இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 31 ஜூலை, 2016

இதுவரை நினைத்திருந்தேன்


வறுமையில் வாழ்ந்த ....
காலத்தில் பசியுடன் ....
போராடினேன் ....
என்றே இதுவரை ....
நினைத்திருந்தேன் ....!!!

தன்னம்பிக்கையுடனும் .....
அடுத்த இலக்கையும் ....
வறுமையோடு .....
போராடினேன் என்பது .....
வசதி வந்தபோது .....
உணர்ந்தேன் ...............!!!

^
நினைத்து பார்த்தால் வலிக்கிறது
கவிப்புயல் இனியவன்

நினைத்து பார்த்தால் வலிக்கிறது



பணத்துக்காக ....
திருமணம் செய்தேன்....
என்னை விட பணத்தை ....
வட்டிக்கு கொடுப்பவன்.....
சந்தோசமாய் .....
இருக்கிறான் .....!!!

திருமணத்தை ......
மணவாழ்கையாக .....
செய்யாமல் ....
பணவாழ்கையாய் .......
செய்தால் வாழ்க்கையும் ....
சந்தை பொருள்தான் ....!!!

^
நினைத்து பார்த்தால் வலிக்கிறது
கவிப்புயல் இனியவன் 

இந்த சுகம் போதும் அன்பே



இந்த சுகம் போதும் அன்பே
-------------
அதிகாலை வேளை....
அகிலமே அமைதியாய் ...
இரு விழியை அகன்றேன் ...
வான் குருவிகள் வானிசை ..
சில்லென்ற காற்று உடல் பட ...
எனைமறந்து உன்னை .....
நினைத்தேன் ...

(இந்த சுகம் போதும் அன்பே ...)

தண்ணிரை மோர்ந்தேன் ....
பன்னீரை போல் உன் மென்மை..
ஒருதுளி உடலில் பட ...
இணைந்துவிட்டேன் உன் ...
நினைவில் ......

(இந்த சுகம் போதும் அன்பே ...)

ஒற்றையடி பாதையிலே
ஓற்றைசடை முடி தேடி ...
பற்றைக்குள் பதுங்கி இருக்க ...
பற்றை செடிகள் ஆடியது ...
காற்று அசைக்க வில்லை ..
என் இதய துடிப்பு அசைத்தத்தடி ...!!

(இந்த சுகம் போதும் அன்பே ...)

கண் மூடினால் கனவாய் ..
கண் திறந்தால் நினையாய் ...
கனவில் வந்து நினைவை இழப்பதா ...?
நினைவில் வந்து கனவை இழப்பதா ...?
வந்தது உன் குறுஞ்செய்தி ...
நான் தூங்கப்போகிறேன் நீ ரெடியா ..?
கனவில் வர நான் தயார் என்று ...!!!

(இந்த சுகம் போதும் அன்பே ...)

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 

புதன், 27 ஜூலை, 2016

மனைவிக்கு ஒரு கவிதை

அன்னையை ....
நினைக்கும் ...
போது உன்னை......
அன்னையாக ....
பார்க்கிறேன் ......!!!

உன்னை பார்க்கும்...
அன்னையை ....
நினைவுபடுத்துகிறாய்...!!!

அன்னையும் ...
மனைவியையும் ....
இரு கண்களாக ....
பார்பபவர்கள் .....
இல்லம் விக்கிரகங்கள் .....
நிறைந்த கோயில் ....!!!

உன் அருகினில் இருப்பவன்..

நினைக்கும் போது
உன் அருகினில் இருப்பவன்..
அல்ல நான்...!!!

நீ
அருகினில் இல்லாத போதும்....
உன்னையே...
நினைத்துக்கொண்டு இருப்பவன்..
இருப்பவன் தான் நான் ...!!!

அழும் போது கண்ணீர்..
துடைப்பதில்லை ...
காதல்...!!!
கண்ணீரை ஏற்படுத்தாமல் ..
இருப்பதுதான் காதல் ...!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கண்ணீரில் தள்ளாடும் .....!!!

கப்பல் கனமாக ....
இருந்தாலும் .....
தண்ணீரில் ....
தள்ளாடும் .....
காதல் கனமாக ....
இருந்தாலும் ....
கண்ணீரில் ....
தள்ளாடும் .....!!!

நம் காதலுக்கு ..
கண் தான் விதை ..
கண்ணீர் தான் ...
பாசனம் .....!!!

பூவின் மீது ....
வண்டுக்கு மோகம் ....
பூவுக்கும் இருந்தால் ....
இன்பம் ....
வாடிய பூவில் .....
என்னபயன் .....?

&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 142

இதய பரிமாற்றத்தை நீ

இதய பரிமாற்றத்தை
நீ
பண்டமாற்றாய்....
நினைத்து விட்டாய் ...!!!

நான் வானம் ..
நீ முகில் ...
நான் நிலையாக ..
நீ அசைந்து கொண்டு...!!!

