்கும் அவலநிலை பாரீர் ...!!!

நினைவால் இறப்போம் ...!!!

உன்னை நினைக்காத நேரம்
நான் இறந்த நேரம்
வா ,,,இருவரும்
நினைவால் இறப்போம் ...!!!

கணணி திரையில் உன்
முகம் நிலையாக இருக்க
மனத்திரையில் அசையும்
படமாகும் ....!!!

இதயத்தில்
இரத்தோட்டம் நீ
எனக்கோ இரத்த சோகை...!!!

கஸல் 635

நினைவில் கோலம் போட்டேன்

அன்பை தந்தேன்
காதலை தந்தாய்
தண்ட வாளத்தில்
காதல் பயணம் ....!!!

காதல் சுவர் நீ
காதல் படம் நான்
தூசி பிடிக்கிறது காதல்

நினைவில் கோலம்
போட்டேன் -கனவில்
புள்ளி போட்டேன்
கண்ணீர் கோலத்தை
அழிக்கிறது ....!!!

கஸல் 634

கண்ணீரால் முடிந்தது ...??

இதயமும் இதயமும்
சேர்ந்தால் காதல்
உன் கணக்கில்
பிழைக்கிறதே...???

பன்னீரால் காதலிக்கிறேன்
கண்ணீரால் விடைதருகிராய்
காதல் நீரும் நெருப்பும்

கண்ணிலே தோன்றி
இதயத்தில் முடியும்
காதல் -எப்படி ..?
கண்ணீரால் முடிந்தது ...??

கஸல் 633

ஏன் உனக்கு காதல் வரவில்லை ...!!!

தாமரை இலை நீ
காதல் தடாகம் நான்
தாமரை இலையில்
தண்ணீர் நம் காதல் ...!!!

சமுத்திர ஆழம் காதல்
சமுத்திர கப்பல் நாம்
ஓட்டை விழுந்த படகில்
பயணம் செய்கிறோம் ...!!!

எறும்பு ஊர கற்குழியும்
என் நினைவுகள் ஏற
ஏன் உனக்கு காதல்
வரவில்லை ...!!!

கஸல் 632

மௌன காதல் செய்கிறாய் ....?

கேட்கும் ஓசையெல்லாம் 
நீ பேசும் பேச்சாய் உணர்கிறேன் 
ஏனடி இப்போ மௌன காதல் 
செய்கிறாய் ....? 

வண்டு வருவது பூவுக்கு 
தெரியும் 
வாடிய பூவில் தேனில்லை 
என்று வண்டுக்கு தெரியாது 

எழுதிய கருவிகள் கூட 
காதலிக்க 
தொடங்கி விட்டான 
உனக்கேன் இன்னும் 
காதல் வரவில்லை ...? 


கஸல் கவிதை 631

புதன், 29 ஜனவரி, 2014

காதல் வானில் பறப்போம்

உருவத்தால் வேறுபாடு
நிறத்தால் வேறுபாடு
எண்ணத்தால் வேறுபாடு
இருந்தாலும் காதல்
வேறுபடகூடாது....!!!
ஒருபக்கமாக இருந்து
பயனேது வா அன்பே
காதல் வானில் பறப்போம்
----------
எல்லாம் உனக்காத்தான் அன்பே 05

ஆயிரம் கண் கொண்டவள் -நீ

உயிரே - நீ
திடீரென என்னை பார்த்த
பார்வையில் விபத்துக்குள்
சிக்கி அவசர சிகிச்சையில்
இருக்கும் நோயாளி
போல் ஆகிவிட்டேன் ...!!!
குற்றுயிரும் குறை உயிருமாய்
இருக்கும் என்னை ஒருமுறை
மீண்டும் பார்த்து விடு
என்னை உயிர்ப்பித்துவிடு ...!!!
-------------

எல்லாம் உனக்குத்தான் அன்பே -03

உன் கண் மின்சாரத்தில் ...!!!

ஒற்றை கண்ணால் பார்த்ததில்
நான் பித்தன் ஆனேன் -இரட்டை
கண்ணால் பார்த்திருந்தால்
செத்தே போயிருப்பேன்
உன் கண் மின்சாரத்தில் ...!!!
இப்போ நான் ஒரு தலையாக
காதலிக்கலாம் -நிச்சயம்
நீ என்னை இரட்டை கண்ணால்
பார்ப்பாய் ....!!!

எல்லாம் உனக்கு தான் அன்பே

நீ காதலித்தாலும்
நீ காதலிக்கா விட்டாலும்
எனக்கு ஒன்றும் கவலையில்லை
என் உயிர் உள்ளவரை உன்னை
காதலிப்பேன் -இதயம் முழுக்க
நிறைந்திருக்கும் -நீ
உயிராய் துடிக்கிறாய்
என் மூச்சு நிற்கும் போது
என் காதல் நிற்கும் -இந்த
கவிதை எல்லாம் உனக்கு தான்
அன்பே - என் கவிதைகள் உன்னை
காயப்படுத்த கூடாது
என் இதயம் காயப்படட்டும் ...!!!

************************
குறிப்பு ; ஒருதலையாய் காதலிக்கும்
இதயங்களுக்கு இக் கவிதை சமர்ப்பணம் ..!!!
தொடரும் இந்த வலிகள் ............................

ஒரு சாதனையாளனை வீணாக்காதீர்

சமுதாயத்தில் வலு இழந்தோருக்கு
சமூக கண்ணோட்டத்துடன் பார்
சமூக பொறுப்பு நம்முடையது
சமூகத்தின் கூட்டு வாழ்க்கையில்
சரி சமனாய் வாழ்வது நம் கடமை ...!!!

இரங்கி கேட்பவர்களுக்கு -நீ
இரக்கத்துடன் பிச்சை போடாதே
யாருக்கு யார் பிச்சை போடுவது ..?
எல்லோரும் ஒருவகையில்
பிச்சை காரரே ....!!!

அனாதை இல்லத்தில் வாழும்
குழந்தைக்கு தாய் அன்பு பிச்சையே
முதியோர் இல்லத்தில் வாழும்
பெற்றோருக்கு பிள்ளை அன்பும்
பிச்சையே
உயிர் நட்பு பிரிந்தால் -நட்பும்
ஒருவகையில் பிச்சையே ...!!!

