இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 22 ஜூன், 2017

காதல் அணுக்கவிதைகள் - 02

உன்னை
மறக்க மறதியின் ...
உச்ச இடத்துக்கு செல்கிறேன் ....
தயவு செய்து அந்த இடத்தை ....
நீ தான் காட்டி விடு ....!

------

உன்
நினைவுகளின் ....
தருகைக்காக ....
நீர்க்குமிழிகளை ....
பரிசாய் தருகிறேன் ....!

------

கடித்து
துப்பிய நகம் நான் ....
சந்தோஷ படாதே ....
மீண்டும் வளர்வேன் ....!

------

உலகம் ஒரு வட்டம் ....
நீ பிரிந்து சென்றாலும் ...
என்னிடம் வருவாய் ....!

-----

உன் இதய சாவியை ...
தந்துவிடு -இனியும் ...
என்னால் தாங்க முடியாது ....!

-----

காதல் அணுக்கவிதைகள் - 02
கவிப்புயல் இனியவன்

புதன், 21 ஜூன், 2017

ஆன்மீக கவிதை

ஆன்மீகம்- காதல் -கவிதைகள்
---------------------------------------------

இறைவா......
உன் நினைவோடு தூங்கி.....
உன் நினைவோடு எழும்.....
அற்புத சக்தியை தா........!

உன்னை நினைக்காத.....
நொடிப்பொழுதெல்லாம்.....
என் உடலை முள்ளினால்......
குத்தும் உணர்வை தா......!

^^^
கவிப்புயல் இனியவன்
ஆன்மீக கவிதை
^^^

உன் நினைவோடு......
தூங்குவதை காட்டிலும்.....
முள்பற்றைமேல் தூங்குவது.....
எவ்வளவோ மேல்.........!

தீயால்
சூடுபட்டிருகிறேன்.....
வேதனை பட்டிருக்கிறேன்........
அத்தனையும் பெரிதல்ல.....
உன் பிரிவால் தினமும்....
கருகிக்கொண்டிருக்கிறேன்.....
தாங்கமுடியா வலியுடனும்.....
மாறா தழும்புடனும்.......!

^^^
கவிப்புயல் இனியவன்
காதல் கவிதை
^^^

காதல் அணுக்கவிதைகள்

உன் ........
பார்வைக்கு அஞ்சி ...
நீ அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...!

------

உன்னை நான் நேரில் ...
ரசிப்பதை விட கவிதையில் ...
ரசிப்பதே அழகாய் இருகிறாய் ...!

------

ஒவ்வொருவனுக்கும் ...
அவனவன் காதல் தான் ...
ஆயுள் பாசக்கயிறு .....!

------

இதயம் மட்டும் ...
வெளியில் இருந்திருந்தால் ...
நிச்சயம் நீ அழுதிருப்பாய் ...
என்னை ஏற்றிருப்பாய்....!

------

பெண்ணை பற்றி நான் ....
கவிதை எழுதியதில்லை ...
உன்னை பற்றியே கவிதை ...
எழுதுகிறேன் ....!

------

காதல் அணுக்கவிதைகள்
கவிப்புயல் இனியவன்


வெள்ளி, 16 ஜூன், 2017

காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா...?

காதல் இல்லாமல் வாழ்வது வாழ்வா...?
-----------------------

கோயிலில்லா ஊரில் ...
குடியிருக்கலாம் ....
காதல் இல்லா ஊரில் ...
குடியிருக்காதீர்கள்...!

உப்பில்லா பண்டம் ...
குப்பையிலே ....
காதல் இல்லா இதயம் ....
குழியினிலே .....!

-------

அதிகாலையில் ....
காதலோடு துயிலெழுங்கள்....
அதுவே உன்னத தியானம் ...!

இரவில் ....
காதலோடு உறங்குங்கள் ....
அதுவே உன்னத நிம்மதி ....!

-------

எங்கும் ...
நிறைந்த காதலே ....
நீ என்னோடு இருக்கிறாய் ....
என்ற தைரியத்தில்தான் ....
கவிஞனாக இருக்கிறேன்....!

நீதிமன்ற கூண்டில் நின்று ....
சொல்வதெல்லாம் உண்மை....
உண்மையை தவிர வேறு....
எதுவுமில்லை -என்று ...
சொல்வதுபோல் -நானும் ...
உறுதிமொழி சொல்கிறேன்....!

