இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 30 டிசம்பர், 2017

மன்னித்துவிடு......!

வலையில் சிக்கிய
பூச்சி நான்.....
சிலந்தியாக வந்து....
விழுங்கிவிடு.....!

என் கவிதை .....
சிரமப்படுத்தினால்
மன்னித்துவிடு......!

உன்னை சுற்றி....
வந்தேன்........
முதல் சுற்றே....
இறுதிசுற்றாகிவிட்டது....!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

காதலனை இழந்தாள்....

மதுவுக்கு ஆசைப்பட்டு.....
மதுக்கிண்ணத்தில்....
விழுந்த புழுவானேன்.....!

நீ
அணியப்போவது....
மலர்மாலையா...?
மலர் வளையமா...?

மணிமேகலை.......
காதலனை இழந்தாள்....
காவியமானாள்......
காவியமும் காப்பியமும்......
காதல் தோல்வியே.....!

@
கவிப்புடயல் இனியவன்
கஸல் கவிதை

வெள்ளி, 29 டிசம்பர், 2017

காதல் ஒரு பூச்சியம்.....

பசியோடு......
வாழகற்றவன்......
காதலில்லாமல்.....
வாழ கற்றுகொள்ள.....
தவறி விட்டேன்.....!

காதல் ஒரு பூச்சியம்.....
ஏக்கத்தோடு......
ஆரம்பித்து............
ஏமாற்றத்தோடு......
முடிகிறது..........!

அன்பே வா.......
இன்பவலியோடு.....
இவ் உலகை விட்டு.....
பறந்து விடுவோம்.....!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

காதலே புகைந்துவிட்டதோ...?

காதலிலும்.....
கண்ணாம்பூச்சி
விளையாட கற்று.....
தந்தவள் -நீ.....!

இதயத்திலிருந்து....
கவிதை வரும்.....
இதயமே கலங்கினால்.....
கவிதை எப்படி வரும்...?

ஜோடியாக புகைப்படம்....
எடுத்தோம் ......
அதனால் தான்.....
காதலே புகைந்துவிட்டதோ...?

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

ஈரகுணத்தை.என்னில் காட்டு......

ஈரகுணத்தை.....
என்னில் காட்டு.....
தலையணையில்.....
காட்டாதே......!

காதல் .......
ஒரு சூதாட்டம்.......
தலையும் விழும்......
பூவும் விழும்.......!

என் இதயத்தை....
கிள்ளி வெளியே.....
எடுத்துப்பார் -உன் 
முகதோற்றத்தில்....
இருக்கும்.....!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை




வலிக்கும் இதயம்.....

என் கவிதை......
உனக்கு வரிகள்.....
எனக்கு வலிகள்....!

துடிக்கும் இதயம்.....
எல்லோருக்கும்.....
இருக்கும்.........
வலிக்கும் இதயம்.....
என்னிடமே........
இருக்கிறது........!

காதல் கண்ணில்....
ஆரம்பித்து......
கல்லறையில்.........
முடிகிறது..........!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

நீ தந்த காதல்......!

நீ....
ஆயிரம் வலியை.....
தந்தாலும்.......
காதலை தந்தமைக்கு.....
நன்றி......!

பயமின்றி என்......
இதயத்திலிருந்து.......
ஓடி விளையாடு.......
தள்ளிவிடமாட்டேன்.....!

இப்போதும்......
இதயம் துடிக்கிறது.....
ஒரே ஒரு காரணம்......
நீ தந்த காதல்......!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

மீண்டும் நீ வருவாய்.....

வெளியேறியது ........
நீ...........
வலியை சுமந்தது......
நான்.........!

உன் காதல்.....
ரோஜா இதழ்......
நினைவுகள் .......
ரோஜா முள்...........!

நம்பிக்கை இழக்காத......
இதயம்......
மீண்டும் நீ வருவாய்.....
நம்பிகையோடு........
துடிக்கிறது...........!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

சனி, 9 டிசம்பர், 2017

என்னைமறந்து விடு......

நீண்ட காலத்துக்கு......
பின் சந்தித்ததால்.....
காதலர் நாம்.......
நண்பரானோம்.........!

இருபத்து நான்கு......
மணி நேரமும் இரவாக.....
இருப்பது எனக்கு.......
நீ .....................
விலக்கியபோது....!