கண் இழந்தோர் .கால் இழந்தோர்
பிற அங்கவீனர் கூட உழைத்து வாழும்
இவ் உலகில் -நல்ல உடழுளைப்பும்
திடகார்த்தமான வலுவும் உள்ள நீ
பிச்சை எடுக்கிறாய் .....!!!

நீ பிச்சை எடுக்க தகுதியானவன்
பொருளாதார பிச்சை -அல்ல
தன்னம்பிக்கை பிச்சை -நிமிர்ந்து
நில் துணிந்து செல் - உடம்பை வருத்து
நீயும் ஒரு சாதனையாளனே
இரங்கி கேட்டவுடன் பிச்சை போடாதீர்
ஒரு சாதனையாளனை வீணாக்காதீர் 

நமக்கே காலம் மலரும்

பருவமடைந்த காலம் முதல்
பக்குவமாய் உன்னை
காதலிக்கிறேன்
பக்கத்தில் நீ வரும் போது
பட்டாம் பூச்சியாய் பறக்கிறது
இதயம்....!!!

பயம் ஒரு பக்கம் ஆசை
ஒரு பக்கம் படாத பாடு
படுகிறது -மனசு
பட்டுப்புழுவாய் துடிக்கிறது
மனசு ....!!!

பண்பாக வாழவிரும்பும்
காதலை பெற்றோர்
பண்புடன்  ஏற்றுக்கொள்வர்
பொறுத்திரு அன்பே
நமக்கே காலம் மலரும் 

தூண்டில் போட்டு என்னை

தூரத்தில் நின்றே சிரித்தவளே
தூக்கத்தை என்னிடம் பறித்தவளே
தூண்டில் போட்டு என்னை கொள்கிறாய் ...!!!

தவுடு பொடியாக்கி விட்டது

காலமெல்லாம் காத்து வைத்திருந்தேன் 
காதலிப்பதே இல்லை என்ற இறுமாப்பை 
உன் கடைக்கண் பார்வை தவுடு பொடியாக்கி விட்டது 

காதலித்து பார் ....!!!

தூக்கத்தை வரவழைக்க
தூக்க மாத்திரை போடு
தூக்கத்தை தொலைக்க
காதலித்து பார் ....!!!

காய் தான் கிடைத்தது

காத்திருந்தால் காதல் கனியும் என்றார்கள்
காத்திருந்தேன் - காய் தான் கிடைத்தது
தாய் சொல்லை கேட்டுவிட்டாள்...!!!

நான் தந்தையானபின் உணர்கிறேன் ...!!!

என் தோளில் சுமை வந்த போது
உணர்ந்தேன் தந்தையே -என்
குடும்பத்தில் நீங்கள்  சுமந்த சுமையை
தனி மனிதனாய் உழைத்து -ஒரு
வேளை சாப்பாட்டுக்கு நீங்கள் சுமந்த
சுமையையும் பட்ட பாட்டையும்
நான் தந்தையானபின்  உணர்ந்தேன் ....!!!

அடிப்படை ஆதாரம் எதுவுமின்றி
ஆதரவு கொடுக்கும் உறவுகள் இருந்தும்
உதவ வராத உறவுகளும் ...
விழுந்தால் தூக்கி விட கரமும் இன்றி
எம்மை யாரும் விழுத்தி விட கூடாது
சொந்தகாலில் நிற்க கற்று தந்த தந்தையே
நான் தந்தையானபின் உணர்கிறேன் ...!!!

வசதி கொண்டவன் வாசல் மிதியாதே
சிறு வசதி செய்துவிட்டு உன்னை
அடிமையாக்கி விடுவான் ....!
உழைத்து உண்ணாத நண்பன் வேண்டாம்
உன்னை அவன் சோம்பேறி ஆக்கிடுவான் ...!
தலை குனிந்து பேசாதே -உன்
தன்மானத்தை இழக்காதே...!
இவற்றின் பலனை உணர்கிறேன்
நான் தந்தையானபின் உணர்கிறேன் ...!!!

தோல் சுருங்கி தலை நரைத்து
வீட்டில் என்னுடன் இருந்த போதும்
இறுமாப்பும் நெஞ்சு வைராக்கியமும்
சுருங்கவும் இல்லை நரைக்கவும் இல்லை
கணவன் மனையியின் வாழ்க்கையும்
எப்படி வாழவேண்டும் என்பதை
கற்று தந்து விட்டு கடவுளான தந்தையே
நீங்கள் எனக்கு பெரியார் தான் ...!!!





காதலால் காதல் செய்

காதல் ஒரு ஏக்க காற்று அடுத்து என்ன என்ன ..? என்று ஏங்க வைக்கும் உயிர் துடிப்பு இந்த நிலையில்
அவள் / அவன் திடீரென பார்த்தால் ...?

" உன் கண்ணும் என் கண்ணும் "
" பட்டு தெறித்த போது காதல் மின்னல் "
"பொறி பறந்தது -நீ என்னை பார்த்தாய் "
" நான் பறந்தேன் "

ஞாயிறு, 26 ஜனவரி, 2014

காதலால் காதல் செய்-05

காதல் காதல் இல்லையேல் சாதல் சாதல் என்பது
இறப்பல்ல . வாழ்க்கையில் இன்பத்தை இறந்தததை
குறிக்கும் காதலில் தோல்விக்கு தற்கொலை என்பது
முட்டாள்களின் முடிவு .....!!!

"நான் வானமாக இருக்கிறேன் 
நீ முகிலாக உரசி செல்கிறாய்
இந்த உரசல் ஒரு நொடி 
இறப்புத்தானே...!!!

