இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 30 அக்டோபர், 2014

அது என் மூச்சு ....!!!

என் இதயத்தை ...
எங்கு என்றாலும் வீசி விடு ...
என் கவிதையை வீசி விடாதே ...!!!
கவிதை எனக்கு பேச்சு அல்ல
அது என் மூச்சு ....!!!

காதல்
கண்ணில் ஆரம்பிக்கும்....
அது மாயையாய் மாறலாம் ...
கவிதை உணர்வால் வரும் ...
என்றும் என்னோடு இணைந்து ...
கொண்டே இருக்கும் ...!!!

உதட்டால் வலிகளை

காதலில் 
உதட்டால் இன்பம்  தந்து ...
இதயத்தில் வலிதருவதே ...
வழமை ....!!!

நீ ஏனடி ...
இதயத்தில் இன்பம் தந்து 
உதட்டால் வலிகளை
தந்துகொண்டிருக்கிறாய் ...!!!

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் (பாகம் 22)

உன் பிரிவால் தவிக்கிறேன் ....!!!

என்னவனே ....
நீ என்னை பிரியும் போது ...
எண்ணை அற்று மங்கும் ..
விளக்கை போல் - நானும் ...
உன் பிரிவால் தவிக்கிறேன் ....!!!

ஒளி
இழந்தால் இருள் படரும்  ....
உன்னை பிரிந்த போது ....
என் உடலில் காதல் பசலை ...
(தேமல் ) படர்கிறது ....!!!

திருக்குறள் : 1186
+
பசப்புறுபருவரல்
+
விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 106

%%%%%

என்ன மாயம் பாருங்கள் ...?

என்னவனில் ...
அருகில் நெருங்கி இருந்தேன் ...
சற்று விலகியும் இருந்தேன் ...
என்ன மாயம் பாருங்கள் ...?

என் உடல் முழுதும் .....
என்னவன் என்னை அள்ளி ...
கொண்டதுபோல் படர்கிறது ...
பசலை (தேமல் ) நிறம் ....
காதல் செய்தால் நோய் ...
என்பது உண்மையோ ...?

திருக்குறள் : 1187
+
பசப்புறுபருவரல்
+
புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 107

%%%%%

இழிவு படுத்துகிறார்கள் ...


உன்னால் தானடா ....
எல்லாம் நடந்தது .....
என் உடல் முழுவதும் ...
காதல் நோய் படர்ந்து.....
விட்டது ...!!!

என்
உடலில் காதல் நோய் ...
பரவியிருப்பதை ஊரார் ...
இழிவு படுத்துகிறார்கள் ...
நீ பிரிந்து சென்றது தான் ...
காரணம் என்று கூற ...
மாட்டார்களாமே .....!!!

திருக்குறள் : 1188
+
பசப்புறுபருவரல்
+
பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 108

%%%%%

உண்மையில் நல்லவரே ...!!!

உன்னை பிரிவதற்கு ...
நான் தானே விடை தந்தேன் ....
என்னவனே நீ என்னை ...
சம்மதிக்க வைத்தாய் ...
நீ உண்மையில் நல்லவரே ...!!!

நீவீர் ...
நல்லவராக இருப்பதால் ..
என் மேனியில் காதல் ...
நோய் (பசலை) படர்கிறது ....
அதிலும் ஒரு சந்தோசம் ...
உன்னால்  தானே படர்கிறது ....!!!

திருக்குறள் : 1189
+
பசப்புறுபருவரல்
+
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 109

%%%%%

என்னவன் பிரிந்து சென்றான் ...

என்னை
சம்மதிக்க வைத்து ...
என்னவன் பிரிந்து சென்றான் ...
நிச்சயம் என்னவனை ....
ஊரார் புறக்கணிக்க மாட்டார்கள் ....
துற்றவும் மாட்டார்கள் ....!!!

என் உடலில் பரவும் ...
காதல் நோய் என்னவனை
நல்லவன் என்று கூற ..
உதவும் என்றால் -என்
உடலில் காதல் நோய் ...
பரவட்டும் .....!!!

திருக்குறள் : 1190
+
பசப்புறுபருவரல்
+
பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்

கவிதை எண் - 110

%%%%%

கதிர் வீச்சு கண்ணாடி நீ ...!!!

என் காதலை என்னிடம் ....
ஒப்படைத்த போதுதான் ...
புரிந்தது உனக்கு ....
காதலிக்க தெரியாது ......!!!