தயவு செய்து என்னை.....
மறந்து விடு......
உன் நினைவுகள் இல்லாத......
உலகில் வாழ்கிறேன்.....!

&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 13
கவிப்புயல் இனியவன்

காதலுடன் பேசுகிறேன்

உன்னை ........
ஒளிரவிட்டு......
என்னை கருக்கும்......
திரி நான்........!

காதலில் 
தோற்றவனுக்கு........
கண்ணீர்தான் வரும்....
உன்னால் எனக்கு.....
கவிதை வருகிறது.....!

உனக்கு ........
பிடிக்காத சொல்......
எனக்கு.....
எப்போதும் பிடித்த........
சொல் - காதல்....!

&
காதலுடன் பேசுகிறேன் 
கஸல் கவிதை 12
கவிப்புயல் இனியவன்

வியாழன், 7 டிசம்பர், 2017

காற்றுக்கு வாசனை இல்லை....

காற்றுக்கு
வாசனை இல்லை....
நீ வரும் போது.....
உணர்கிறேன் காற்றில்.....
வாசனையை ....!

நீருக்கு .......
நிறம் இல்லை....
நீ ........
நீராடும் போது.....
பார்கிறேன் அதன்
நிறத்தை .....!

ஒரு......
முறை என்னை.....
பார்த்துவிடு....
ஒரு.......
வார்த்தை என்னோடு....
பேசிவிடு - உயிரே
உன் நினைவால்.....
துடிக்கிறேன்........!

&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
கே இனியவன்
இதயம் கவரும் கவிதைகள்

உன் நினைவால்துடிக்கிறேன்.........!

நீ ...
ஒருமுறை....
கண் சிமிட்டினால்....
ஓராயிரம் கவிதை....
எழுதுகிறேன்....!

ஒரு நொடி ......
பேசாது இருந்தால்
ஆயிரம் முறை இறந்து
பிறக்கிறேன் ....!

உயிரே ......
மௌனத்தால்.....
கொல்லாதே ...
உன் நினைவால்....
துடிக்கிறேன்.........!

&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
கே இனியவன்
இதயம் கவரும் கவிதைகள்

உன் நினைவால்துடிக்கிறேன்.........!

நீ ...
ஒருமுறை....
கண் சிமிட்டினால்....
ஓராயிரம் கவிதை....
எழுதுகிறேன்....!

ஒரு நொடி ......
பேசாது இருந்தால்
ஆயிரம் முறை இறந்து
பிறக்கிறேன் ....!

உயிரே ......
மௌனத்தால்.....
கொல்லாதே ...
உன் நினைவால்....
துடிக்கிறேன்.........!

&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
கே இனியவன்
இதயம் கவரும் கவிதைகள்

தாயாக படைத்தருளுவீராக.....!

தாயே உன்......
நினைவு போதெல்லாம்
இதயம் துடிக்கவில்லை.....
இதயம் வெடிக்கிறது......
நரம்புகள் இரத்தத்தை.....
கடத்தவில்லை ......
உன்  உருவத்தையே
இரத்தமாய் கடத்துகிறது ....!

இறைவா ........!
படைப்பது உன்.....
தொழில் என்றால் .......
எனக்காக  படைப்பை......
செய்தருளிவீராக.......
மீண்டும் என் தாயை......
எனக்கு தாயாக
படைத்தருளுவீராக.....!

&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
கே இனியவன்
இதயம் கவரும் கவிதைகள்

புதன், 29 நவம்பர், 2017

வலிக்கும் இதயத்தின் கவிதை -203

 என்னை மன்னித்துவிடு .....
 என்று சொல்லும்போதே.....
 நான் இறந்துவிட்டேன்.......!
 இறைவா மரணத்தை கொடு......
 அப்போதென்றாலும் ......
 அருகி...

திங்கள், 27 நவம்பர், 2017

வலிக்கும் இதயத்தின் கவிதை -203

என்னை
மன்னித்துவிடு .....
என்று சொல்லும்போதே.....
நான் இறந்துவிட்டேன்.......!

இறைவா
மரணத்தை கொடு......
அப்போதென்றாலும் ......
அருகில் வருகிறாளா ..........
பார்ப்போம்...!

