இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 26 மார்ச், 2015

என் காதல் பூக்கள்

உன்
ஒவ்வொரு அசைவுக்கும் ..
ஒரு கவிதை எழுதும் நான் ...
உன் ஒவ்வொரு சொல்லுக்கும் ...
ஓராயிரம் கவிதை எழுதாமல் ...
விடுவேனா ...?

எனக்கு கவிதை ...
வரவேண்டும் மழைபோல் ...
நீ தினமும் என்னோடு ...
பேசவேண்டும் ...
சிறு அலைபோல் ....!!!

+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 05

காதல் அர்சனையால் ....!!!

காலை எழுந்து படி ...
காலை எழுந்து ஓடு ...
இதெல்லாம் செய்தேன் ...
அம்மாவின் அர்சனையால் ....!!!

எல்லா நேரமும் ....
உன்னையே நினைக்கிறேன்...
உன்னை பற்றியே பேசுகிறேன் ...
எல்லா இடத்தில் உன்னையே ...
பார்கிறேன் ...
காதல் அர்சனையால் ....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 04

நீ தானே உயிரே நான் ...!!!

உன்
அனுமதி இல்லாமல் ...
இதயத்தை திருடினேன் ...
காதல் சட்டத்தின் படி ...
தினமும் நினைவால் ...
தண்டிக்கிறாய் ....!!!

கோபமாய் ...
இருகிறீர்களா என்று ...
அடிக்கடி கேட்கிறாயே ...
என்னை நானே கோபித்து ...
என்ன பயன் ...?
நீ தானே உயிரே நான் ...!!!

+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 03

அர்சனை செய்கிறேன் ....!!!

என்
இதயம் மற்றவர்களின் ...
இதய வடிவமல்ல ....
என் இதயமே உன் ...
முக வடிவம் உயிரே ....!!!

அதனால் தான் ...
உன்னை உயிராக....
இதயமாக வைத்து ...
காதல் நினைவால் ...
அர்சனை செய்கிறேன் ....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 02

என்னவளே என் காதல் பூக்கள்

இனியவளே ....
உன்னை நினைக்காவிட்டால் ...
இதயம் இருந்து பயனில்லை ...
உன்னை பார்க்கா விட்டால் ...
கண் இருந்தும் பயனில்லை ....
நீ என்னவள் என்று தான் ...
அனைத்தையும் இழந்து ...
வருகிறேன் .....!!!
+
என்னவளே என் காதல் பூக்கள்
கவிதை பூ - 01

என் காதல் சாம்பலானது ...!!!

என்
காதல் கனவானது
நான் கவிஞனானேன் ...!!!

ஒரு சின்ன தீ பொறி
இடத்தையே சாம்பலாக்கிடும்...
உன் கண் பட்டு என் காதல்
சாம்பலானது ...!!!

நானும்
ஒரு பிச்சைக்காரன்
உன் பதிலை எதிர் பார்த்து ...
பட்டினியுடன் இருக்கிறேன் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;785

வர மறுக்கிறாய் ....!!!

எல்லோரும்
காதல் செய்து தூர ...
விலகுவர் - நானும் ..
நீயும் தூர இருந்தும் ..
அருகில் காதலிக்கிறோம் ...!!!

கண்ணீரை ...
கடலாக்கி காதல் கப்பல் ...
விடுகிறேன் - நீயோ ..
வர மறுக்கிறாய் ....!!!

எத்தனை கவிதை ...
எழுதினாலும் -நிகரில்லை ...
உன் மௌன மொழிக்கு ...

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;784

இறுதி நொடியில் துடிக்கிறது ...!!!

உன் நினைவுகளின் ...
வலையில் சிக்கி தவிக்கிறேன் ...
வலையை அறுத்து என்னை ...
மீட்டு விடு ....!!!

தயவு செய்து காதல் ...
தந்துவிடு - இல்லையேல்
என் இதயத்தை எட்டி பார் ...
இறுதி நொடியில் துடிக்கிறது ...!!!

என் மனதை பார் ...
நீ கனவில் தான் வந்தாய் ...
நியமென்று பூரிக்கிறது ...
அதற்கு எங்கே புரியபோகிறது ...
என் காதலும் கனவுதான் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;783

வலியிலும் இன்பம் தான் ...!!!

உன்னை நினைப்பதும் ...
முள் பற்றைமேல் ...
தூங்குவதும் ஒன்றுதான் ...
வலியிலும் இன்பம் தான் ...!!!

பட்டாம் பூச்சி ...
அழகை பார்ப்பதில்லை ...
இனிமையை தான் ரசிகிறது ...
நீ எதற்கு அழகை ரசிகிராய் ...?

வா அன்பே ...
நாம் இருவரும் காதல் ...
உலகம் படைப்போம் ...
விண்ணுலகில் இடம் ...
நிறைய இடம் உண்டு ....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;782

கல்லறையில் காத்திருக்கிறேன்

உனக்கு
என்ன தைரியம் ...
நான் காதலிக்கிறேன் ...
நீயோ எனக்கு பெண் ...
பார்கிறாய் .....!!!