நான்கவிதையை ..
உன்னைக்கொண்டு ..
எழுதுகிறேன் ..
நீயோ ...
என்னை கொன்று ....
எழுத வைக்கிறாய் ....!!!

&
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை 140

செவ்வாய், 26 ஜூலை, 2016

நீ வருவதை தடுக்க ....!!!

நான்
இரவு நேர இதய ....
காவலாளி .....
கனவில் கூட நீ
வருவதை தடுக்க ....!!!

உன்
நினைவுகளால் .....
இதயத்தில் தாஷ்மஹால் ...
காட்டுகிறேன் ....
வலிகள் தான் செலவு ....!!!

காற்றில் உரசும் ....
மரக்கொப்புக்கு உள்ள ....
இன்பம் கூட நமக்குள் ....
இல்லை .....!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1038

கஸல் கவிதை 1037

வெள்ளத்தில் கத்தும் ....
தவளைக்கு ஒரு இரவு ....
இன்பம் .....
உன்னை பார்த்த ....
ஒரு இரவு எனக்கு ....
துன்பம் .....!!!

ஈர்ப்பால் கோள்கள் ....
சுற்றுகிறது ....
மோதியத்தில்லை ....
உன் ஈர்ப்பில் ...
சுற்றும் நான் ....
காயப்பட்டு விட்டேன் ...!!!

ரோஜா சிவப்பு ....
கொடுத்த இதயத்தில் ....
இரத்தம் வடிவத்தால் ....!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1037

முள்ளில் மலர்ந்த பூக்கள் 1036

வலமிருந்து ....
இடமாக காதல் ...
தேவதையை சுற்றி ....
வரவேண்டும் .....(+)
நம் காதல் தோஷம் ....
இடமிருந்து வலமாக ....
சுற்றுகிறேன் .......!!!(-)

வாடி விழும் பூவின் ....
நெத்து மரமாகி ....
மீண்டும் பூக்கும் ...(+)
நீ  வாடித்தான் ....
விழுந்தாய் ......
பூவின் மென்மை கூட .....
உன்னில் இல்லை ....!!!(-)

அடுத்த ஜென்மத்தில் ....
என் இதயத்தை ....
ஈரமாக படைக்காதே ...(-)
வீரமாக படைத்து விடு ....!!!(+)

&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1036

திங்கள், 25 ஜூலை, 2016

என்னையும் வாழ வைக்கிறாள்

இதயத்தில் இருக்கும் .....
என்னவளை பூவாக ....
பார்க்கமாட்டேன் ....
வாடிக்கொண்டிருக்கும் ....
வலியை தாங்கி கொள்ள ....
மாட்டேன் ........!!!

என் இதயத்தின் ....
ஆணி வேர் அவள் .....
தானும் வாடாமல் .....
என்னையும் வாழ ...
வைக்கிறாள் ...............!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை

ஒரு புகைப்படமும் கிடைக்கவில்லை ....!!!

என்
காதல் கவிதையை....
புகைப்படம் போட்டு ....
வர்ணிக்கமாட்டேன் .....
என்னவளின் அழகுக்கு ....
ஒரு புகைப்படமும் .....
கிடைக்கவில்லை ....!!!

ஒவ்வொரு
புகைபபடத்தையும்.....
பார்க்கின்ற போதெல்லாம் ....
என்னவளின் ஒவ்வொரு ....
அழகு குறைவாக இருக்கிறது ....!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை

ஏன் விளக்கவில்லை .....?

மனிதன் .....
சில நிமிடங்கள் ....
நினைவுகளை இழந்தால் ....
அவன் இறக்கிறான் ....
என்கிறது விஞ்ஞானம் ....!!!

உன் நினைவுகள் ....
ஒவ்வொரு நொடியும் .....
என்னை கொல்கிறது.....
இதை விஞ்ஞானம் ....
ஏன் விளக்கவில்லை .....?

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை

பலமாக போட்டவள் .நீ

முள் .............
மேல் தூங்கிய .....
என்னை பூக்களின் ....
மேல் தூங்க வைத்தவள் ....
நீ ....................................!!!

வாழ்க்கை என்றால் .....
ஆனந்தம் இருக்கும் .....
அந்த அத்திவாரத்தை .....
பலமாக போட்டவள் .......
நீ ...................................!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை 

என்ன சந்தேகம் ....?

என் கவிதைகள் ....
உன்னை காந்தமாக ....
கவர்கிறது என்கிறாய் ....
அதில் என்ன சந்தேகம் ....?

துருப்பிடித்து இருந்த ....
என் இரும்பு இதயத்தை .....
காந்த கண்ணால் கவர்ந்த ....
உன் கண்கள் தான் ....
காரணம் ......!!!

&
கவிப்புயல் இனியவன்
தேனிலும் இனியது காதலே
காதல் கவிதை

வியாழன், 21 ஜூலை, 2016

காதலை தவிர ஏதும் தெரிவதில்லை...!

நீ அருகில் ...
இருக்கும் போது ...
காதல் என்றால்...
புரிவதில்லை...!