இதயத்தை .....
உயிரோடு புதைத்தேன்......
நீ எனக்கு இல்லையென்று.....
முடிவாகியபின்........!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பதிவு - 203

வியாழன், 23 நவம்பர், 2017

நீ ராஜ வாழ்க்கை வாழ்கிறாய்

உன்னை
பார்த்து நான்கு பேர்
திட்டும் கடன்காரனாக
இல்லாமலும்....!

நீ நான்கு .....
பேரை பார்த்து திட்டும்....
குடிகாரனகவும் .....
இல்லாமல் இருந்தால்.......
நீ ராஜ வாழ்க்கை........
வாழ்கிறாய்.............!

&
கவிப்புயல், கவிநாடியரசர்
***********இனியவன்.............

ஞாயிறு, 19 நவம்பர், 2017

பணம்

பிறந்தவுடன்
பாதள அறைக்குள் சிறை
பணம்

@@@
ஹைகூக்கள்
கவிப்புயல் இனியவன்

சனி, 18 நவம்பர், 2017

எப்படிகண்டுபிடிப்பாய்.....?

காணாமல் போனால் ......
கண்டுபிடித்துவிடலாம்......
உனக்குள் காணாமல்......
போன என்னை எப்படி.....
கண்டுபிடிப்பாய்.....?

காதலை மறைக்க......
முடியாது.......
கழுத்தில் உள்ள......
தாலியை சேலையால்....
மறைப்பது போல்....!

நீ
பலாப்பழம் போல்.....
இதயத்தில் அன்பை......
வைத்துக்கொண்டு......
வார்த்தையை முள்ளாய்....
கொட்டுகிறாய்.....!

&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 11
கவிப்புயல் இனியவன் 

வியாழன், 16 நவம்பர், 2017

உன் தாலி........!

பாவம் என் காதல்....
புண்ணியமாய்.....
கிடைத்த உன்னை .......
இழந்துவிட்டது.....!

என்னை ஏமாற்றிய.......
அடையாள சின்னம்......
உன் தாலி........!

எதுவுமே .......
நிலையில்லை.....
அனுபவத்தில்
உணர்த்தினாய்.........
திருமணத்தில்...........!

&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 10
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 14 நவம்பர், 2017

காதலுடன் பேசுகிறேன்

காகித பூவாக இரு ......
அப்போதுதான் .....
வாட  மாட்டாய் .......!

உன் ......
கண்ணை விட ......
என் .......
கண்ணீர் அழகானது .....!

என் இதயம் .....
மட்டும் தான் ......
இருவருக்காக துடிக்கும் .....
உன்னிடம் இதயம் .....
இல்லாததால் ..........!

&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை 09
கவிப்புயல் இனியவன்

கண்ணீரோடு

இலந்தை முள் மீது .....
தூங்குவதும்.....
உன்னை நினைவோடு .....
தூங்குவதும்.....
ஒன்றுதான் ..........!

உன் ஞாபகங்களை .....
சித்திரமாக்குகிறேன் .......
நீயோ  கிறுக்கும் ......
கிறுக்கன் என்கிறாய் .....!

கண்ணீரோடு .......
அலைந்தால் தான் ......
உன் காதலை
பெற முடிகிறது .........!

&
காதலுடன் பேசுகிறேன்
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

திங்கள், 13 நவம்பர், 2017

எல்லாம் உன்னையே எழுதும் ....!

இதயம் நீ இருக்கும் வரை துடிக்கும் ....
கண்கள் உன்னையே பார்க்கும் ............
கால்கள் உன் தெருவுக்கே நடக்கும் ......
எண்ணமெல்லாம் உன்னையே சுற்றும் ...
வரிகள் எல்லாம் உன்னையே எழுதும் ....!

&
அன்பே உனக்காக கவிதை
கவிப்புயல் இனியவன்

காதலே நீ நீடூடி வாழ்க ...!!!

கனவு இல்லையேல் .....
இரவு அழகில்லை .....
காதல் இல்லையேல் .......
உயிர்களுக்கு அழகில்லை .....
காதலே நீ நீடூடி வாழ்க ...!!!

&
அன்பே உனக்காக கவிதை
கவிப்புயல் இனியவன்

அன்பே உனக்காக கவிதை

பேச துடிக்கும் என் உதடு ......
தடுக்கிறது  உன் மௌனம் .....
பேசு பேசு என்கிறது மனம் ......
வலி தாங்க தயாராகும் இதயம் .....
பிறக்கிறது ஆயிரம் கவிதை ......!