எல்லோருக்கும் கண்ணீர் ...
கவலையை தரும் ...
எனக்கு கவிதை தருகிறது ....!!!

என்னையே
உன்னில் பார்க்கும்.....
கதிர் வீச்சு கண்ணாடி 
நீ ...!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 740

உணர்ந்து கொண்டேன்...!!!

நிமிட கம்பி போல் ....
உன்னை தொடர்கிறேன் ...
நீ ஓடாத மணிக்கூடு ...
உணர்ந்து கொண்டேன்...!!!

என் இதயம் நீர் குமுழி ...
விரும்பிய நேரத்தில் ...
ஊதி உடைத்து விளையாடு ....!!!

நானும் ஏழைதான் ...
உன் முன்னால் காதல் ..
பிச்சை பாத்திரம் ஏந்தி ...
பலகாலம் நிற்கிறேன் ....!!!
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 739

தமிழ் இனம் எப்போதும் இறப்பதில்லை....!!!

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு
300 மேற்பட்ட  இந்திய வம்சாவளி தமிழர்கள் பலி!
--------------------------------------------------------
+
என் இனமே எமக்கு ...
எங்கு போனாலும் மரணம் ...!!!
இயற்கை அன்னைக்கும் ...
தமிழனின் உடலங்கள் ...
நன்றாக பிடித்திருக்குதோ .....?

மலையகத்தின் முதுகெழும்பு ...
தேயிலை -அது என் இனம் ...
முதுகை கூனி கூனி ......
உழைக்கும் வியர்வைக்கு ...
கிடைக்கும் வருமானம் ....!!!

தேயிலையின் திரவம் சிகப்பு ...
என் இனம் வியர்வையை ....
இரத்தமாய் உழைத்த உழைப்பு ...!
உழைப்புக்கு ஏற்ற கூலியில்லை ..
இரத்தத்துக்கு சமனான நிறத்தில் ...
தேயிலையின் நிறம் உண்டு ...!!!

இதுவரையும் வியர்வையை ....
கொடுத்த என் இனம் இப்போ ...
தன் உயிரையும் உடலையும் ....
உரமாய் கொடுத்துவிட்டதே  ...?
தமிழ் இனம் எப்போதும் ....
இறப்பதில்லை - அவர்கள் ..
ஏதோ ஒரு வடிவில் .....
விதைக்கவே படுகிறார்கள் ,,,,,!!!

புதன், 29 அக்டோபர், 2014

அடுக்கடுக்காய் உனக்காக உயிரே

அடுக்கடுக்காய் உனக்காக உயிரே

இளமையில் உன் அழகில் மயங்கி .... 
அருமையான வாழ்வை இழந்தேன் ..... 
திறமைகள் பல பல இருந்தும் ... 
வெறுமையாய் ஆகிவிட்டேன் ....!!! 

இனிமையான காதல் வாழ்வை ... 
மகிமையில்லாமல் ஆக்கி விட்டாய் .... 
பொறுமையோடு ஜோசித்திருந்தால் .... 
பசுமையாய் வாழ்ந்திருக்கலாம் ....!!! 
+ 
அடுக்கடுக்காய் உனக்காக உயிரே ....!!! 
கே இனியவன் கவிதைகள்

வியாழன், 23 அக்டோபர், 2014

நீ என்ன இதயமா ..?

நீ
என்ன இதயமா ..?
மூளையா ...?
இதயம் என்றால் ..
மறக்க மாட்டாய் ....!!!

உன்
வலிகளுக்கு பயந்து ...
மறதியின் இடத்தில்
வாழ்கிறேன் ....!!!

காதல்
தனித்துவமானது ...
அதில் நீயோ மகத்தவம் ...
உடனுக்குடன் வலி ..
தருகிறாய் ...!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 738


காதலால் வந்த வலிகள் ..

என்
ஒவ்வொரு வரியும் ...
காதலால் வந்த வலிகள் ..
உன் கையில் இருக்கிறது ...
இன்பம் ....!!!

காதல் ஒரு பிரபஞ்சம்
எல்லையில்லை ...
எப்படி உன்னை நான் ..
புரிவது ...?

காதலுக்கு பின்னால்
இத்தனை ஆபத்தா ...?
வா  நீந்துவோம் ...
ஆபத்து கடலில் ....!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 737

காதல் ரோஜாவை ...