பேசுவேன் .....
தொடர்பில்லாமல் .....
தொடர்ந்து பேசுவேன் .....
உன்னை பிரிந்திருக்கும் .....
ஒவ்வொரு நொடியும் ....
காதலை தவிர வேறு ஏதும்
தெரிவதில்லை...!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

ஆன்மீக கவிதை

உன்னில் இருக்கும்
மனிதன் எங்கே எங்கே ..??
அதை வெளியில் தேடுகிறாய் ...???
மனிதம் என்ற பொருள் தெரியாது ..
மாறி மாறி ஆடையை .....
மாற்றுகிறாய் ...!!!

நீ மனிதனை.....
காணவில்லை என்கிறாய் ...!!!
மனித நீ மனிதம் ஆகும் வரை......
மனிதனை தேடிக்கொண்டே ......
இருப்பாய் ...!!!

&
ஆன்மீக கவிதை
கவிப்புயல் இனியவன் 

நாம் மழைத் துளி அல்ல...

தென்றல் காற்றின் சுகம் .....
அர்த்தமுள்ள கவிதை சுகம் ....
அறியாத பொருள் இதம் .....
கலையாத கனவு இன்பம் ....
இன்னும் எவ்வளவோ...
அத்தனையும் கண்டேன்....
உன் அணையாத நட்பில் ....!!!

விழுந்தவுடன் மறைந்து விட
நாம்  மழைத் துளி அல்ல...
இறுதிவரை நம்முடன் .....
இருக்கும் கண்ணீர் துளி...!!!

+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை

அனுபவத்தால் வந்த கவி ...

சில நட்பை  நாம்
புரிந்து கொள்ளாததால்
வெறுக்கிறோம்.....!!!!

சிலரை, நாம்
வெறுப்பதால் புரிந்து
கொள்ளமறுக்கிறோம்...!!!

+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை

விடியல் நமக்காகத்தான் ...!!!

உலகுக்கு ஒளி தரும் .....
சூரியனே.. கடமையை ....
முடித்து விட்டு .....
உறங்க சென்று விட்டது...!

என் .....
உயிருக்கு ஒளி தரும் ....
நட்பே நீ மட்டும் .....
ஏன் விழித்திருக்கிறாய்.....?
போய் கண் உறங்கு...!
உனக்காக நானும் .....
எனக்காக நீயும் ....
விடியல் நமக்காகத்தான் ...!!!

+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை 

நட்பு கவிதை

உரிமை கொள்ள
ஆயிரம் உறவுகள்
இருந்தாலும்,
உள்ளதைப் புரிந்து கொள்ள
நண்பா
உன் ஓர் உறவுபோதும்...!!!

நட்பு
ஆழ்கடல் போன்றது...
கரையில் தேடினால்,
சிப்பிகள்  கிடைக்கும்...
மூழ்கி தேடினால் தான்
உன்னைப் போல...
முத்துக்கள் கிடைக்கும்....!!!

+
கவிப்புயல் இனியவன்
நட்பு கவிதை

புதன், 20 ஜூலை, 2016

கூலிக்கும் காதல் வரும்.....!!!

கூலிக்கும் காதல் வரும்.....!!!
--------
கூலி வேலை செய்தேன்........
உன் வீட்டில் ............................
யார் கண்டது நீ .....................
கண்ணில் படுவாய் -என்று ?

கூலிக்கும் உன்மீது ஆசை ....
உனக்கும் தான் ....................
கூடி ஒருநாள்கூட போசமுடியாத .......
தினக்கூலினான் ...............
வீட்டுவேலை முடிந்ததும் ..............
முடிந்தது என் காதல் ...............!!!

கண்ணே முடியவில்லை ..............
உன் நினைவுகளை மறக்க ...............
முடியவில்லை யாருக்கும் சொல்ல . .............
கூலிக்கு தேவையா.............?
இந்தக்காதல் என்பார்கள்........!!!

கூலிக்கும் இதயம் இருக்கு ............
என்று ஏன் புரிவதில்லை ............
இந்த உலகத்துக்கு ..................
கூலிக்கும் காதல் வரும் -என்று .............
இன்னுமொரு கூலிக்கு புரிந்தால் .............
போதும் - ஆனால் கூலியே .....
காதல் செய்யாதே .........!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன் 

கண்ணீர் மறைக்கிறது

அன்று .....
கண் சிமிட்டாமல்
உன்னைப் பார்க்க
ஆசைப் பட்டேன்...
பார்த்தேன் ......!!!

இன்று .....
இப்போதெல்லாம் ....
கண் சிமிட்டும் நேரமாவது ...
உன்னைப் பார்க்க ....
ஆசைப் படுகிறேன்...
கண்ணீர் மறைக்கிறது ..
உன் உருவத்தை .....!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

வாழ்க்கை கவிதை

மரத்திலிருந்து விழும் ...
பழுத்த இலை சொன்னது ...!!!

நான் எத்தனையோ முறை ..
வானத்தை தோட முயற்சித்தேன் ..
முடியவில்லை -என்றாலும் ..
கலங்கவில்லை என் அடுத்த ..
வாரிசு நிச்சயம் தொடும் ...!!!