&
அன்பே உனக்காக கவிதை
கவிப்புயல் இனியவன் 

சனி, 11 நவம்பர், 2017

சென்ரியூ - கமல்

சென்ரியூ
-------------
கவிஞனை
காவாளியாக்கியது
கமல்
&
கவிப்புயல் இனியவன்

வியாழன், 9 நவம்பர், 2017

செவ்வாய் கிரகதோஷ.....

செவ்வாய்.......
கிரகத்துக்கு......
போக துடிக்கும்.......
மனம்.........
செவ்வாய் கிரகதோஷ.....
பெண்ணோடு வாழ......
மறுக்கிறது.......!

&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்

இரண்டு மனம் வேண்டும்.

இறைவா.....
இரண்டு மனம்
வேண்டும்..........!

உன்மீது பற்றை.....
அதிகரிக்க வேண்டும்....
என்மீது பற்றை.....
குறைக்கவேண்டும்....!

&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 7 நவம்பர், 2017

வலியையா புரியப்போகிறாய்.......?

நீ ....
என்னை விட்டு....
பிரிந்து சென்று....
விட்டாய்.......

உனக்கும் சேர்த்து.....
என் இதயம் வலிக்கும்...
வலியை யார் அறிவர்......?

என்னிடம்.....
கொட்டிக்கிடந்த.....
காதலையே உன்னால்.....
புரிந்துகொள்ள
முடியவில்லை.......
வலியையா .....
புரியப்போகிறாய்.......?

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்
பதிவு -202

ஞாயிறு, 5 நவம்பர், 2017

மனம் குளிர்ந்தேன் ....!

மனதில் இருள் ....
கருவறையில் .....
இறைவனுக்கு ....
காட்டும் ஒளியில் ....
மனம் குளிர்ந்தேன் ....!

&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்

ஆன்மீக கஸல்

நீந்த துடிக்கும்
மீன் குஞ்சு போல் ....
இறை ஆசை .....(+)

வறண்டிருக்கும்
குளம் போல் ......
மனம் ......(-)

&
ஆன்மீக கஸல்
கவிப்புயல் இனியவன்

சனி, 28 அக்டோபர், 2017

சென்ரியூ

சர்க்கரை விலையேற்றம்
சந்தோசப்படுகிறார்
சர்க்கரை நோயாளி
&
சென்ரியூ

வெள்ளி, 27 அக்டோபர், 2017

ஹைக்கூ இனியவன்

இனித்த சர்க்கரை
கசக்கிறது
விலையேற்றம்

$
ஹைக்கூ
கவிப்புயல் இனியவன் 

வியாழன், 19 அக்டோபர், 2017

சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்கள்

செயற்கை சுவாசத்தில்
வாழ் நாள்முழுவதும் வாழ்கிறது
தொட்டி மீன்

@@@

ஏழை கொடுத்த மனு
வரிசைப்படுத்தியிருக்கிறது
சவரக்கடை

@@@

நன்னீர்
விஷக்கிருமியாகியது
டெங்கு

@@@

அறுவடை செழித்தும்
வாழ்க்கை செழிக்கவில்லை
விவசாயக்கடன்

@@@

காட்டுக்கு ராஜா
என்ன தவறு செய்தாரோ
மிருக்ககாட்சி கூடத்தில் சிறை

@@@

கவிப்புயல் இனியவன்
சிந்திக்க வைக்கும் ஹைக்கூக்கள்

செவ்வாய், 17 அக்டோபர், 2017

பட்டாசு ஹைக்கூக்கள்

பட்டாசு ஹைக்கூக்கள்
--------------------------
பணம்
கருகிக்கிடக்கிறது
பட்டாசு

@@@

சந்தோசப்படுத்தி
சந்ததியை அழிக்கிறது
பட்டாசு

@@@

எங்களிலும்
பருவமடையாதவர்கள் இருக்கிறார்கள்
வெடிக்காத பட்டாசு

@@@

ஒவ்வொரு வீடும்
ஏவுகணை மையமாகிறது
ஈக்குபட்டாசு

@@@

மனதுக்குள்
பலவர்ணங்களுடன் வெடிக்கிறது
ஏழைவீட்டில் பட்டாசு

&
கவிப்புயல் இனியவன்

இனிய தீபதிருநாளின்

தீப திரு நாளில்......
தீய எண்ணத்த எரித்துவிடு.....
தீய செயலை தூக்கியெறி......
தீய பார்வையை மறைத்துவிடு.....
தீய பேச்சை துப்பியெறி......
தீய தொழிலை செய்யாதே......!