என் இதயத்தில் ...
இருந்து கொண்டே...
எனக்கு வலிதருகிறாய் ...

நீ என்னை ஏற்கும் ...
நாள் விரைவில் வரும் ...
கல்லறையில் காத்திருக்கிறேன்
காதல் பூ மலரும்
நீ சமர்பிப்பாய் .....!!!

+
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை ;781

வியாழன், 19 மார்ச், 2015

காதலை நிறுத்து ...!!!

உன் 
இதயத்தில் 
நான் 
என்னை கொல்ல
காதலை நிறுத்து ...!!!

நீ கடந்து 
வந்த பாதை 
கவிதையானது 

காதலில் 
இணைந்த பெற்றோர்
காதலை வெறுக்கிறார்கள் 
காதல் சிரிகிறது ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;780

கற்று விட்டது இதயம் ....!!!

காதலின் 
இதயக்கதவை 
மூடும் சாவி 
நீ 

நீ 
சொல்ல வேண்டாம் 
முகம் சொல்லுகிறது 
இதயம் புரிந்து விட்டது ...!!!

நீ வந்த போதும் 
சென்ற போதும் 
வலிக்காமல் இருக்க 
கற்று விட்டது இதயம் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;779

நல்ல தண்டனை ....!!!

தனிமையை தவிர்க்க 
உன்னிடம் 
காதலுக்காய் ஏங்கினேன் ...?

நீ 
வந்த பாதையால் .
நான் வரமாட்டேன் 
பாதையை மறைத்து 
விட்டாய் .....!!!

உன் காதல் பிரிவு 
இதயத்துக்கு ஏமாற்றம் 
மனதுக்கு நல்ல போதனை 
எனக்கு நல்ல தண்டனை ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;778

காதல் நன்றி ....!!!

நீ 
எப்படி எல்லாம் என்னை 
காதலிக்கிறாய் ...?
இதயத்துக்கு தெரியாது ...!!!

காதலாக இருப்பது 
கால இன்பம் இல்லை 
கருங்கல்லை கூட காதல் 
உடைக்கும் 

உன் 
பிரிவு உன்னிலிருந்து 
என்னை மீட்டு தந்துள்ளது 
காதல் நன்றி ....!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;777

பயப்பிடுகிறது இதயம் ...!!!

இதயத்தை நானே 
வெட்கப்படுகிறேன்
என்னை தூக்கி எறிந்து 
உன்னை 
வைத்திருப்பதற்காக ....

உனக்காகவே வாழ்கிறேன் 
எனக்காக 
நீ எப்போது வாழ்வாய் ...?

கடிகாரத்தைப்போல் 
நம் காதல் 
எப்போது நிற்பாய் ..?
பயப்பிடுகிறது இதயம் ...!!!

+
கவிப்புயல் இனியவன் 
கஸல் கவிதை ;776

வியாழன், 5 மார்ச், 2015

குறுஞ்செய்திக்கு கவிதை

உயிருடன் இறந்து விட்டேன்
ஒரு நொடி கண் சிமிட்டல் ...!!!

sms கவிதை

///////

சின்ன சின்ன வலி வார்த்தைகள்
பழகிவிட்டேன் வலியை தாங்க

sms கவிதை

காதலை மதிக்காதவர்கள்

காதலுக்காக
கையை கிழிப்பது ....
சூடு வைப்பது
காதலை மதிக்காதவர்கள்
செய்யும் முட்டாள் தனம் ...!!!

காதல்
ஆத்மாவின் வெளிப்பாடு ....
அது உடலை விரும்பாது ...
உடலை வருத்தாது ....
காதலை உணர்வால் உணர்ந்தால்
காதலோடு வாழலாம் ...!!!
+
அறிவுரை காதல் கவிதைகள்
கே இனியவன்

பருவம் வந்தால் காதல் ..

பருவம் வந்தால் காதல் ..
வரவேண்டும் என்ற கட்டாயம் ...
எதுவும் இல்லை ....
பருவம் தவறி காதல் செய்வதும் ...
காதல் இல்லை ....!!!

அந்த அந்த பருவத்தில் ...
தன் கடமையை தவறியவன் ...
காலத்தின் குற்றவாளி ...
காதலுக்காக உன் கடமையை ...
துறந்து விடாதே ....!!!

+
அறிவுரை காதல் கவிதைகள்
கே இனியவன்

அடம்பிடித்து காதல் செய்யாதே ...!!!

நிறைவேறாது
என்று தெரிந்தால் ...
காதல் செய்யாதே ...
நிறைவேற்றியே தீருவேன் ...
என்று -அடம்பிடித்து
காதல் செய்யாதே ...!!!

காதல் புனிதமானது ...
உன் உள்ளுணர்வு
உடன் பட்டால் மட்டும்
காதல் செய் ...!!!