என் குழந்தை துளிர் ..
நிச்சயம் எட்டுவான் ...
தந்தை செய்து முடிக்காத ..
நாற்காரியத்தை -மகன்
நிறைவேற்றியே .....
ஆகவேண்டும் .....!!!

&
கவிப்புயல் இனியவன்
வாழ்க்கை கவிதை 

செவ்வாய், 19 ஜூலை, 2016

கவிதை உயிர் பெறுகிறது ..!!!

உனக்கு ....
நான் கிறுக்குவது ....
எல்லாம் கவிதை ....
என்கிறாய் .......!!!

நீ
எனக்குக் கொடுக்கும்
காதல் தான் கவிதை ...
அதை உணர்வாயா ....?

கவிதையை ..
நீ ரசிக்க ரசிக்க
என் கவிதை
உயிர் பெறுகிறது ..!!!

^
தேனிலும் இனியது காதல்
கவிப்புயல் இனியவன் 

நீ மௌனமாக இரு .....!!!

பட்டுப்போன மரத்தில் ....
அங்கங்கே பாசி .....
பிடித்திருப்பதுபோல் ....
உன் நினைவுகள் ...
இதயத்தில் ஒட்டி ....
இருக்கத்தான் செய்கிறது ....!!!

ஒவ்வொரு இரவும் ..
எனக்கு வேலை
உன்னை கனவில்
தேடுவதும்
ஏமாறுவதும் தான் ...!!!

நீ மௌனமாக இரு ..
என்னையும்
மௌனமாக்கிவிட்டு ....
நீ  மௌனமாக இரு .....!!!

கஸல்;139

ஆழத்தை அறிய முற்படுகிறது ....!!!

இதய முகவரியை ....
தொலைத்த உனக்கு ....
இல்ல முகவரி எப்படி ...?
நினைவுவரும் ....?

நீ விடும் ஒவ்வொரு
கண்ணீரும் காதலின்
ஆழமறியாத ஆழத்தை
அறிய முற்படுகிறது ....!!!

உன்னை சுவாசிக்கிறேன்
நீ என்னை வாசிக்கிறாய்
காதல் உணரக்கூடிய
உணரமுடியாத உறவு ....!!!

கஸல்;138

வியாழன், 14 ஜூலை, 2016

சமுதாய கஸல் கவிதை

சண்டை போடுவதாயின்...
சட்ட சபையில் போடுங்கள்...
வீட்டில் சண்டை போட்டால்...
சட்டம் தன் கடமையை...
செய்யும்........!!!

சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

^^^^^

பகல் முழுவதும்..
தன்னை கஷரப்படுதி...
உழைக்கிறான்.....
இரவு குடும்பத்தை...
கஷ்ரப்படுத்துகிறான்....!!!

சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

^^^^^

ஆடம்பர வீடு...
அழகாக இருக்கிறது...
வீட்டில் இருக்கும்...
சில்லறை காசு ...
துர் நாற்றம் வீசுகிறது....!

சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்


செவ்வாய், 12 ஜூலை, 2016

சின்ன இன்பவரி சின்ன வலிவரி

பூக்கள் உன்னிடம் ....
கற்று கொள்ள வேண்டும் ....
மென்மையாக சிரிப்பதை .....!!!

^
சின்ன இன்பக்காதல் வரி
^

நெருப்பில் கருகிவிடலாம் ......
உன் சிரிப்பில் கருகுவதை விட ...
அதுவொன்றும் கொடுமையில்லை....!!!

^
சின்ன வலிக்காதல் வரி

^
நீ  இதயத்தில் காதலாய் ....
வந்தநாளே என் வசந்த காலம் ...
ஒவ்வொரு இதயமும் பூக்கும் நாள் ....!!!

^
சின்ன இன்பக்காதல் வரி 
^

உன்னால் காயப்படும் கூட‌.....
ஆறுதல் சொல்ல‌ நீவருவாய் ..... 
ஏங்குதுசொற‌ணை கெட்ட‌இதயம்....!!

^
சின்ன வலிக்காதல் வரி 
^
இதயம்துடிக்க‌ காற்று.....
தேவையில்லைகாதல் .....
வந்தவுடன் துடிக்கும் .....!!!
^
சின்ன இன்பக்காதல் வரி 
^

நீ காதல் செய்ய முனைகிறாய் ....
என்னசெய்வது உனக்கு வராது .....
காதல் இறைவனின் கொடை.....!!!
^
சின்ன வலிக்காதல் வரி 

&
கவிப்புயல் இனியவன்



சின்ன வலிக்காதல் வரி

பூக்கள் உன்னிடம் ....
கற்று கொள்ள வேண்டும் ....
மென்மையாக சிரிப்பதை .....!!!

^
கவிப்புயல் இனியவன்

நெருப்பில் கருகிவிடலாம் ......
உன் சிரிப்பில் கருகுவதை விட ...
அதுவொன்றும் கொடுமையில்லை....!!!