காதலால் காதல் செய்-04

காதல் அதிகமானால் அது கூட ஒரு போதைதான் 
தூக்கம் வராது பசி வராது பேசப்பிடிக்காது பிறரிடம் 
*
*
*

"பார்க்கும் பொருள் எல்லாம்
உன் முகம் தெரிய என்ன 
மந்திரம் செய்தாய் "

காதலால் காதல் செய்-03

காதலில் எல்லாம் அவரவருக்கு அதிசயம் தான் 
என்னில் நீ ஒரு அதிசயத்தை பார்க்கப்போகிறாயா..?
அப்படிஎன்றால் இந்த கவிதையை பார் 

"உயிரோடு இருக்கும் 
சடலத்தை பார்க்க 
போகிறாயா ...?
என்னை விட்டு 
பிரிந்து பார் ......""

காதலால் காதல் செய்-02

காதலில் ஒவொரு நொடியும் சுகமும் சுமையும் தான் 
சுகத்தால் சுமைவருகிறதா..? சுமையால் சுகம் வருகிறதா ..? என்பது காதலில் புரியாத புதிர் தான் 

"நீ என்னை 
பிரியும் நாள் தான் 
நான் சடலமாக 
வாழப்போகும் நாள் "

காதலால் காதல் செய்

காதலில் எந்த செயலும் அழகுதான் .அதை ரசிக்கும் உள்ளம் தான் காதலிக்க முடியும் .அதனால் தான் காதல் எல்லாவற்றிலும் இருக்கிறது .காதலர் சந்தோசமாக இருக்க வேண்டுமென்றால் நிச்சயம் எல்லா செயலையும் ரசிக்க கற்று கொள்ள வேண்டும் 


நீ 

தொலைபேசியில் 

சிரித்த சிரிப்புத்தான் 

என் தொலைபேசி 

அழைப்பு மணி 

வியாழன், 23 ஜனவரி, 2014

நங்கூரமடி

காதல் கடலடி
காதலர் கப்பலடி
சந்தேகம் நங்கூரமடி 

மூன்று வரி கவிதை -ஏன் தண்டித்தாய் ...!!!

இறுதியாக சிரித்தேன் உன்னோடு
சிரிப்பே சிறையாகி விட்டது மனதோடு
அறுதியாக ஏன் தண்டித்தாய் ...!!!

மலரும் காதல் பூ

உன்னோடு என் காதல் முடிந்தால்
என் மூச்சோடு முடியும் காதல்
மண்ணோடு மலரும் காதல் பூ 

காதல் செய் காதலே கடவுள் -05

காலால் உதைத்தார் .இறைவன் 
அருளினார் என்கிறது புராணம் .காதலில் இருப்பவனுக்கு எப்படியும் திருமேனி பட்டால் அதுவும் இன்பம் தான் ....!!!

"வந்தால் உதைப்பேன் "
"என்று நீ சொல்லும் செல்லமான "
"சொல் கூட இன்பம் தான் "
"அப்படியென்றாலும் உன் மேனி "
" என்னில் படட்டுமே "


தொடரும்

காதல் செய் காதலே கடவுள் -04

இறைவனை உணர வேண்டும் தவத்தில் இருப்பவனுக்கு ஏக்கம் . காதலியை காண வேண்டும் 
என்று காதலனின் ஏக்கம் .

"உன்னை பார்க்காமல் இருக்கும் "
"ஒவ்வொரு நொடியும் என் பார்வை "
" மங்கிக்கொண்டு போகிறது "
"என் விழித்திரை நீ "

தொடரும்

காதல் செய் காதலே கடவுள் -03

அன்பு கொண்ட ஒரு செயல் நடைபெறப்போகிறது 
வரப்போகிறது என்றால் தூக்கமே வருவதில்லை 
அந்த நேரத்தில் ஒரு மனம் படும் பாடு அப்பாப்பா 
சொல்லவே முடியாது ....!!!

" நீ வருகிறாய் என்றவுடன் "
" எனக்கு அருள் தரப்போகிறாய் "
" என் இதயம் "
'' உனக்கும் சேர்த்து துடிக்கிறது "
''என் இதயம் "
"எதற்கும் ஒரு அளவு உண்டு அன்பே "


தனி கவிதை தொடரும்

காதல் செய் காதலே கடவுள் ..02

காதலில் இருக்கும் இதயங்களின் செயற்பாட்டுக்கு 
நிகர் ஏதுமில்லை அந்த இதயம் துடிக்கும் செயலுக்கு 
வார்த்தையால் கூறி விடமுடியாது ....!!!

" நீ தலை குனிந்து செல்லும் போது "
" என் தலையே வெடித்து சிதறுகிறது "
" நம்பிக்கையுடன் காத்திருக்கிறது "
" என் இதயம் ஒரு சொல்லுக்காக "


தொடரும்

காதல் செய் ..காதலே கடவுள் ....!!!!!

இந்த உலகில் எல்லோரும் உன்னையும் .நீ எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்றால் ஒரே 
வழி அனைத்தையும் காதல் செய் .காதல் இரு வேறுபட்ட பாலாருக்குரிய கவர்ச்சி செயல் அல்ல .
அது ஒரு பிரம்மம் . ஆம் காதலே கடவுள் ....!!!!!

" மனத்தால் உனக்கு அபிசேகம் 
செய்கிறேன் - என் இதயத்தில் 
தெய்வமாக நீ இருப்பதால் "


இந்த கவிதை ஒவ்வொருவரின் பார்வையை பொறுத்து அர்த்தம் வேறுபாடும் ...!!!

தொடரும்..... தொடரும்

குற்றுவது நீ

உன்  காதல் முள்ளாக நான்
இருப்பேன் குற்றுவது நீ
இரத்தம் வடிக்க நான் தயார் ...!!! 

என் இதய நரம்புகள்

என் இதயத்தில் நீ போட்ட அழகு
கோலம் தான் என் இதய நரம்புகள்
அழித்து விடாதே இறந்து விடுவேன் 

நான் துடிக்கிறேன்

மத்தளமாய் காதலில் நான்
ஒரு புறம் நீ பார்க்கிறாய்
மறுபுறம் நான் துடிக்கிறேன் 

மூன்று வரி கவிதை -மூன்றெழுத்து

மூச்சு மூன்றெழுத்து
காதல் மூன்று எழுத்து
முடிவும் மூன்றெழுத்து
- மூன்றும் சேர்ந்த அன்பே - நீயும் மூன்றெழுத்து 

புதன், 22 ஜனவரி, 2014

நட்பு -சிறு வரியில் 05

நட்பின் சூரியன் நீ
உன் நட்பில் காயும்
எள்ளு நான் ....!!!
***********
தொகை விரித்து ஆடும் மயிலை விட
என் தோழனின் தோள் அழகு
*********
ஒப்பிட்டு நட்பை சொல்ல
நம் நட்புத்தான் இருக்க வேண்டும்
இதிகாசங்களும் புராணமும் வேண்டாம்
********
நடக்கும் காலம் முதல்
இறக்கும் காலம் வரை
தொடர்வது நட்பு மட்டும் தான் ....!!!
********
கல்லறையிலும் வாடாமல் இருக்கும்
பூ
நட்பும் ...!!!