+
அறிவுரை காதல் கவிதைகள்
கே இனியவன்

ஆசீர் வாத காதலே அழகு ....!!!

காதல் இனித்தது ...
காதலியும் இனித்தால் ...
கலியாணமும் இனித்தது ...
வாழ்க்கை ஏன் கசக்கிறது ...?

காதலுக்கும் ஆசீர் வாதம் ...
திருமணதுக்குபோல் வேண்டும் ....
காதலில் முரண்பாடுகள் ...
வாழ்க்கையை முரண் படுத்தும் ...
ஆசீர் வாத காதலே அழகு ....!!!

+
அறிவுரை காதல் கவிதை
கே இனியவன்

அறிவுரை காதல் கவிதைகள்

உறவுகளை வெறுத்து ....
உடன் பிறப்புகளை வெறுத்து ....
உற்றாரை வெறுத்து ....
உன்னதமான காதல்
உண்மையில் இல்லவே இல்லை ...!!!

உணர்வுகளுக்கு மட்டும் ...
உரிமை கொடுத்து - உன்
காதலை செய்யாதே ....
காதலுக்கு கண் இல்லை ...
அதன் பின் வாழ்கை உண்டு .....!!!
+
அறிவுரை காதல் கவிதைகள்
கே இனியவன்

புதன், 4 மார்ச், 2015

எப்படி திருடினாய் ...?

பகல் கொள்ளை என்பது ...
சரிதான் - இத்தனை ...
கவனமாக இருந்த என் ...
இதயத்தை பட்ட பகலில் ...
எப்படி திருடினாய் ...?

உன் கன்ன குழியில்
விழுந்து சின்னா பின்னமாகி ...
பித்தம் பிடித்து அலைகிறேன் ...
மீண்டும் உன்னை எப்போது ...
சந்திப்பேன் ...?

+
இதயம் வலிக்கும் கவிதை
கே இனியவன்

நீ என் காதலாக வேண்டும் ...!!!

இந்த
ஜென்மத்தில் எனக்கு
காதல் வேண்டாம் ....!!!
போதும் நீ தந்த வலியும்...
பிரிவும் ....!!!

வேண்டும் எனக்கு காதல்
மறு ஜென்மம் இருந்தால் ...
நீ என் காதலாக இருந்தால் ...
நீ வலியை தந்தாலும் ....
நீ என் காதலாக வேண்டும் ...!!!

+
இதயம் வலிக்கும் கவிதை

எல்லை இல்லை அன்பே ....!!!

ஊற்று எடுக்கும் கிணற்றுக்கு ...
எப்படி ஊற்று நிற்காதோ ...
உன் நினைவுகளின் ஊற்றுக்கும் ...
எல்லை இல்லை அன்பே ....!!!

என்னை 
நீ எப்போது நினைகிறாய் ...?
என்று கேட்காதே - என்னை 
கொல்லும் சொல்லாக இருக்கும் ...
உன்னை ( என்னை) நினைகிறாயா ..?
என்று கேள் -என்னை நினைத்து ..
பலநாட்கள் ஆகிவிட்டது ....!!!

+
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கே இனியவன்

நானும் நீயும் நினைத்து ...

நானும் நீயும் நினைத்து ...
----------------------------------

எம்மை சேராமல் ...
எம்மை நினைக்காமல் ..
பிரிந்து சென்ற என்னவன்
எப்படி இருக்கிறானோ ..?

எம்மை
நினைக்காத அவரை
நானும் நீயும் நினைத்து ...
உடல் மெலிந்து உளமும்
மேலியப்போகிறது...!!!

குறள் 1250
+
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின்.
+
நெஞ்சொடுகிளத்தல்
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 170

அலையாதே மனசே ...

அலையாதே மனசே ...
---------------------------

ஏய் மனசே ...!!!
என்னவன் என் மனதில் ..
குடிகொண்டு வதைக்கிறான் ..
நீ எங்கே அவனை தேடுகிறாய் ...?

அலையாதே மனசே ...
என்னவன் வெளியில் இல்லை 
வந்து பார் என்னுள்ளே தான் 
இருக்கிறான் ....!!!

குறள் 1249
+
உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ 
யாருழைச் சேறியென் நெஞ்சு.

+
நெஞ்சொடுகிளத்தல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 169

நீ என்ன அறிவில்லாதநீயா ..?

நீ என்ன அறிவில்லாதநீயா ..?
--------------------------------------

என் மனசே ....
உன்னையும் என்னையும் ...
என்னவன் மறந்துவிட்டான் ..
நம்மை பிரிந்து சென்று ...
விட்டான் .....!!!

எதற்காக மனசே ...
அவர்பின்னால் செல்கிறாய் ...
நீ என்ன அறிவில்லாதநீயா ..?
என் மனது அறிவற்ற பேதை 
தான் போலிருக்கிறது ...!!!

குறள் 1248
+
பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் 
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு.

+
நெஞ்சொடுகிளத்தல் 
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 
+
கவிதை எண் - 168