^
கவிப்புயல் இனியவன்

^

நீ  இதயத்தில் காதலாய் ....
வந்தநாளே என் வசந்த காலம் ...
ஒவ்வொரு இதயமும் பூக்கும் நாள் ....!!!

^
சின்ன இன்பக்காதல் வரி
^
உன்னால் காயப்படும் கூட‌.....
ஆறுதல் சொல்ல‌ நீவருவாய் .....
ஏங்குதுசொற‌ணை கெட்ட‌இதயம்....!!

^
சின்ன வலிக்காதல் வரி

&
கவிப்புயல் இனியவன்

திங்கள், 11 ஜூலை, 2016

காதல் கிணற்றில் மூச்சு திணறுகிறேன்

உன் இதயம்....
மர்மதேசம் ......
புரியாத புதிர் -நீ ....!!!

நடந்துவந்தேன்
வீதியால் -உன்
சிரிப்பில் தடக்கி
விழுந்துவிட்டேன் ....!!!

காதல் கிணற்றில் ....
மூச்சு திணறுகிறேன்.....
காப்பாற்றுவாய் ....
என்றால் அமுக்கி ...
விடுகிறாய் ......!!!

&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1035

கண்ணீரால் அழிக்கிறாய்.....!!!

நான் கண்ணால் ...
காதல் கோலம் ....
போடுகிறேன் -நீ
கண்ணீரால் .....
அழிக்கிறாய்.....!!!

காதலில்
பூக்கள் சிரித்ததை
விட வாடியதுதான்
அதிகம் .......!!!

உனக்கு நான்
காதலன் உறவு
நீ எனக்கு எப்போ ...?
காதல் .......
உறவாகப்போகிறாய் .....?

&
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1034

கல் பட்ட கண்ணாடி ஆகிவிட்டேன்

நீ
புல்லாக வளர்ந்து விடு ....
நான் எருதாக வந்து ...
மேய்ந்து விடுகிறேன் ....
அப்போதாவது நாம் ...
இணைவோம் .....!!!

நீ
கண்ணை தான் ....
சிமிட்டினாய் ....
கல் பட்ட கண்ணாடி ....
ஆகிவிட்டேன் ......!!!

உன்னை இனிபார்க்க‌
துடிக்க‌ மாட்டேன்
என் இதயத்தில் நீ
துடிப்பது போதும் ....!!!

முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1033

வெள்ளி, 8 ஜூலை, 2016

வரிகள் வேறு கவிதைவேறு இல்லை ....!!!

நீ கண் திறந்தபோது எரிந்தேன் 
நீ கண் சிமிட்டியபோது உயிர்த்தேன் 
நானும் காதல் அவதாரம் தான் ....!!!
^
கவிப்புயல் இனியவன் 
^
நீ வேறு நான் வேறு இல்லை
உணர்வுகளும் காதலும் வேறு இல்லை
வரிகள் வேறு கவிதைவேறு இல்லை ....!!!
^
கவிப்புயல் இனியவன் 

காதல் ஒரு தடுமாற்றம் .....!!!

காதலித்து உன்னை சுத்தமாக்கு....
கவிதை எழுதி உள்ளத்தை சுத்தமாக்கு...
இரண்டையும் செய்பவன் காதல் ஞானி....!!!
^
கவிப்புயல் இனியவன் 
^
உலகில் போதை கொடூரம் 
உன் கண் போதையை விட கொடூரம் 
காதல் ஒரு தடுமாற்றம் .....!!!
^
கவிப்புயல் இனியவன்

துடிப்பையே நிறுத்துகிறேன் ....!!!

இதயமாக இருப்பவளே .......
இதயத்துடிப்பு வலிக்கிறதா ...?
துடிப்பையே நிறுத்துகிறேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன் 
^
கல்லை செதுக்கினேன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் காதல்
இதயம் வலியால் துடிக்கிறது ....!!!
^
கவிப்புயல் இனியவன் 

காதல் மௌனித்து விடக்கூடாது .....!!!

காதல் மௌனித்து விடக்கூடாது .....!!!
----
தயவு செய்து பேசு....
பேசாமல் இருக்கும் நொடி....
இறந்து கொண்டிருக்கிறேன்....
பேசினால் நிற்கப்போகும்....
மூச்சு துடிக்கும் .....!!!

மறவர்களுக்கு காதல்
நமக்கு மூச்சு தான் காதல்
மறந்துவிடாதே ....
உயிரே உன் நினைவால்
துடிக்கிறேன்......!!!

கண்ணால் செய்யும் காதலை
காட்டிலும்
எண்ணத்தால் செய்யும்
காதல் அழகு ...!!!

அருகில் இருக்கும் காதலை
காட்டிலும்
தொலைவில் இருக்கும்
காதல் அழகு ...!!!

பேசிகொண்டு இருக்கும்
காதலை காட்டிலும்
மௌனத்தால் செய்யும்
காதல் அழகோ அழகு .....
அதற்காக காதல் .....
மௌனித்து விடக்கூடாது .....!!!