தீங்கு செய்வாரோடு சேராதே......
தீச்சொல் கூறி திரியாதே.......
தீயவை எல்லாம் ஒழித்துவிடு.......
தீப காந்திகல்போல் வாழ்........
தீம் சொல்லால் பேசு..........
தீரம் கொண்டசெயல் செய்.....
தீர்த்தன் அருளை பெற்றுக்கொள்.....!

&
இனிய
இனிப்பான
இனிய தீபதிருநாளின்
இனியவனின்
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்

உன் அழைப்புக்காய்.....!

நீ....
காதலை....
மறுத்த அந்த நொடி.....
இதயம் கல்லறை......
சென்றுவிட்டது.....!

மூச்சு மட்டும்.......
பேச்சுக்காக இயங்குது.....
தோற்றுப்போனாலும்.....
தேடிக்கொண்டிருக்கிறேன்.....
உன் அழைப்புக்காய்.....!

எனக்காக ஒருமுறை....
வந்துவிட்டு போ......
இல்லை வந்து என்னை.....
கொண்றுவிட்டு போ....!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

திங்கள், 16 அக்டோபர், 2017

பிரம்ம முகூர்த்த

பிரம்ம முகூர்த்த நேரம்
ஒலித்தது ஆலயமணி ஓசை
கவலையோடு கோபுர புறா

&
கவிப்புயல் இனியவன்
ஹைக்கூ  தொடர் 

உன் காதல் வேண்டும் .....!

கனவிலும் .........
நினைவாலும் ......
கொல்வது  போதாதென்று ......
மௌனத்தாலும் ......
கொல்கிறாய் ..........
தயவு செய்து நிஜமாய்......
கொண்றுவிடு .........!

என் குறைந்த பட்ச....
கோரிக்கை நீ வேண்டும் .....
அதிக  பட்சகோரிக்கை .....
நீயே  வேண்டும் ........
முடியாதுபோனால் ........
உன் காதல் வேண்டும் .....!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்  

ஆண் மரங்கள்.....

ஒரு......
முறை கண்....
சிமிட்டி விடு.....
பூக்காமல் இருக்கும்.....
ஆண் மரங்கள்.....
பூக்கட்டும்.....!

கண் ஓரத்தில்....
சிறு கண்ணீர் சிந்து....
பாலவனத்தில்......
நீர் ஊற்று வரட்டும்........!

&
சின்ன சின்ன காதல் வரி
கவிப்புயல் இனியவன்

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

கானா பாடல் - சென்ரியூ

கானா பாடல் - சென்ரியூ
--------------------------------
சின்ன வீடு சித்திரா
பெரிய வீடு கட்டுறா
மனைவி விவாகரத்து

வெள்ளி, 13 அக்டோபர், 2017

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்

ஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம்
--------------------------------------------------
மூன்று அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். - ( இந்த விளக்கத்தை சிறப்பாக கூறியவர் முனைவர் ம.ரமேஷ்)

கவிப்புயலின் ஹைக்கூக்கள்
--------------------------------------------

இட்ட முட்டை சுடுகிறது
எடுத்து சென்றாள் கருவுற்ற பெண்
ஏக்கத்தோடு பார்த்தது கோழி

^^^

இந்த ஹைக்கூவில் " இட்ட முட்டை சுடுகிறது  " எனவே அப்போதுதான் கோழி முட்டையிட்டு இருக்கிறது. " எடுத்து சென்றாள் கருவுற்ற பெண் " தன் இனத்தை பெருக்க தயாராக இருக்கும் பெண்........" ஏக்கத்தோடு பார்த்தது கோழி " உன்னைப்போலவே நானும் என் இனத்தை பெருக்கும் பெண். என் இனத்தை
கொல்கிறாயே என்ற ஆதங்கம் கோழிக்கு........ எனவே மூன்றாவது அடி எதிர்பாராத திருப்பமாக இருக்கவேண்டும். தெரிந்த முடிவாகவோ. முதல் இரண்டு
அடிக்கு நேர் சார்பாகவோ இருக்க கூடாது.



