இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 28 ஏப்ரல், 2018

ஆன்மீக கவிதைகள்

உள்ளத்தில் பூவை.....
மலர வைக்காவிட்டாலும்....
பரவாயில்லை.....
பூமரத்தின் வேரை....
சேதமாக்கும்செயல்களை
நினைக்காதீர்.......
என்றோ ஒருநாள்......
அந்த மரத்தில் பூ
மலர்வதற்கு வாய்ப்புண்டு....!

@
கவிப்புயல் இனியவன்
ஆன்மீக கவிதைகள்

திங்கள், 16 ஏப்ரல், 2018

சிந்தனை கவிதைகள்

கோயிலில் பாலபிஷேகம்.....
ஓட்டை சட்டையுடனும்.....
ஓட்டை சட்டியுடனும்.....
வரிசையில் ஆயிரகணக்கில்.....
குழந்தைகள்.....!

கோயிலின் வாசலில்......
வரிசையாக முதியவர்கள்.....
கைநீட்டியதையும் ......
காணாமல் பட்டுவேட்டியுடன்......
கோவில்தரிசனம்......!

கோயிலை
நிர்வகிப்பவர்கள்.....
அறங்காவளர்கள்......
அறங்காவளரை நிர்வகிப்பது..?

^^^^^
கவிப்புயல் இனியவன்
^^^^^
கவிதையோடு வாழ்பவனும்....
கவிதையாக வாழ்பவனும்....
கவிஞன்........! 

சிந்தனை கவிதைகள்

கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........! கண்டதை எழுதுவதும்.... கண்டபடி எழுதுவதும்.... கவிதையில்லை....... கண்ணியமாய் எழுதுபவன்..... கவிஞன்........! காதலால் ............. கவிதை வரும் என்பதை.... காட்டிலும்........... காதலோடு கவிதை...... எழுதுபவன் உண்மை..... கவிஞன்..........! சமூக ...... சீர்திருத்தத்துக்காய்..... கவிதை எழுதுவதைவிட.... சமூகத்திலிருந்து...... சீர்திருந்தி வாழ கவிதை..... கவிதை எழுதுபவன்..... கவிஞன்...........! ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிப்புயல் இனியவன் ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^ கவிதையோடு வாழ்பவனும்.... கவிதையாக வாழ்பவனும்.... கவிஞன்........!

ஞாயிறு, 8 ஏப்ரல், 2018

அளவுக்கு மிஞ்சினால்.....

அளவுக்கு மிஞ்சினால்.....
------------
அளவுக்கு மிஞ்சினால்.....
அமிர்தமும் நஞ்சு.........
அன்புக்கும் பொருந்தும்.....!

பணத்தின் மீது அதிக அன்பு......
உடலை கெடுக்கும் உளத்தை......
மாசுபடுத்தும் நஞ்சுதானே........
பிள்ளைகள் மீது அதிக அன்பு....
எதிர்பார்பை கூட்டும்......
நிறைவேறாதபோது குடும்ப.....
சண்டையாக மாறுகிறது........!

துணைமீது அதிக அன்பு.....
கோழையாக்கிவிடுகிறது......
சுயசிந்தனையை இழக்க வைக்கிறது......
தன்மானத்தை இழக்கவைக்கிறது.......
தனிமையாகினால் முதுமையை.....
துயரமடைய வைக்கிறது.................!

சமூக அக்கறை அதிகமானால்........
அதிக பதவி ஆசை வருகிறது......
பதவி வரும் போது எல்லவற்றையும்....
கண் மறைக்கிறது........!

அப்போ எதையும் விரும்ப கூடாது
என்கிறேனா....?
இல்லை இல்லை .......
எல்லவற்றையும் விரும்புங்கள்.....
எல்லாம் உங்களால் தான் ......
நடைபெறுகிறது என்பதை மட்டும்....
மறந்துவிடுங்கள்.........!

^^^^^^^^^
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்

திங்கள், 2 ஏப்ரல், 2018

இரட்டை இதயம் படைத்தவளே...........!

கவிதைகள்
கண்ணீரை பேனா
மையாக்கி ....
வலிகளை வரிகளாக்கி
பிரசவிக்கின்றன......!

நீ காலை ......
மாலை பூக்கும் ...
மலராக இருந்து விடு ...
இரட்டை இதயம் .........
படைத்தவளே...........!

உன்
பார்வைக்கு அஞ்சி ...
அருகில் வரும்போது ...
மறு தெருவுக்கு போகிறேன்...
உன் பார்வையால்......
கருகியவர்களின்.......
அறிவுரை கேட்டு.....!

@
கவிப்புயல் இனியவன்
கவிப்புயலின் கஸல் 02

காதலில் கற்றுக்கொண்டேன்.....!

கவிப்புயலின் கஸல்கள்
----------------------------

சில நேரங்களில்....
கனவுகள் பலித்தால்....
வலியென்ன என்பதை....
உன் காதலில் 
கற்றுக்கொண்டேன்.....!

நீ.....
நினைவில் வரும்போது.....
தலைவலி தருகிறாய்....
கனவில் வரும் போது....
தலைவிதியாகிறாய்......!

நீ
போன ஜென்மத்தில்....
பட்டாம் பூசியாய்....
இருந்திருக்கிறாய்...........!

@
கவிப்புயல் இனியவன்
கவிப்புயலின் கஸல் 01