நினைக்கதெரியாது...!!!

உன்னை நினைக்க தெரியும்
உன்னை மறக்க நினைக்கதெரியாது...!!!

இரு வரி கவிதை - ஆறுதல் சொல்வாயோ ..?

அழுது கொண்டிருப்பது என் கண் மட்டுமல்ல ..
என் கவிதையும் தான் - ஆறுதல் சொல்வாயோ ..?

இரு வரி கவிதை - கேட்டு விடாதே ...!!!

உனக்காக என்னை தருகிறேன் ..
எதற்காக என்று கேட்டு விடாதே ...!!!

இரு வரி கவிதை - நீ கண் சிமிட்டும்

நீ கண் சிமிட்டும் ஒவ்வொரு முறையும்
நான் கண்ணால் புகைப்படம் எடுக்கப்படுகிறேன்

இரு வரி கவிதை - துடிக்கிறேன் ....!!!

உன்னோடு வாழவும் துடிக்கிறேன் -இல்லையேல்
மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ....!!!

ஒரு வரி கவிதை 05

அழகான உன் பெயரை சொல்லி அலங்கார திருவிழாவாக்கினாய் என் மனதை 

ஒரு வரி கவிதை 04

ஒரு வார்த்தையால் எனக்கு இரவை பகலாக்கினாய்

ஒரு வரி கவிதை 03

கண்ணால் கண்டத்தை ஏற்படுத்தியவள் நீ 

ஒரு வரி கவிதை

நான் நானாக இருக்கிறேன் இல்லை உன் வரவால் ..!!!

உன் கண்ணில் கண்டேன்

உன் கண்ணில் கண்டேன்
என் மீது நீ கொண்ட காதலை
உன் மூச்சில் உணர்ந்தேன்
என் மீது நீ வைத்த உயிரை ...!!!

உன் சிரிப்பில் உணர்ந்தேன்
நீ என் மீது வைத்த சிறப்பபை
உன் பேச்சில் கண்டேன் -நீ
என் மீது கொண்ட
பேரானந்தத்தை....!!!

உன் நடையில் கண்டேன்
என் மீது நீ வைத்த நட்பை
உன் உடையில் கண்டேன்
நீ என் மீது வைத்த உணர்வை ...!!!

என்றாலும் காதலிக்கிறேன் ...!!!

உன்னை
கண்டேன் என்பதில்லை
என்னை
தொலைத்தேன் என்று
சொல் ....!!!

காதலால் காதல்
செய் -நீ காதலால்
கடினமாகிறாய்...!!!

உன்னோடு சேர்ந்து
வாழமுடியாது என்று
நிச்சயம் தெரியும்
என்றாலும்
காதலிக்கிறேன் ...!!!

கஸல் 630

காதல் பயிர் வளர்க்கிறாய் ...!!!

காதல் பரிசை புதிதாக
தரமுடியும் நீயோ
காதலை புதிதாக
கேட்கிறாயே ....!!!

தவறு விட்டால்
திருந்தலாம் -தவறே
நீயாக இருந்தால்
எப்படி திருத்துவது ...?

வளமான மண்ணில்
பயிர் வளரும்
கடற்கரை மண்ணில்
காதல் பயிர் வளர்க்கிறாய் ...!!!

கஸல் 629

என் தவறு தான் ....!!!

தூரத்தில் நின்றால்
துக்கம் விசாரிக்கிறாய்
அருகில் வந்தால் வலியை
தருகிறாய் ....!!!

எத்தனை நாள் உன்னை
நினைத்து அழுவது
இறைவா அவளை
நினைத்து அழ இன்னும்
அவள் வலியை தரட்டும் ...!!!

என்னிடம் இருக்கும்
காதல் உன்னிடமும்
இருக்கும் என்று நினைத்தது
என் தவறு தான் ....!!!

கஸல் 628

அழுவது வரமாகி விட்டது ...!!!

நீ காற்றாக இரு -நான்
காதல் பட்டமாக இருக்கிறேன்
தயவு செய்து நூலை அறுத்து
விடாதே .....!!!

நீ காதலில் ஓடி விளையாட
இதயத்தை தந்தேன் -நீ
ஓடி போய் விட்டாய் ...!!!

உன்னை நினைப்பது
வரமாக இருந்தேன்
அழுவது வரமாகி விட்டது ...!!!

கஸல் 627

உன்னை பார்க்க இரண்டு கண்



உதிக்கும் சூரியன் நான்
மறையும் சூரியன் நீ
நமக்குள் காதல் .....!!!

நீ நடந்து வந்த பாதையை
தேடுகிறேன் -நீயோ
அழித்துவிட்டு போகிறாய்

உன்னை பார்க்க இரண்டு
கண் போதாமல் இருந்தது
இப்போ உன்னை நினைத்து
அழ இரண்டு கண் போதாது ...!!!

கஸல் 626

வியாழன், 16 ஜனவரி, 2014

நீ வரும் பாதையில் ...!!!

என் இதய ரேகையை
சேர்த்து வைத்து பார்க்கிறேன்
பிறைபோல் அழகாக இருக்கிறது
உன் முகம் போல் ....!!!

கையை விலக்கி பார்க்கிறேன்
சமாத்தர மாக ஒரு இடைவெளி
வேண்டாம் அந்த இடைவெளி
காதலும் வாழ்க்கையும்
சேர்ந்து வாழத்தான் ....!!!