^^^^^

குடும்ப தலைவர் மரணம்
ஒன்பது பிள்ளைகளும் ஓலம்
கருத்தடை செய்த நாய் சாபம்


" குடும்ப தலைவர் மரணம் " வழமையான ஒரு நிகழ்வு "ஒன்பது பிள்ளைகளும் ஓலம் " இதுவும் வழமையான நிகழ்வு மூன்றாம் அடி திருப்புமுனையாக அமைகிறது. " "கருத்தடை செய்த நாய் சாபம் " தான் மட்டும் ஒன்பது குழந்தையை பெற்ற தலைவன் தன் வீட்டு நாய்க்கு கருத்தடை செய்திருக்கிறார்.

மேலும் தொடரும்.........................

புதன், 11 அக்டோபர், 2017

தகவல் அறியும் சட்டத்தின்......

தகவல் அறியும் சட்டத்தின்......
மூலம்  கேட்கப்போகிறேன்......
நீ என்னை காதலிக்கிறாயா....?

தேச வழமை சட்டத்தில்...
உன்னை கைது செய்ய முடியது.....
தேக வழமை சட்டம் இருந்தால்.....
உன்னை கைதுசெய்யனும்......
இதயத்தை திருடிய குற்றத்துக்கு.....!

&
வலிக்கும் இதயத்தின் கவிதைகள்
கவிப்புயல் இனியவன்

ஞாயிறு, 8 அக்டோபர், 2017

இனியவனின் கலவை கவிதைகள்

இனியவனின் கலவை கவிதைகள்
----------------------------------------------
1) ஒரு ஹைக்கூ
-------------------------
ஐம்பதில் முதுகு கூனவேண்டும்
இருபதில் முதுகு கூனுகிறது
மூடைசுமக்கும் தொழிலாளி
-------------------
2) ஒரு சென்றியூ (நகைச்சுவை ஹைக்கூ)
-------------------------
அம்மா வயிற்றில் போட்டார்
ஆசிரியர் புத்தகத்தில் போட்டார்
முட்டை
------------------
3) ஒரு ஹைபுன்
------------------------
காத்திருப்பேன் அவள் வருவாள் ..
பக்கத்தில் அவள் அண்ணன் ...
சைக்கிளில் வருவார் ..
அருகிலே செல்வேன் ..
கண்ணால் கதைப்பேன் ..
அவள் யாடையால் கதைப்பாள் ..
அண்ணன் கிட்டவரும் போது..
என் நடை வேகமாகும் ...
பாடசாலைதான் எனக்கு காதல் சாலை ..
கொப்பியை பரிமாறும் போது ..
கடிதமும் பரிமாறும் ...
விழுந்தது கடிதம் நிலத்தில் ..
கண்டார் ஆசிரியர் தந்தார் ..
முதுகில் நல்ல பூசை ..
நண்பர்கள் கிண்டல்
நண்பிகள் அவளை கிண்டல் ..
காலம் காதலாகியது ..
கல்வி கரைக்கு வந்தது ..
காதலும் கரைக்கு வந்தது ...

^
பள்ளி காதல் தொடரும்
பள்ளிவரை இல்லை
பள்ளி படலைவரை

-----------------------------

4) ஒரு பழமொன்ரியு
-------------------------------
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
நஞ்சாக இருந்தும் அளவு மீறுகிறான்
குடிகாரன்

----------------------

5) ஒரு  லிமரைக்கூ
---------------------------
ஜீரணத்துக்கு குடித்தான் மல்லி
கட்டுப்படுத்த முடியாத விலை உயர்வு
இழைத்து போனது உடல் ஒல்லி

----------------------------
6) ஒரு மைக்ரோ கவிதைகள்
----------------------
பைத்தியம் .......
மாதிரி பேசாதே என்கிறாள்.....
என்னை
பைத்தியமாக்கியவள் .....!!!

---------------
7) ஒரு அணுக்கவிதைகள்..!!!
---------------
மன காயப்படும் கூட‌
ஆறுதல் சொல்ல‌ நீ
வருவாய் என்று ஏங்குது
சொற‌ணை கெட்ட‌
என் இதயம்....!!
----------

8) கானா கவிதை
-----------------------
ஆறடி பனை போல்
வளர்ந்திருக்கும் பெண்ணே
யாரடி சொன்னது ஓரடி குட்டை
பாவாடை போடச்சொல்லி .....?