இதயத்தில்காதல் முத்தானாய் ...!!!

இதயத்தில்காதல் முத்தானாய் ...!!!
----

பஞ்ச வர்ணகிளியே....
தினமும் அணியும்....
ஆடைகள் உன்னை...
அப்படி அழைக்க...
தூண்டுதடி ...!!!

பச்சை கிளிக்கு...
முன்னால் வந்து விடாதே...
உன் கொவ்வை இதழை...
கொத்திவிட்டு சென்று....
விடும் .....!!!

என்னை பொறுத்த...
மட்டில் நீ ஒருகாதல்...
முத்து ....!!!

ஒருதுளி மழைநீர்....
சிப்பிக்குள் முத்தாகிறது....
உன் சின்ன சிரிப்பு.....
என் இதயத்தில்
காதல் முத்தானாய் ...!!!
&

கவிப்புயல் இனியவன்


வியாழன், 7 ஜூலை, 2016

காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!

உனக்காக 
எதையும் தாங்குவேன் 
நான் சுயநலவாதி இல்லை 
உன் இன்பத்தில் மட்டும் 
பங்குகொள்ள ......!!!

நீ காதலில் ஒரு நாணயம் 
இரண்டு பக்கமும் விழுகிறாய் 
நீ எந்த பக்கம் விழுவாய் என்ற 
ஏக்கத்துடன் வாழ்கிறேன் 
அதிலும் சுகமுண்டு ....!!!

@@@
உன்னுடன் பேச வேண்டும்
உன்னுடன் மட்டும் பேச வேண்டும்
உள்ளத்தில் இருப்பதை எல்லாம்
உள்ளதை உள்ளபடி பேசவேண்டும்
உண்மையுடன் பேசவேண்டும் ...!!!

என்ன பேசப்போகிறாய் ..?
என்கிறாயா ..? எப்போது ..?
என்னை பற்றி பேசியிருக்கிறேன் ..?
எல்லாம் உன்னை பற்றி தானே
எப்போதும் பேசுவேன்
என் உயிர் நீ தானே உயிரே ...!!!
@@@

படையில் எல்லாம் இழந்து ...
நிற்கும் வீரனைப்போல்... 
உன்னிடம் எல்லாவற்றையும் ...
வழங்கி இப்போ ஒன்றும் 
இல்லாமல் நிற்கிறேன் ...!!!

என்று இழக்கமாட்டேன் 
நீ தந்த நினைவுகள் 
நான் கொண்ட உண்மை காதல் 
உனக்காக எழுதிய கவிதை 
நீ தந்த நினைவு பரிசு ...!!!

நல்லவனாக நடிக்கிறோம் ....!!!

@ பொய் சொல்லவத்தில்லை
உண்மையை மறைத்திருகிறோம்
இதை விட கொடுமை பாதி உண்மை
பேசியிருக்கிறோம் - கொடுமையில்
கொடுமை பாதி உண்மை
பேசுவதுதான் -இதை எல்லாம்
செய்து விட்டு நல்லவனாக
வேஷம் போடுகிறோம் நடிக்கிறோம் .....!!!

@@@@@@

@ தப்பு என்று தெரிந்து கொண்டு
தப்பு செய்திருக்கிறோம் -ஆனால்
மற்றவர்கள் செய்யாத தப்பையா
நான் செய்கிறேன் என்று
சமுதாயத்தை அடமானம் வைத்து
தப்பு செய்கிறோம் நல்லவனாக
நன்றாக நடிக்கிறோம் .....!!!

@@@@@@@

@ திட்ட மிட்டு பிறர் காசை
திருடியது இல்லை ஆனால்
வழியில் கிடந்த பணப்பையை
யாரும் உரிமை கோராதபோது
எம் பணமாக்கி செலவு செய்கிறோம்
மனட்சாட்சிக்கு பதில் சொல்கிறோம்
வழியில் கிடந்த காசு பொது சொத்து
யாரும் பயன்படுத்தலாம் என்று
நமக்கு நாமே நியாயம் சொல்கிறோம் ...
நன்றாக நடிக்கிறோம் .....!!!

@@@@@@

@ ஊன் உண்ணாதே களவெடுக்காதே
சிறுவயதில் இருந்து கற்றுகொடுக்கும்
பாடம் - ஆனால் மாமிசம் உண்போம்
பசு கன்றின் பாலை களவெடுத்து
குடிப்போம் - கேட்டால் சொல்வோம்
அவையெல்லாம் எமக்காக
படைக்கபட்டவை - எமக்கே உரியவை
என்று வியாக்கியானம் சொல்வோம்
நன்றாக நடிக்கிறோம் .....!!!

@@@@@@

@ பிறர் மனம் புண் படும் படி
பேசமாட்டோம் -ஆனால்
அவர் இல்லாத தருணத்தில்
பேசாமல் இருக்க மாட்டோம்
தர்மத்தையும் நியாயத்தையும்
பேசுவோம் - கோயிலில் தர்ம
கத்தாவுடம் வீண்சண்டை போடுவோம்
நன்றாக நடிக்கிறோம் .....!!!