உனக்காக காத்திருக்கிறேன்
கனவில்
நினைவில்
நீ வரும் பாதையில் ...!!!

கோழை இதயம் எனக்கில்லை

உன்னை காதலிப்பது
முள் வெளிக்குள்
இருப்பத்தற்கு சமன்
என்றாலும் உன்னை
காதலிக்கிறேன் ...!!!

உன் வேதனையை
நான் தாங்கும்
இதயம் படைத்தவன்
இதயம் பலவீனமானவனை
நீ காதலித்து விட்டு விட
கூடாது என்பதால் ...!!!

காதல் வலி தாங்காமல்
தற்கொலை செய்யும்
கோழை இதயம் எனக்கில்லை 

உன்னோடு வாழ துடிக்கிறேன் ....!!!

நீ காதல் மீனாக
இருப்பாய் ஆனால்
நான் மண் புழுவாக
துடிக்கவும் தயார்

உன் அழகு உனக்கு
அழகு எனக்கோ
பேரழகு அதனால்
உனக்காக துடிக்கவும்
தயார்

ஆமைபோல் ஆயிரம்
ஆண்டு வாழாவிட்டாலும்
ஈசல் போல் ஒருநாள்
உன்னோடு வாழ
துடிக்கிறேன் ....!!!

இரத்தமாகவும் வடிக்க தயார் .....!!!

என் கவிதைகள் நீ 
தந்த வலிகளின் வலி 
கண்ணீராய் வருகிறது 
இன்னும் வலிதா
நான் இரத்தமாகவும் 
வடிக்க தயார் .....!!!

இதயத்தில் வைத்திருக்கிறேன் ....!!!

எல்லா பூக்களின் 
வாசமும் நிகராகாது 
நீ எனக்கு தந்த பூவுக்கு 
வாடிவிடக்கூடாது 
என்பதற்காக இதயத்தில் 
வைத்திருக்கிறேன் ....!!!

எனக்கு நீ கையசைப்பாயா ..?

எனது காலை கடன் 
அருகு வீட்டில் இருக்கும் 
உன்னை முதலில் 
பார்ப்பதுதான் ....!!!
எனது மாலைக்கடன் 
எனக்கு நீ கையசைப்பாயா ..?
என்று பார்ப்பத்துதான் ....!!!

உன் இதயத்தை பெற்றேன் ...!!!

காதலும் 
ஒரு பண்டமாற்று தான் 
ஒரு பொருளை கொடுத்து 
இன்னுமொரு பொருளை 
பெற்றது போல் -என் இதயத்தை 
உன்னிடம் தந்து 
உன் இதயத்தை பெற்றேன் ...!!!

என்னை விட்டு சென்று விட்டாய் ....!!!

நீ செய்தது சரிதான் 
உன்னை கேட்காமல் 
உன் இதயத்துக்குள் வந்தேன் 
என்னை கேட்காமல் 
என்னை விட்டு 
சென்று விட்டாய் ....!!!

உன் உருவம் வந்தது ...?

உனக்காக 
கவிதை 
மட்டும் தான் 
எழுதினேன்.. 
கவிதையில் எப்படி 
உன் உருவம் வந்தது ...?

கேட்காமல் இருக்க மாட்டேன் ....!!!

கைபேசியை விரும்பிய 
வர்ணத்தில் விரும்பிய 
வடிவில் -மாற்றுகிறாய் 
ஏன் என்று கேட்கமாட்டேன் 
உன் நினைவுகளை மாற்றி 
விடாதே -கேட்காமல் 
இருக்க மாட்டேன் ....!!!

பெற்றேன் சோகத்தை ...!!!

இழந்தேன் இதயத்தை
பெற்றேன் காதலை
இழந்தேன் காதலை
பெற்றேன் சோகத்தை ...!!!

உன்னை நினைத்து பாடுவதால்

பாடல்கள் எனக்கு பிடிக்கிறது
பாடலின் ஒவ்வொரு வரியும்
உன்னை நினைத்து பாடுவதால் 

வானம் அழுகிறது

குடை பிடித்து செல்கிறாள் அவள்
வானம் அழுகிறது பார்க்க
முடியவில்லை என்று மழையாய் ...!!!

காதல் இரண்டுக்குமே நன்று

உடல் பயிற்சி உடலுக்கு நன்று
உள பயிற்சி உளத்துக்கு நன்று
காதல் இரண்டுக்குமே நன்று 

இதய சிறையில் நான் .....!!!

கவலை படாமல் இதயத்தை
திருடினேன் இப்போ அவள்
இதய சிறையில் நான் .....!!!

இப்போ என்னை தேடுகிறேன் ....!!!

காதலியை இதயத்தில் வைத்தேன்
இதயமாக காதலியே மாறிவிட்டாள்
இப்போ என்னை தேடுகிறேன் ....!!!

புதன், 15 ஜனவரி, 2014

நிரந்தர துக்கத்தையும் தந்து விட்டாயே ....!!!

எனக்கு
தூக்கம் வந்தாலும்
துக்கம் வந்தாலும்
என்னருகே இருந்த
நீ -இப்போ
நிலையான
தூக்கத்தையும்
நிரந்தர துக்கத்தையும்
தந்து விட்டாயே ....!!!

நான் புறப்பட்டு விட்டேன் ...!!!

என் காதல் கவிதையில்
ஊரே காதலிக்குது
நீ ஏன்
காதலிக்கிறாய் இல்லை ...?

உன் காதல் மன்னனாக
இருக்க விடு -இல்லையேல்
உன் காதல் கண்ணாக
ஏற்றுக்கொள் .....!!!

எப்போது உன் கண்ணில்
கண்ணீர் வந்தததோ
அப்போதே உன்னை விட்டு
நான் புறப்பட்டு விட்டேன் ...!!!

கஸல் 625

நீ என் மீது வந்த அம்பு

எல்லா கவிதையும்
பேனாவால் எழுதுகிறேன்
உன் கவிதை மட்டும்
கண்ணீரால் எழுத
வைக்கிறாய் ....!!!

நீ எப்போதும் வலியாக
இரு அப்போதுதான்
உன்னை நினைத்த படி
இருப்பேன் ....!!!