காதல் ரோஜாவை ...
தந்தேன் -நீ காதல் ..
ரோஜா முள்ளை
வைத்திருக்கிறாய் ....!!!

உன் காதல் சிலந்தி ..
வலையில் சிக்கிய பூச்சி ..
நான் உன்னால் இறக்கவும் ..
முடிவு செய்துவிட்டேன் ...!!!

மயானத்தின் அருகே ...
இருக்கிறேன் -நீ சொல்லும்
பதிலுக்காக ....!!!
+
+
கஸல் கவிதை தொடர்
கவிதை எண் 736

எனது சொந்த தளங்கள்

எனது சொந்த தளங்கள்

www. kavithaithalam.com
http://iniyavankavithai.blogspot.com
http://iniyavan2013.blogspot.com
http://kasalkavithai.blogspot.com
http://thirukkuralkavithaikal.blogspot.com
https://www.facebook.com/KavinarKeIniyavan
https://www.facebook.com/pages

என் கவிதை உள்ள தளங்கள்

http://eluthu.com
http://www.chenaitamilulaa.net
http://www.thagaval.net
http://www.tamilthottam.in
http://www.thamilworld.com
http://tamilnanbargal.com
http://www.puthiyatamil.net
https://natpuvalayam.com
http://lankasripoems.com
http://tamilhindu.forumta.net
http://www.tamilhindu.net
http://vaarppu.com

புதன், 22 அக்டோபர், 2014

எதிரும் புதிரும் ....!!!

நம்
காதல் சூரியனும் ..
சந்திரனும் போல் ...
அழகாகவும்
பிரகாசமாகவும்  இருக்கு ...!!!

என்ன காரணமோ ...?
இணைகிறோம் இல்லை ...
பார்ப்பவர்களுக்கு நாம்
காதலர் - காதலுக்கு நாம் ..
எதிரும் புதிரும் ....!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்

காற்றை நேசிக்கிறேன் ...

காற்றை நேசிக்கிறேன் ...
நீ மூச்சாய் வருவாய் ...
என்பதற்காக ....!!!

கடலை நேசிக்கிறேன் ....
நீ கண்ணீராய் வருவாய் ...
என்பதற்காக .....!!!

என்னை நான் மறக்கிறேன் ..
நீ என்னை விரும்புவாய் ..
என்பதற்காக .....!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்

உன்னிடம் தேடுகிறேன் ...!!!

பயப்பிடாதே .....
நீ தெரியாமல் என்னை ..
காதலித்துவிட்டாய்...
நான் உன்னை தொந்தரவு ..
செய்ய மாட்டேன் ...!!!

உன்னால் இழந்த என் ..
நிம்மதியை தேடுகிறேன் ...
கிடைக்க வாய்ப்பில்லை ..
என்றாலும் சின்ன ஆசையில் ...
உன்னிடம்  தேடுகிறேன் ...!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்

நீயும் .. நியமாவாய் ....!!!

என்னில் நியமாக இருந்த ..
காதலை உன்னிடம் தந்து ..
விட்டேன் - நீ இன்னும் ..
தரவில்லை ....!!!

நானும்
ஒருவகை ஏமாளிதான் ...
நிஜத்தை உன்னிடம் தந்து ..
நிழலில் வாழுகிறேன் ...
காத்திருக்கிறேன்  நீயும் ..
நியமாவாய் ....!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்

இதயம் தொடும் கவிதை

இல்லை உன் காதலை ..
நான் ஏற்க மாட்டேன் ...
நீ இன்னும் மனத்தால் ..
காதலிக்க வில்லை ....!!!

உனக்காக காத்திருப்பேன் ...
உனக்காகவே வாழுவேன் ...
உனக்காகவே இறப்பேன்....
உதட்டால் காதலிக்காதே ...
உயிரால் காதல் செய் உயிரே ....!!!
+
இதயம் தொடும் கவிதை
கே இனியவன்

அவர் பிரிந்து செல்லும் நொடியில் ...!!!

அவர் பிரிந்து செல்லும் நொடியில் ...!!!

ஒரு
நொடிகூட பிரியவில்லை ...
சிறு தூரம் கூட அவர்...
செல்ல வில்லை .....!!!

எப்படி என் உடலில் ...
காதல் நோய் அதற்குள் ..
தொற்றியது ....?
அவர் பிரிந்து செல்லும் ..
நொடியில் காதல் பசலை
நிறமும் என்னில் படர்கிறதே
என்ன மாயம் இது ...?