தேர் திருவிழா

நினைத்து பார்க்கிறேன்

கோயில் திருவிழாவை
பத்து நாள் திருவிழாவில்
படாத பாடு பட்டத்தை ...!!!

முதல் நாள் திருவிழாவிற்கு
குளித்து திருநீறணிந்து
பக்திப்பழமாய் சென்றேன்
பார்ப்பவர்கள்
கண் படுமளவிற்கு....!!!

இரண்டாம் நாள் திருவிழாவில்
நண்பர்களுடன் கோயில் வீதி
முழுவதும் ஓடித்திரிவதே வேலை
பார்ப்பவர்கள் எல்லோரும்
திட்டும் வரை ....!!!

மூன்றாம் நாள் திருவிழாவில்
மூண்டது சண்டை நண்பர்கள்
மத்தியில் - கூட்டத்துக்குள்
மறைந்து விளையாட்டு ....!!!

நாளாம் நாள் திருவிழாவில்
நாலாதிசையும் காரணமில்லாது
அலைந்து திரிவேன் ...!!!
ஐந்தாம் நாள் திருவிழாவில்
சேர்த்துவைத்த காசை
செலவளித்து விட்டு
வெறும் கையோடு இருப்பேன் ...!!!

ஆறாம் நாள் திருவிழாவை
ஆறுதலான நாளாக கருதி
வீட்டிலேயே இருந்து விடுவேன் ...!!!
காத்திருப்பேன்
தேர் திருவிழாவை -அப்பாவின்
ஆசீர் வாதத்துடன் செல்வதற்கு
அப்பாவும் படியளர்ப்பார்
அம்மாவும் படியளப்பா ....!!!

தேர் திருவிழா இறைவனின்
அழித்தல் தொழிற்பாடாம்
அழித்துவிடுவோம்
முன்னர் ஏற்பட்ட
நண்பர் பகையையும்
கொண்டு சென்ற காசையும் ...!!!

காலம் தான் மாறினாலும்
அந்த நினைவுகள் -காலம் காலமாய்
திருவிழா வரும் போது
வந்து கொண்டெ இருக்கிறது ...!!!

அழைத்தேன் இன்பம்

அப்படியே 
நினைத்து பார்க்கவே ....
பயமாக இருக்கிறது 
நம் காதலை .....!!!

ஓடாமல் இருக்கும் 
மணிக்கூட்டில் நான் ...
நிமிட முள்ளாய் ...
இருந்தென்ன பயன் ....?

அணைத்தேன் துன்பம் ...
அழைத்தேன் இன்பம் 
நீ அருகில் இருப்பதை ...
விட தூர இரு .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள் 
கஸல் கவிதை 
கவிப்புயல் இனியவன் 

முள்ளில் மலர்ந்த பூக்கள்

நீ
காதல் விளக்கு...
அருகில் வருகிறேன்.....
அணைந்து விடுகிறாய் ....!!!

ஒற்றை பார்வை ....
பார்த்தாய் அதுதான் ....
ஒற்றையாய் நிற்கிறேன் ....!!!

கறை படிந்த துணியில் ....
அழுக்கு இருப்பதுபோல் ....
என் இதயத்தில் நீ .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1031

புதன், 6 ஜூலை, 2016

அவளுடன் பேசத்துடிக்கிறேன் ....

அவளுடன்
பேசத்துடிக்கிறேன் ....
உதடுகள் மறுக்கின்றன .....!!!

அவளை ....
பார்க்க துடிக்கிறேன் ....
கண்கள் மறுக்கின்றன .....!!!

அவள் ...
நினைவுகள் மட்டும் ...
இதயம் சுமக்கிறது ....
அவள் என் முன்னாள் ...
காதலி ......!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

கனவில் வந்து கலைந்து விட்டாள்....



கனவில் வந்து ...
கலைந்து விட்டாள்....
நினைவை தந்து ....
நீங்கிவிட்டாள்....

உன்னை கனவில் ....
மட்டும் காதலித்திருந்தால் ....
கலங்கியிருக்க மாட்டேன்....
நினைவில் மட்டும் ....
காதலித்திருந்தாலும் .....
வருந்த மாடடேன் ....
உயிராக இருக்கிறேன் ....
முடிந்தால் எடுத்துவிடு....!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

ஒரு பொய் சிரிப்பு சிரிக்க ....

முயற்சிக்கிறேன் ....
உன்னை கண்டவுடன் ....
ஒரு பொய் சிரிப்பு சிரிக்க ....
உதட்டுக்கு முன்னரே ....
முந்தி கொண்டு ..
கண்ணீர் விட்டுவிடுகிறது .....
கண்கள் .......!!!

உன்னை நினைக்க  .....
கவலையாக இருக்கிறது......
என் நினைவுகளை எப்படி ....
மறக்கப்போகிறாய் ....?

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

அப்போது உனக்கு புரியும் ......!!!