நீ என் மீது வந்த
அம்பு குத்திக்கொண்டு
தான் இருப்பாய் ....!!!

கஸல் 624

சுக்கு நூறாகினேன்

உடைந்த வளையல் ஆகி
விட்டது நம் காதல்
சந்தேக நோயால் ....!!!

எல்லோருக்கும் இருள்
எனக்கு நீ கனவில் வரும்
ஒளி

உன் கண் உன் பார்வை
கடந்து பகைக்கிறது
சுக்கு நூறாகினேன்
காதலில் நான் ....!!!

கஸல் 623

காதலை காதலித்து

உன் எண்ணம் என்னை
மேயும் போது
கண்ணீர் வருகிறதே
என்ன செய்தாய் என்னை ...?

உன் புகைப்படங்கள்
என்னை பார்த்து
சிரிக்கின்றன -முட்டாளே
என்று கூறுவது போல் ...?

உன்னை காதலிக்காமல்
காதலை காதலித்து
இருக்கலாம் அதுவென்றாலும்
மீதியாக இருந்திருக்கும் ...!!!

கஸல் 622

வலிகள் அதிகரிப்பதால் ...!!!

உன்னை பற்றி கவிதை
எழுத்த வேண்டுமென்றால்
நீ கண்ணீரை எனக்கு
வரவழைக்க வேண்டும் ....!!!

உன்னை நினைக்கும் போது
இதய துடிப்பு ஏனோ
குறைந்து கொண்டு வருகிறது
வலிகள் அதிகரிப்பதால் ...!!!

உன் காதலில் உள்ளத்தில்
விழுந்து உடலால்
வெளியேறுகிறேன்
கண்ணீராய் .....!!!

கஸல் 621

ஒரு பானை பொங்கலில்..?

ஒரு பானை பொங்கலில் -எத்தனை
உறவுகள் பகிர்ந்தது கொண்டோம் ...
பொங்கியது பொங்கல் மட்டுமல்ல ..
மங்கியிருந்த உறவுகளும் பொங்கியது ..
இது எனக்கு பொங்கலோ பொங்கல்....!!!

பொங்கலில் நெய் ஊற்றினேன்
உருகாமல் இருந்த உறவுகளை உருகவைக்க ...
முந்திரிகை வற்றல் போட்டேன்
வற்றியிருந்த உறவை மீளப்பெற ....
சக்கரை போட்டேன் -எதற்கு ...?
சச்சரவுடன் உறவாடிய உறவுகளை
சந்தேகம் இன்றி சந்தோசமாக்க.....!!!

பொங்கிய
பொங்கலை பகிர்ந்ததை கேளீர் ....?
அயலவர்களுக்கு ஒரு பங்கு ...
தூரத்து ,கிட்டிய உறவுகளுக்கு ஒரு பங்கு ...
துயரவீட்டால் பொங்காமல் இருந்த
துயர வீட்டாருக்கு ஒரு பங்கு ....
முறை மாமனுக்கு ஒரு முறையான பங்கு ...

உலக தமிழார்
ஒன்றாக கொண்டாடும்
ஒரே விழா பொங்கல் -உலக உறவுகளை
வலுப்படுத்த பொங்கிய பொங்கல்
சந்தோசத்தை மின்னஞ்சல் மூலமும்
பொங்கல் வாழ்த்து மூலமும்
தொலை பேசிமூலமும் கொண்டாடிய
என் குடும்ப உறவுகளின் குதூகலத்தில்
கண்டேன் பொங்கலோ பொங்கல் ...!!!


வியாழன், 9 ஜனவரி, 2014

இதுவும் ஒரு சுகம் தான் ...!!!

ஓடுகின்ற நீரில்
ஒட்டி நின்று இரைதேடும்
மீன் குஞ்சுபோல் ...!!!
நீ வரும் பாதையை
ஒழுங்கை ஒன்றில்
ஒட்டி நின்று
ஓரக்கண்ணால்
பார்க்கிறேன் ....!!!
காதலில் இதுவும்
ஒரு சுகம் தான் ...!!!

நிலைத்திருக்கும் உண்மை நட்பு ....!!!

சாதி பார்க்கும்
தகுதி பார்க்கும்
மொழி பார்க்கும்
மதம் பார்க்கும்
பார்க்காமலும் காதல்
தோன்றும் -வென்றவர்கள்
எத்தனைபேர் ...?

கண்ட நொடியில்;
தோன்றுவது நட்பு
சிறு உதவியை பெரு
உதவியாக கருதும்
நட்பு ....!!!
காலத்தால் நிலைத்திருக்கும்
உண்மை நட்பு ....!!!

இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!!

யார் என்ன சொன்னாலும்
பிரியமாட்டேன் என்பது
நட்பு ...!!!

காதலில் பிரிந்தவர்கள்
இணைந்தாலும்
கசப்பு தான் ...!!!

நட்பில் மட்டும் தான்
பிரிந்தவர்கள்
மீண்டும் இணைவது
இரட்டிப்பு மகிழ்ச்சி ...!!!

கள்ள காதல் என்று
ஒரு சொற்பதம் உண்டு
கள்ள நட்பு என்று
சொல்வதுண்டோ ...?

நட்பு
என்றும் புனிதமானது
புனிதர்கள் மத்தியில் ....!!!

மூச்சு நீ என்பதால் ...!!!

நீ
எங்கே இருக்கிறாயோ
அங்கே நான் இருப்பேன்
என்
மூச்சு நீ என்பதால் ...!!!

உன்னை பற்றிய கவிதையே

தினம் தினம்
தெய்வ தரிசனம்
உன் தரிசனமே

தினம் தினம்
அர்ச்சனை உன்னை
பற்றிய கவிதையே 

காதலின் பின் திருமணம்

எனக்கு நீயும்
உனக்கு நானும்
என்று வாழ்த்தோம்
அது காதல் ....!!!