^^^
கவிப்புயல் இனியவன்

சிந்தித்து சிரிக்க சென்ரியூ

சிந்தித்து சிரிக்க சென்ரியூ
---------------
நண்பர்கள் கடும் சண்டை
காயம் ஏற்படவில்லை
முகநூல் நட்பு
----------------
காதலர் மனமுறிவு
மணிக்கணக்கில் வாக்குவாதம்
தொலைபேசி நிறுவனம் மகிழ்ச்சி
----------------
சுவாமி தரிசனம்
நூற்றுக்கணக்கான பக்தர் குவிந்தனர்
ஆயிரக் கணக்கான படைகள் பாதுகாப்பு
----------------
பொய் சொன்னால்
மெய் மறக்கும்
காதல்
--------------
கார் கதவை திறந்து
சலுயூட் அடித்தான் காவலாளி
இறங்கியது நாய்

^^^
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 13 ஜூன், 2017

கவிப்புயல் - ஹைகூக்கள் - சென்ரியூகள்

----------------------------------------
சமூக அவலக்ஹைகூக்கள்
கவிப்புயல் இனியவன்
---------------------------------------

அருந்ததி பார்த்தவள்
அருந்தி இறந்தாள்
வரதட்சனை கொடுமை

^^^

வயிற்றில் சுமந்தவளால்
கைகளால் சுமக்க முடியவில்லை
புத்தகப்பை

^^^

வாழ்கையும் இழந்தாள்
தொழிலையும் இழந்தாள்
விதவை பூக்காரி

^^^
-----------------------------------
சமூக அவலம் சென்ரியூ
கவிப்புயல் இனியவன்
-----------------------------------

குழந்தைகளுக்கு தாய்ப்பால் அவசியம்
டாக்டர் அறிவுரை
பசுகன்று இழுத்து கட்டபப்டுகிறது

^

நேர அட்டவனனைப்படி
சிறையில் அடைக்கப்படுகிறார்கள்
பள்ளி மாணவர்கள்

^

உயிரை கொன்று
அலங்கரிக்கப்படுகிறது
பட்டுப்புடவை

^

நகரத்தில் கட்டண கழிப்பிடம்
கட்டணமின்றி தூங்கலாம்
நடைபாதை

^

பகலிரவு ஆட்டம்
இரவு சூதாட்டம்
பகல் கிரிகட் ஆட்டம்

திங்கள், 12 ஜூன், 2017

கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்

-----------------------
கவிப்புயல் இனியவன் ஹைக்கூகள்
-----------------------

மனதில் இருள்
ஆடையில்  வெண்மை
விதவை

@@@

காற்றோட்டமான ஆடை
ஆடை முழுவதும் அலங்காரம்
ஏழை சிறுமி

@@@

உடல் முழுதும் காயம்
தையல் போட்டும் மாறவில்லை
கிழிந்த ஆடை

@@@

-----------------------
கவிப்புயல் இனியவன்சென்ரியூ கள்
-----------------------
தேர் திருவிழா
தேர்தல் திருவிழா
திருடர்கள் ஜாக்கிரதை

^^^

பரிணாம வளர்ச்சி உண்மை
அடிக்கடி தாவுகிறார்
கட்சி தலைவர்

^^^

தேர்தலுக்குமுன் நியதி
தேர்தலுக்கு பின் மறதி
தேர்தல் வாக்குறுதி

^^^

திறந்த வீட்டுக்குள் நுழைந்தது
வோட்டு கேட்டு வீட்டுக்குள்
வேட்பாளர்

புதன், 7 ஜூன், 2017

தந்தை....! அப்பா...! தந்தை.....!

தந்தை....! அப்பா...! தந்தை.....!
-----------------------------------

அம்மாவை .......
இழந்து நான் வேதனைபடுவதை.....
காட்டிலும் அம்மா இல்லாத காலத்தில்.....
அப்பா படும் வேதனையை தான்.....
தங்க முடியவில்லை.........!

^^^

பிள்ளை தான் படும்வேதனையை.......
அனுபவிக்க கூடாது என்பதற்காய்.....
தன் தொழிலையே மறைப்பவர்.....
தந்தை.....!

^^^

தந்தையின் தியாகம்.......
தந்தை இறந்தபின் தான்.......
முழுமையாக தெரிகிறது......
தந்தையாய் இருக்கும் போது.....
ரொம்ப வலிக்கிறது......
தந்தைகாய் செய்ததென்ன...?

^^^

கவிப்புயல் இனியவன்

வாட்சப் , எஸ் ம் எஸ் , குறுங்கவிதைகள்

உயிரே .! உனக்காய்..! மூன்று வரிகள்....!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இதயத்தில் குடியிருப்பவளே....
மெதுவாக மூச்சு விடுகிறேன் .....
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது....!

-------------------------------

கல்லை செதுக்கினேன் உன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!

-------------------------------

காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும்....
கவிதை எழுது உலகம் சுத்தமாகும்......
இரண்டையும் செய்பவன் ஞானி.....!

-------------------------------

உலக போதையிலேயே கொடூரம்.......
உன் போதை கண் தான் -இன்னும்.......
போதையில் இருந்து மீளவில்லை........!