நேரம்
இருக்கின்ற போது ....
என்னுடன் பேசுகிறேன் ...
என்கிறாய் ......
நேரம் காலம் எல்லாம் ....
உன்னையே நினைக்கும் ....
என்னிடம் சொல்கிறாயே .....!!!

ஒரு
முறை என்னைப்போல் .....
துடித்துப்பார்  -காதலின்
துடிப்பும் வலியும் அப்போது ....
உனக்கு புரியும் ......!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

வாய்க்கு எட்டவில்லை

கைக்கு எட்டியது ....
வாய்க்கு எட்டவில்லை ...
என்பதுபோல் தான் ....
என் காதலும் .....
திருமண அழைப்பில் ....!!!

கை கோர்க்க முடிந்த ....
எனக்கு உன்னோடு ...
மாலை கோர்க்க ....
முடியவில்லை .............!!!

^^^
வலிக்கும் இதயத்தின் கவிதை 
கவிப்புயல் இனியவன்

திங்கள், 4 ஜூலை, 2016

அழகு குத்தி காதல் செய்கிறேன்

விக்கிரகத்தை .....
அலங்கரிக்கும் பூசாரி ....
போல் என்னை
அனுமதிப்பாயா  .....?

அலகு குத்தி காவடி ...
எடுப்பார்கள் .......
உன் அழகு குத்தி ....
காதல் செய்கிறேன் ....
அடுத்த  நொடி கூட
உனக்காகவே உயிர்.....
வாழ்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன்

உனக்காகவே உயிர் வாழ்கிறேன்

என்னுடன் பேச ....
துடிக்கும் இதயங்கள் ....
ஆயிரம் ஆயிரம் .....!!!

உன்னோடு மட்டும்...
பேசத்துடிக்கும்  என் ....
மனசை ஒருமுறை ....
நேசித்துப்பார் ....!!!

என்னை விட உன்னை ...
அப்படி நேசிக்க யாரும் ....
இருக்கமாட்டார்கள் ....
உனக்காக பலர் வாழலாம் ....
நானோ .....
உனக்காகவே உயிர்.....
வாழ்கிறேன் ....!!!

+
கவிப்புயல் இனியவன் 

குடைக்குள் பெய்யும் மகிழ்ச்சி

மழை .................!
பெய்யும் வரை காத்திருக்கும் .....
தோகை மயில் போல் .....
என்னவளும் காத்திருந்தாள் .....!!!

ஒரு ....................!
குடைக்குள் இரு உடல்கள் ....
நனைந்தது பாதி நனையாதது பாதி .....
வேண்டுமென்று ஒரு உரசல் .....
வேண்டாமல் ஒரு உரசல் .....
ஒரு குடைக்குள் ஊடல் கிண்டல் ....
குடைக்குள் தூற்றல் மழைபோல் .....
மகிழ்ச்சி பெய்துகொண்டே இருந்தது ....!!!

நனைந்து கொண்டிருந்தது உடைகள் ....
நனைய தொடங்கியது மனசு .......
ஓரக்கண்ணால் செல்ல பார்வை ....
சுட்டு விரலால் ஒரு சின்ன சுரண்டல் .....
பெய்யும் மழையின் அழகை ரசிப்பதே .....
எங்கள் எண்ணம் எங்களை நனைபப்தில்லை ....
மழையில் இன்பத்தை குடைக்குள் ..........
ரசிப்பது இன்பத்தில் இன்பம் .....!!!

முள்ளில் மலர்ந்த பூக்கள் 30

உன்
இதய சிறை கைதி நான் ....
நினைவுகளால் மீண்டும் ...
விலங்கிடாதே .....!!!

உன் பார்வையால் ...
கவிஞனாகினேன் ....
நீ காதலித்தால் ...
பித்தனாகிவிடுவேன் ....!!!

உன் கண்ணில் காதல் ....
இல்லை - கண்ணாடியை ....
பார் உன் கண்ணுக்குள் ....
நான் இல்லை .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1030

இறக்கிவை உன் சுமையை ...

நிச்சயமாக நீ
என் நினைவுகளால் ....
வதைக்கப்படுகிறாய் ....
இங்கு என் இதயம் ...
கண்ணீர் விடுகிறது ....!!!

என் இதயம் ....
வீதியோர சுமைதாங்கி ....
இறக்கிவை உன் சுமையை ...

காதல் ...
ஊதும் பலூனுனை போல் ....
அளவாக காற்றை ....
ஊதவேண்டும் .....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

உன்னையும் சுமக்கிறேன் ....!!!

உன்னை காதலிக்கும் ....
போதே கற்று விட்டேன் .....
நீ தரும் வலியை எப்படி ....
சுமப்பதென்று .....!!!

உனக்கு என் ஞாபகங்கள் ....
பறக்கும் பஞ்சு ....
எனக்கு தலையணை பஞ்சு ....
தினமும் அதில் தூங்குகிறேன் ....!!!

காதல் இரு வழி பாதை ....
எனக்கோ இரு வலி பாதை ....
உன்னையும் சுமக்கிறேன் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
1028