திருக்குறள் : 1185
+
பசப்புறுபருவரல்
+
உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 105

காதல் ஒருவகை பரிமாற்றம் ...

காதல் ஒருவகை பரிமாற்றம் ...

என்னவன் ..
காதல் நோயையும் .....
உள்ளதுன்பத்தையும்...
எனக்கு கைமாறாய் தந்து ....!!!

என் அழகையும் ...
காதல் வெட்கத்தையும் ...
கொண்டு சென்று விட்டான் ...
காதல் ஒருவகை பரிமாற்றம் ...
தான் போல் இருக்கிறதே ...!!!

திருக்குறள் : 1183
+
பசப்புறுபருவரல்
+
சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
கவிதை எண் - 103

பிரிவு கொடுமையானதே ...

பிரிவு கொடுமையானதே ...

என்னவனின் பிரிவு ..
கொடுமையானதே ...
அதனால் வந்த பசப்பும் ...
கொடுமையானதே ....!!!

என்னவன் ....
தந்த பிரிவின் வலியை...
என் உடல் முழுதும் 
படர்கிறது - நினைத்தால்
சுமைகூட சுகம் தான் ...!!!

திருக்குறள் : 1182
+
பசப்புறுபருவரல்
+
அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென் 
மேனிமேல் ஊரும் பசப்பு.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
கவிதை எண் - 102

செவ்வாய், 21 அக்டோபர், 2014

யாரிடம் சொல்லி கதறுவேன் ...?

யாரிடம் சொல்லி கதறுவேன் ...?


என்னவனே ....
நீ என்னை விட்டு பிரிய ..
விடைகொடுத்தது நானே ...
அன்று தெரியவில்லை ..
இதனை துன்பத்தை ....!!!

இப்போ நான் படும் ...
துன்பத்தை -என் உடல் ...
படும் வேதனையை யாரிடம் ...
யாரிடம் சொல்லி கதறுவேன் ...?

திருக்குறள் : 1181
+
பசப்புறுபருவரல்
+
நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென் 
பண்பியார்க்கு உரைக்கோ பிற.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
கவிதை எண் - 101

மன்னிப்பு கேட்கிறாய் ...!!!

கூட்டத்தோடு போகின்றாய்   ...
என்னை திரும்பி பார்க்காமல் ..
போகின்றாய்....!!!

அருகில் உன் உறவினர் ...
துடித்து கொண்டு  போகின்றாய்...
நான் கோபத்தில் இருப்பேனோ ...
என்று தனியே வந்து மன்னிப்பு ..
கேட்கிறாய் ...!!!
நான் சிரித்துக்கொண்டே உன்னை 
பார்க்கிறேன்...!!!
காரணம் ......
நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!

நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!

வீட்டார் எல்லோரும் சுற்றுலா 
செல்கிறார்கள் - உனக்கும் ...
அது நன்றாக பிடிக்கும் ...!!!

வேண்டுமென்றே 
பிடிக்காததுபோல் - நான் ...
வரவில்லை என்று மறுக்கிறாய் ...
படிக்க வேண்டும் என்று நடிக்கிறாய் ...
என்னை விட்டு ஒரு நொடி 
இருக்க மாட்டாய் .... !!!
காரணம் ......
நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!

நீ எதை செய்தாலும் அது காதல்

மற்றவர்களுக்கு கற்கண்டை ...
கொடுத்து விட்டு -எனக்கு 
வேண்டுமென்றே உப்பை ...
தந்தாய்......!!!

நான் துப்பவில்லை ....
வியந்து நின்றாய் .....
நான் சிரித்து நின்றேன் ...
நீ எதை தந்தாலும் இனிக்கும் ...
காரணம் ......
நீ எதை செய்தாலும் அது காதல் ...!!!

திங்கள், 20 அக்டோபர், 2014

உன் நினைவுகளால் ...!!!

சற்று கண் உறங்குவோம்
என்று கண் மூடினால் ...
ஓடிவந்து குழந்தைபோல் ..
கண் மடலை திறக்கிறாய் ...
உன் நினைவுகளால் ...!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

என்ன புரியவில்லையா ...?

கவிதை எழுதும் போது ..
உன் நினைவுகள் வருவதில்லை ...
உன் நினைவுகள் வரும் போது ..
கவிதை வருவதில்லை ...
என்ன புரியவில்லையா ...?
ஆழ மனதில் வைத்து
ஜோசித்து பார் ......!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

அதனிலும் கொடியது ..