-------------------------------

சிவன் கண் திறந்தார் நக்கீரன் எரிந்தார்
நீ கண் திறந்தாய்  நான் எரிந்தேன்
நீ எப்போது என்னை உயிர்ப்பிப்பாய்.......?

------------------------------

நீ வேறு நான் வேறு இல்லை
வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை
உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை

---------------------------------------

நான் ஒருதலை காதலாக இருந்திருந்தால்
வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன்
இருதலையாக உனக்கும் வலியை தருகிறேன்

-------------------------------

உன்னை மறக்கும் இதயம் வேண்டும்
என்னை மறக்கும் இதயம் வேண்டும்
மரத்துப்போகும் வாழ்க்கை வேண்டும்

-------------------------------

பெண்ணை புரிந்து கொள்ளவது இன்பம்
புரிந்து கொள்ளாமல் இருப்பது அதைவிட இன்பம்
காதல் இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு யுத்தம்

-------------------------------

சின்ன சின்ன சண்டை போட்டு ஒத்திகை
பார்த்தவளே - சொல்லியிருந்தால் நானும்
பயிற்ற பட்டிருப்பேன் வலியில் இருந்து மீள......!

------------------------------

நீ வானவில் போல் அழகாகவும் இருக்கிறாய்
அழிந்து போகும் கலை பொருளாகவும் இருக்கிறாய்
பாவம் என் இதயம் வளைந்து போகிறது...!

------------------------------

நான் காதல் புறா உன்னை சுற்றி சுற்றி வருகிறேன்
நீ காதல் கழுகு கொத்தி கொத்தி கலைக்கிறாய்
நம் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!

------------------------------

வாட்சப் , எஸ் ம் எஸ் , குறுஞ்கவிதைகள்
&
கவிப்புயல் இனியவன்

உன் நினைவால் துடிக்கிறேன்......!

நீ ஒருமுறை
கண் சிமிட்டினால்
ஓராயிரம் கவிதை
எழுத்துகிறேன்....!

ஒருநொடி ......
பேசாது இருந்தால்....
ஆயிரம் முறை இறந்து....
பிறக்கிறேன் ....!

உயிரே மௌனத்தால்
கொல்லாதே ...!
உன் நினைவால்
துடிக்கிறேன்......!

^^^
கவிப்புயல் இனியவன்

சனி, 3 ஜூன், 2017

என் அன்புள்ள ரசிகனுக்கு

என் அன்புள்ள ரசிகனுக்கு
கவிப்புயல் எழுதும் கவிதை
---------------------------------------
ஒரு
கவிஞன் தன் வலிகளை....
வரிகளாய் எழுதுகிறான் ....
ஒரு
ரசிகன் அதை ஆத்மா ...
உணர்வோடு ரசிக்கிறான் .....
கவிதை அப்போதுதான் ...
உயிர் பெறுகிறது .....!

#

என் உயிரை உருக்கி ....
நான் எழுதும் கவிதைகள்
என்னை ஊனமாக்கி மனதை ...
இருளாக்கி இருந்தாலும் ....
கவிதைகள் உலகவலம் வருகிறது ...
உலகறிய செய்த ரசிகனே ...
உன்னை நான் எழுந்து நின்று ....
தலை வணங்குகிறேன் .....!

#

என்இரவுகளின் வலி......
விழித்திருந்த கண்களுக்கு தெரியும் ....
பகலின் வலி அவள் எப்போது ....
இரவில் கனவில வருவாள் ....?
ஏங்கிக்கொண்டிருக்கும்.....
இதயத்துக்கு புரியும் .....
ரசிகனே உனக்குத்தான் புரியும் ....
நான் படுகின்ற வலியின் வலி ......!

#

ஒருதலையாக காதலித்தேன் ...
காதலின் இராஜாங்கம் என்னிடம் ....
காதலை சொன்னேன் ....
என் இராஜாங்கமே சிதைந்தது .....
காதல் ரகசியத்தில் ஒரு துன்பம் ....
பரகசியத்தில் இன்னொரு துன்பம் ....
காதல் என்றாலே இன்பத்தில் துன்பம் ....
கண்டு கொல்லாதே ரசிகனே .....!

#

என்
காதலுக்கு காதலியின் முகவரி ...
இன்னும் தெரியவில்லை ...
அதனால்தான் இதுவரை .....
என்னவளில் பதில் வரவில்லை ...
வெறுத்தவள் மறுத்தவளாகவே....
வாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...
என் கவலையை சொல்லாமல் ....
யாரிடம் சொல்வேன் .....?
என் வாழ்வில் ரசிகனே நிஜம் ....!