இப்போ

உனக்கு நீயும்
எனக்கு நானும்
என்று வாழ்கிறோம்
இது ...?
காதல் தோல்வி
காதலின் பின் திருமணம் 

கவிதையாக எழுதுகிறாய் நீ

என்னடா உளறுகிறாய்
என்கிறார் அம்மா
இவன் பிசத்துகிறான்
என்கிறாள் அக்கா
என் பேச்சையே
கவிதையாக
எழுதுகிறாய் நீ 

நீ வாடினால்

நீ மலரானால்
நான் வாசமாக இருப்பேன்
நீ வாடினால்
நான் எப்படி
இருக்க முடியும் ...!!!

சொல்லால் கடித்த கடி

நீ கண்ணால்  காட்டிய
வலியை விட
சொல்லால் கடித்த கடி
வடுவையே ஏற்படுத்தி
விட்டாயே ....!!!

வெறுக்க முடியவில்லை உன்னை ...?

உன்னை எனக்கு 
பிடிப்பதற்கு காரணம் இருந்தும்
உனக்கு என்னை 
பிடிக்காமல் போகிறது 
போகட்டும் விடு 
உன்னை 
வெறுப்பதற்கு காரணம் 
இருந்தும்
வெறுக்க முடியவில்லை 
உன்னை ...?

கண்ணீராய் வடிகிறாய் ...!!!

என் இதயத்தில் இருந்த நீ
இடம் மாறி விட்டாய்
இப்போ கண்ணில் இருந்து
கண்ணீராய் வடிகிறாய் ...!!!

ஊன் இன்றி இருந்தாலும்

ஊன் இன்றி இருந்தாலும்
உன் நினைவு இன்றி
இருக்க மாட்டேன்

சூரிய அஸ்தமனம் ....!!!

நீ
வரும் பாதைதான்
எனக்கு சூரிய உதயம்
நீ என்னை விட்டு
மறையும் தூரம்
தான்
சூரிய அஸ்தமனம் ....!!!

சக்தியோடு இருக்கிறேன் ....!!!

அன்பே
உன்னை சக்தியாக
பார்ப்பதால் தான்
தினமும்
உன்னை கண்டவுடன்
சக்தியோடு
இருக்கிறேன் ....!!!

புதன், 8 ஜனவரி, 2014

என் முதல் காதலில் ...!!!

பக்குவப்படாமல் இருந்த என் வார்த்தைகள்
பக்குவமானது -உன் முதல் பார்வையில்
என் முதல் காதலில் ...!!!

கண்ணுக்கு தெரியாத காதல்

கண்ணுக்கு தெரியாத காதல்
என்பதால் தானோ கண்ணீரை
என்னை விட்டு பிரிகிறாய் ....!!!

காதல் என்னும் நீரோடையில்

காதல் என்னும் நீரோடையில்
காகித கப்பலாய் தத்தளிக்கிறேன்
கரையாக வந்து கரைசேர்த்து விடு ...!!!

உயிரிலும் மேலான காதல் அது ...!!!

இதயம் வெந்து வெந்து துடித்தால்
இதயம் நொந்து நொந்து அழுதால்
உயிரிலும் மேலான காதல் அது ...!!!

காதல் சந்தன கட்டை

காதல் சந்தன கட்டை வெற்றியில்
காதல் கருங்கல்  உறுதியில்
காதல் முருங்கை சோத்தி தோல்வியில் ...!!!

காதல் ஒரு வழி

காதல் ஒரு வழி பாதைதான்
நினைக்க தெரியும் மறக்க தெரியாது 

காற்றிருந்தால் தான்

காற்றிருந்தால் தான் பட்டம் பறக்கும்
காதல் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும் 

காதலித்துப்பார் -நீயும்

காதலித்துப்பார் -நீயும்
என்னைப்போல் பிசத்துவாய் ....!!!

மாற்றியது -காதல்

இதயமாக இருந்த என்னை
இதய சோலையாக மாற்றியது -காதல்

- இரு வரி கவிதை -

உறைந்த பனியையே

உறைந்த பனியையே உருக வைக்கும்
உன் பார்வை முன் நான் என்ன மாத்திரம் ..?

எப்படி என்றாலும் உதை.....!!! (கஸல்)

காதலில் நினைவுகள்
ஆயிரம் -உன் நினைவுகள்
பல்லாயிரம் வலிகள் ...!!!

நினைக்க தெரிந்த
உனக்கு மறக்கவும்
கற்று விட்டாய்
இந்த பயிற்சியை
எங்கே கற்றாய் ...?

உனக்கு காதல்
உதைப்பந்தாட்டம்
எனக்கு பூ பந்து
எப்படி என்றாலும்
உதை................!!!

கஸல் 620

என்னை விலக சொல்லுகிறாய் ....!!! (கஸல்)

நீ வெந்நீராக இருந்தாலும்
தண்ணீராக இருந்தாலும்
என் காதல்
தாகம் தீரவில்லை ....!!!

காதலுக்கு இதயம்
தேவை - நீயும்
இதயம் வைத்திருக்கிறாய்
கருங் கல்லாக ....!!!

ஒற்றையடி பாதை
போல் நம் காதல்
என் எதிரே நீ வருகிறாய்
என்னை விலக
சொல்லுகிறாய் ....!!!

கஸல் 619

காதலில் ஒருநிமிடம்.. (கஸல்)

ஒன்றில் காதல்
வாழவேண்டும்
அல்லது சாக வேண்டும்
நம் காதல் இரண்டும்
கெட்ட நிலையில் ....!!!

எனக்காக செலவு செய்த
நிமிடத்தைவிட
உனக்காக செலவு செய்த
நிமிடம் அதிகம்
இப்பவும் நீ
இல்லாத போதும் ....!!!

காதலில் ஒருநிமிடம்
பிறப்பும் இறப்பும்
வருவதுபோல்
உன் வார்த்தையும்
இருக்கிறது .....!!!

கஸல் 618

உயிரையே கேட்கிறாயே ...!!! (கஸல்)

உயிராய் காதலித்தேன்
உயிரே என்று அழைத்தேன்
உயிரையே கேட்கிறாயே ...!!!

இருகை சேர்ந்தால் ஓசை
இரு இதயம்
சேர்ந்தால் காதல்
ஒருகை ஓசையாய் நீ ...!!!

இரவில் வந்தால்- நீ
உன்னை கனவில்
காண்பேன் நீயோ
இன்னும் இருளில்
இருக்கிறாய் .....!!!