பேசுவதன் கொடுமையை ...
நீ பேசாமல் இருக்கும் ...
ஒவ்வொரு நொடியும் ..
உணர்கிறேன் ...!!!
மௌனம் கொடியது ...
அதனிலும் கொடியது ..
பேசிவிட்டு பேசாமல்
இருப்பது .....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

நான் தொலைந்தது ..

நான் தொலைந்தது ..
உன்னிடம் தான் ...
உன் தொல்லையால் ...
தொலையப்போவதும் ...
உன்னால் தான் ...
காதல் தொலைந்து ..
தொலைத்து நடக்கும் ...
திருவிளையாடல் ....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

உன்னை நேசிப்பதற்காக ....

உன்னை நேசித்த நொடியில் ....
இருந்து ஒன்றையே இன்றும்
ஜோசிக்கிறேன் ....!!!
உன்னை நேசிப்பதற்காக ....
என்னை நான் நேசிக்காமல் ..
விட்டதேன் ...?
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

எல்லாம் காதல் தான் ...!!!

என்
ஜனனம் தாயின் ...
மடியில் .....
என்
மரணம் உன் ...
மடியில் ....
பிறப்பும் பெண்ணால் ....
இறப்பும் பெண்ணால்...
எல்லாம் காதல் தான் ...!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

நீயே வேதனை படுவாய் ....!!!

நீ என்னை தூக்கி எறிந்து ....
விட்டாய்- உனக்கு ...
நான் குப்பையானேன் ...!!!
என் காதல் குப்பையில் ...
தோன்றிய குண்டுமணி ...
நிச்சயம் நீ உணர்வாய் ...
நீயே வேதனை படுவாய் ....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

உன் பார்வையில் புரிந்து ...

கல் எறி பட்டாலும் ...
கண் ஏறி படக்கூடாது ..
சும்மா சொல்லவில்லை ...
உன் பார்வையில் புரிந்து ...
கொண்டேன் - அதன்
உண்மையை .....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

கே இனியவனின் சின்ன கிறுக்கல்

பிரிவுக்கு பின் ....
பிரியமானவர்கள் சந்திப்பது ...
பிண அறையில் இருக்கும் ...
சடலங்கள் போல் ....!!!
பேசவும் முடியாது ...
பார்க்கவும் முடியாது ....!!!
+
கே இனியவனின்
சின்ன கிறுக்கல்

நீ தந்த வலியின் வலி

நீ தூரத்தில் வரும்
போதெல்லாம் துள்ளி ...
குதித்த இதயம் -இப்போ
நீ அருகில் வரும் போதே ..
என்னை கிள்ளுது அவளை ...
பார்க்காதே என்று ....!!!

வலியை தாங்கிய ...
இதயத்துக்கு தானே ...
நீ தந்த வலியின்  வலி 
தெரியும்  ......!!!
+
+
கே இனியவன்
வலிக்கும் இதயத்தின் கவிதை

வலிக்கும் இதயத்தின் கவிதை

சனி, 18 அக்டோபர், 2014

ஈழப்பேச்சு தமிழில் கவிதை

கண்டபடி
கதைக்காதையுங்க ...
எனக்கு பின்னால் சுத்தாதீங்க ...
ஊரார் கண்டால் போச்சுது ...
என் வாழ்க்கை .....!!!

மானம் மரியாதையுடன் ...
வாழும் என் குடும்பத்தை ...
சந்தி சிரிக்க வைத்திடாதையுங்க....!!!

உங்கட மனசுக்குள்ள நானும் ....
என்ர மனசுக்குள்ள நீங்களும்  ....
புருஷன் பெண்சாதிபோல் ...
வாழும் நாங்க நிச்சயமாக ...
சேருவோம் கலியாணத்தில் ...!!!

என்னவனே ......
கோவிச்சிடாதே கவலைபடாதே
கொஞ்சம் பொறுத்திரு ..
கிட்டிய தூரத்தில் இருக்குது ...
நம்ம வாழ்க்கை ....!!!
+
+
கே இனியவன்
யாழ்ப்பாண பேச்சு தமிழ் கவிதை

வியாழன், 16 அக்டோபர், 2014

கொடியது அவளின் சிரிப்பு ...!!!