#

வேதனையில்
சாதனை செய்யப்போகிறேன் ....
என்னை விட தாங்கும் இதயம் ...
இவ்வுலகில் யாரும் இருக்க முடியாது ....
வேதனைகள் மணிக்கூட்டு முள் போல் ....
என்னையே சுற்றி சுற்றி வருகின்றன .....
அவ்வப்போது ஆறுதல் பெறுவது .....
என் ஆத்மா ரசிகனால் மட்டுமே .....!

#

என்னை உசிப்பி விட்டு ....
வேடிக்கை பார்த்த என் நண்பர்கள் ....
என்னை காதல் பைத்தியம் ....
வாழதெரியாதவன் ஒன்றில்லாவிட்டால் ...
இன்னொன்று தெரிவுசெய்யதெரியாதவன்....
என்றெல்லாம் ஏளனம் செய்கிறார்கள் ....!
ரசிகனே என் உடைகள் தான் கிழிந்து ...
என்னை பைத்தியம் போல் ....
அவர்களுக்கு காட்டுகிறது ....
காதல்கிழியாமலே இருக்கிறது .....!

#

பள்ளி
பருவத்தில் மாறு வேடபோட்டியில் .....
பைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....
காதலியால் வாழ் நாள் முழுவதும் ....
முதலிடம் அருமையான வேஷம்.....!
பிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....
கிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...
ரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....
வலிகளில் இன்பம் காண்போம் .....!

#

என்னைப்போல் ....
இப்போ மெழுகுதிரி உருகிறது .....
மெழுகுதிரி உருகினாலும் வெளிச்சம் ...
கொடுக்கிறது - நானோ இருட்டுக்குள் ...
வாழ்கிறேன் அவ்வப்போது என் ...
அருமை ரசிகன் எனக்கு வெளிச்சம் ...
தருகிறான் ......!

#
என்
கவிதைகள் பூத்துகொண்டே .....
இருக்கிறது பூ என்றால் வாடும் ....
மீண்டும் மரத்தில் பூக்கும் ....
பாவம் இதயம் முள் வேலிக்குள்...
சிக்கிதவிர்க்கிறது.....
இலை உதிர் காலத்தில் உதிர்ந்த இலைகள் ...
துளிர்விடாமல் இருக்காது ....
என்னவள் மீண்டும் வருவாள் என்று ...
இந்த நிமிடம் வரை இருக்கிறேன் ....
ரசிகனே நீதான் துணை ....!

^^^
என் அன்புள்ள ரசிகனுக்கு
கவிப்புயல் எழுதும் கவிதை

கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா

----------------
கவிப்புயல் இனியவன் காதல் வெண்பா
----------------

உனக்குள்ளே நானிருப்பதால் ,இங்கு
எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி
தனியாக பேசி இன்பம் காணாமல்
துணையாக பேசி இன்பம் காண்போம் வா
-------------------------------------!
வரைந்தேன் கண்ணால் உருவத்தை நானே
கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே
துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம்
அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம்
-------------------------------------!
எனக்குள்ளே உயிராய் கலந்திருப்பதால்,இதயம்
தனக்குள்ளே பேசி இன்பம் காண்கிறது
யாமிருக்க பயமேன் என்கிறார் இறைவன்
நானிருக்க பயமேன் நம்காதலுக்குயிரே
------------------------------------!
தேடினேன் நீ வரும் வழினெடுகிலும்
வாடினேன் உன் நிழல்கூட தெரியாததால்
துடிக்கின்ற இதயம் துடிக்க மறந்து
வடிக்கின்ற கண்களாய் மாறிவிட்டதடி
-----------------------------------!
&
காதல் வெண்பா
கவிப்புயல் இனியவன்

வியாழன், 1 ஜூன், 2017

ஹைக்கூ கவிதை

மரணதண்டனை ரத்து
மாடுகளும் சந்தோசம்
மாட்டிறைச்சிக்கு தடை

^

குழந்தை தொழில் சட்டவிரோதம்
மூடை சுமக்குறது குழந்தை
புத்தகப்பை

^
பழையன கழிதல்
புதியன புகுதல்
இலையுதிர்காலம்

^
ஹைக்கூ கவிதை
♥♥கவிப்புயல் இனியவன்♥♥

மாட்டிறைச்சிக்கு தடை

மரணதண்டனை ரத்து
மாடுகளும் சந்தோசம்
மாட்டிறைச்சிக்கு தடை

^

குழந்தை தொழில் சட்டவிரோதம்
மூடை சுமக்குறது குழந்தை
புத்தகப்பை

^
பழையன கழிதல்
புதியன புகுதல்
இலையுதிர்காலம்

^
ஹைக்கூ கவிதை
♥♥கவிப்புயல் இனியவன்♥♥