கஸல் 617

உன்னை கண்டவுடன் ...!!! ( கஸல் )

சிப்பிக்குள் முத்தாய்
உன்னை நினைத்தேன்
வெறும் சிப்பியாக்கி
விட்டாய் .....!!!

மேகம் எப்போதும்
இருளாய் இருக்க
போவதில்லை
நீயும் வெளிச்சமாவாய் ....!!!

உன்னை கண்டவுடன்
காதல் வர வேண்டும்
கண்ணீர் வருகிறதே ....!!!

என் கஸல் தொடர் 616

நான் அழவும் தயார் ...!!!

இதயத்தில் இருந்து
இடைவிடாமல் நினைவை
தந்து என் கண்முழுவதும்
கண்ணீரை தந்தவளே
என்னை அழவைப்பதுதான்
ஆனந்தம் என்றால்
நான் அழவும் தயார் ...!!!

அம்பலமாக கூடாது ....!!!

நீ இருந்த இதய அறை
இப்பவும் காலியாக
தான் இருக்கிறது ....!!!
நான் தனியாக இருந்து
அழுகிறேன் -என்றாலும்
நான் யாரிடமும்
சொல்ல மாட்டேன்
அறைக்குள் நடப்பவை
அம்பலமாக கூடாது ....!!!

வெளியே சென்று விடு .....!!!

வெளியேர போகிறேன்
என்று சொல்லி விட்டு
இதய வாசலில்
என் இன்னும் நிற்கிறாய் ..?
உனக்கே புரிகிறது
நீ செய்த தவறு ...!!!
தயவு செய்து என்னை
சித்திரை வதை செய்யாதே
ஒன்றில் உள்ளே வா
அல்லது வெளியே
சென்று விடு .....!!!

நான் வரமாட்டேன்

இதய காதல் கதவை
நீ -திறக்க போகிறேன்
என்றே நிற்கிறாய்
திறந்து விட்டு போ ...!!!
நான் வரமாட்டேன்
நீ தந்த நினைவுகளோடு
வாழ்ந்து
கொண்டு இருப்பேன் ...!!!

அம்பலமாக கூடாது ....!!!

இரண்டு
இதய அறை கதவுகளால்
உருவானது காதல் ...!!!

காதல் அறைக்குள்
நடப்பவை நம் இதய
அறைக்குள் மட்டுமே
தெரிந்திருக்கணும் -அன்பே
அறைக்குள் நடப்பவை
அம்பலமாக கூடாது ....!!!

புதன், 1 ஜனவரி, 2014

சிரி நண்பா ...

எப்போதும் என்னோடு 
சிரி  நண்பா ...
ஒரு வேளை என் 
முன்னாள் 
நீ அழும் நாள் வந்தால் 
உன் கண்ணீரை நான் 
துடைக்க முடியாத 
நாளாக இருக்கும் ....!!!

உன் நட்பு மட்டுமே ..?

கை கொட்டி சிரிக்க
ஆயிரம் பேர் இருக்கலாம்
கை கோர்த்து திரிய
உன் நட்பு மட்டுமே
உண்டு தோழா ....!!!

யாரால் வாழமுடியும் ...?

கண் இல்லாமல் வாழமுடியும் ....
பேச்சில்லாமல் வாழமுடியும் ....
காதல்
இல்லாமலும் வாழமுடியும்...
நட்பில்லாமல்
யாரால் வாழமுடியும் ...?

எப்போதும் பிரகாசம் தான் ...!!!

சந்திரன் சூரிய ஒளியில்
தங்கியிருப்பது போல்
நண்பா ...!!!

சூரிய சந்திரராய்
நாம் இருக்கிறோம்
நண்பா ....!!!

மொத்தத்தில் உண்மை
நட்பு எப்போதும்
பிரகாசம் தான் ...!!!

நட்புதான் உயிருக்கு ...?

அனைத்து உறவும்
என்னை வெறுத்த
போதும் வெறுக்காமல்
ஒரு உறவு கைநீட்டியது
என் உயிர் நட்பு ...!!!

உறவுகள் உணர்வுக்கு
இடங்கொடுக்கும்
நட்புதான் உயிருக்கு
இடம் கொடுக்கும் ....!!!

உயிர் காதலன் ....!!!

என்னை நீ
எப்போதாயினும்
நினைத்தால்
காதலன் ....!!!

எப்போதுமே
என்னை நினைத்தால்
உயிர் காதலன் ....!!!

எப்படி ...? விடுமுறை ...?

சூரியனுக்கு இரவு
விடுமுறை
சந்திரனுக்கு பகல்
விடுமுறை
உன் நினைவுக்கு
ஏது விடுமுறை ..?

உன் நினைவு உயிர்
முழுதும் நிறைந்திருக்கும்
போது எப்படி ...?
விடுமுறை ...?

முடியும் என் உயிரே ...!!!

உன்னை
அன்பாக நேசிக்க
உன் உறவுகளால்
முடியும்
உன்னை உயிராக
நேசிக்க
உன்னை நேசிக்கும்
இன்னுமொரு
உயிரால் தான்
முடியும் என் உயிரே ...!!!

சுவாசம் இல்லை ....!!!

வாசத்தை பூ இழந்தால்
பூவுக்கு .....
சுவாசம் இல்லை ......
என்
நேசத்தை நீ இழந்தால் ....
என் உடலுக்கு
சுவாசம் இல்லை ....!!!

இதயம் வேண்டும் ...!!!

மரண நொடியில் கூட
உன்னை மறக்காத
நினைவலை வேண்டும் ...!!!

வாழுகின்ற நொடியில்
உன் நினைவிளைக்காத
உன்னை மறக்காத
இதயம் வேண்டும் ...!!!

இல்லை என்று அர்த்தம் ...!

நீ தனியே அழுகிறாய்
என்றால் யாராலையோ
துன்பப்படுத்தப்படுகிறய்
என்று அர்த்தம்...!

நீ சேர்ந்து அழுகிறாய்
என்றால் உன்னை
உன்னை துன்பப்படுதியவர்
இல்லை என்று அர்த்தம் ...!