அவள் சிரிப்பாள் தானே ...
நான் சின்னாபின்னமாகினேன் ...
அவள் வாய்க்குள் ஒரு சின்ன ..
சிரிப்பை சித்தாள் ....!!!

நான்
இப்போ சிரிப்பையே ..
தொலைத்து விட்டேன் ...
கொடிய விஷத்தை விட ..
கொடியது அவளின் சிரிப்பு ...!!!

சிரித்ததால் தான் ...

சிரிப்பு
ஒருவனை சிந்திக்கவும் ...
சீற்றமடையவும் வைக்கும் ...
இடம் பார்த்து சிரி...
அறிவோடு சிரி ....!!!

கூனியை பார்த்து ராமன்
சிரித்ததால் தான் ...
இராமாயணத்தில் துன்பத்தை ..
அனுபவித்தார் ராமன் ....!!!

சிரிப்பு

சிரிப்பு
மனித இனத்துக்கு ..
இறைவன் கொடுத்த அற்புத ...
அமிர்தம் ....!!!

தூய்மையான உள்ளத்தில் ..
தோன்றும் உன்னத உணர்வு ...
சிரித்தால் சந்தோசம் மட்டுமல்ல ...
சிந்தனை ஆற்றலும் பெருகும் ...
ஒரு முறை சிரிக்க ...
பலமுறை சிந்தி .....!!!

இறந்தேன் அந்த நொடியில் நான் ....!!!

பார்த்தேன் உன்னை கூட்டத்தில் ...
மறந்தேன் நான் இருந்த இடத்தை ...
பறந்தேன் மனசிறகுடன் வானில் ...
இறந்தேன் அந்த நொடியில் நான் ....!!!

அலைந்தேன் உன் பதிலுக்காய் ...
தொலைத்தேன் என் வாழ்க்கையை ....
புரிந்தேன் உன் காதலின் ஆழத்தை ...
எடுத்தேன் உன்னை துணையாய் ...!!!

சித்திரை மாத சின்னவளே ...!!!

நித்திரையை தொலைக்க செய்த ....
சித்திரை மாத சின்னவளே ...
பத்தரை மாத தங்கம் என்றாய் ...
பத்தரை மணிக்குமேல் ....
சித்திரைவதை செய்யத்தானோ ...?

முத்திரை பதிப்பேன் காதலில் ...
முகத்திரை மனதில் இருப்பதால் ...
நித்திரை தொலைந்தால் என்ன ...?
சித்திரை மாதம்  வரை ...
பத்திரமாய் இருந்துவிடுமனதில் ...
சித்திரை மாத சின்னவளே ...!!!

சொல்லி விட்டேன் ....!!!

மறந்து போன  விடயம் 
ஒன்றை ஞாபக படுத்தி 
சொல் என்றான் நண்பன் ....!!!

ஒரு நொடியில் நீ 
பிரிந்து போன தினத்தை ..
மறந்து 
போய் சொல்லி விட்டேன் ....!!!
+
+
கலப்பு காதல் கவிதை
கே இனியவன்

இளமையாய் இருக்கிறது ...!!!

வருடங்கள் போகின்றன ..
வயதும் போகிறது...
இளமை பறக்கிறது ....!!!

நீ தந்த காதலும் ...
சுகங்களும் என்றும் ..
மார்க்கண்டேயர் போல் ...
இளமையாய் இருக்கிறது ...!!!
+
+
கலப்பு காதல் கவிதை
கே இனியவன்

நீ பிரிந்து .. சென்றாயோ ..?

பிறக்கும் போது வலியை
தாய் ஏற்றார் ....
இறக்கும் போது வலியை 
சுற்றத்தார் ஏற்பர் ....!!!

வாழும் போது வலியை 
நான் ஏற்க வேண்டும்..
அதுதான் நீ பிரிந்து ..
சென்றாயோ ..?
+
+
கலப்பு காதல் கவிதை 
கே இனியவன்

காதலை இதயத்தோடு ...

எப்போதும் பத்திரமாக 
இதயத்தில்  இருக்கத்தான் .. 
காதலை இதயத்தோடு ...
ஒப்பிடுகிறோம் ....!!!

இதயம் நின்றால் உயிர் 
போவதுபோல் ...
காதல் இறந்தாலும் ...
உயிரற்ற உடல்தான் ...
வாழ்ந்துகொண்டிருக்கும் ...!!!
+
+
கலப்பு கவிதை
கே இனியவன்