குதிக்கால் செருப்பணிந்து
குதிரைபோல்போனவளே
குதி இருக்குதுகால் எங்கே ...?

கை பைக்குள் காசை தவிர
கண்டதையும்வைதிருந்தவளே
கை இருக்குதுகைப்பை எங்கே ...?

கண்டதையும் பூசி அழகு காட்டியவளே....
பூசுவதற்கு வர்ணங்கள் இருக்கு ...
உன் முகம் எங்கே .....?
முகம் இருக்குது அழகு எங்கே ..?

----------------
9) ஒரு தலைக்காதல் கவிதை
------------------------------

நல்லவேளை .....
உன்னை ஒருதலையாக ....
காதலித்தேன் .....
நீ காதலனோடு வந்து ....
நலம் விசாரித்தபோது .....
உதடு சிரித்தது ....
இதயம் கண்ணீர் விட்டது ....!!!

போகட்டும் விட்டுவிடு .....
எனக்கென்ன தோல்வியென்ன ....?
புதிதா ...?
நல்லவேளை உயிரே ....
உனக்கு வேதனையில்லை ...
அதுபோதும் என் காதலுக்கு ....!!!
---------------------------------
10) ஒரு காதல் கஸல் கவிதை
---------------------------------

என்னை
தயவு செய்து .....
மரணமாக்கி விட்டு ....
நீ மௌனமாக இரு ...!!!

காதலையும் .....
காதலியையும் ......
மலரோடு ஒப்பிட்டது ...
தப்புதான் உயிரே ....!!!

உன் நினைவுகளால் ...
துருப்பிடித்து விட்டது ...
என் இதயம் - திருத்துவதும்
துரத்துவதும் உன் கையில் ...!!!

---------------------
கவிப்புயல் ,கவி நாட்டியரசர்
-------------இனியவன் --------------------

சனி, 7 அக்டோபர், 2017

காற்றுள்ள போதே தூற்றிவிடு...

 நீந்த மறந்த மீன்கள்
----------------------------
வாழ்க்கையின் சந்தர்ப்பங்களை........

தவறவிட்டஒவ்வொருவனும்.......
நீந்த மறந்த மீன்களே.......
பறவையின் வாயில் அகப்பட்ட......
மீனைப்போல் துடிக்கிறான்.......!

இளமைப்பருவத்தில்கல்வியை.......
கற்க தவறியவன் வாழ்க்கை......
காலத்தில் வறுமையோடு.......
பறவையின் வாயில் அகப்பட்ட......
மீனைப்போல் துடிக்கிறான்.......! 

பெற்றோரை காக்கவேண்டிய......
காலத்தை தவறவிட்டவன்.......
இறந்தவுடன் அவர் நினைவால்.......
துவண்டு கருகிப்போய்.....
நாள்தோறும் துடிக்கிறான்.........!

முதுமை காலத்துக்காய்.......
சேமிக்க தவறியவன்.......
கண்ணீர் கதையுடன்.....
அனாதை இல்லத்தில்.........
ஆயுளை முடிக்கிறான்........!

காற்றுள்ள போதே தூற்றிவிடு......
நீந்தும் சந்தர்ப்பத்தில் நீந்திவிடு.....!

&
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்

உன்னிடம் தொலைந்தேன்..
உணர்வுகளை பகிர்ந்தேன்..
உன் வரவு குறைந்ததால்.....
உயிரற்ற உடலானேன்....!

என்னை மறந்ததேன்.....
கல் சிலையாக்கியதேன்....
கண்ணெதிரே வரமறுத்தால்....
கல்லறையில் சந்திப்போம்....!

&
கவிப்புயல் இனியவன்

சமுதாய கஸல் கவிதைகள் - 11

பல கோடி தர்மம்.....
தொழிலாளிகள் ....
சம்பளம் பாக்கி......
ஊரில் தர்மவனான்......!

வர்த்தக நிலையத்தின்.....
வாணிப பெயர்.....
அரிச்சந்திரன் வாணிபம்....!

உயிர் கொலை பாவம்.....
கருவாட்டுக்கடையில்......
சுவாமிப்படம்.....!

&
சமுதாய கஸல் கவிதைகள் 11
கவிப்புயல் இனியவன்  

வியாழன், 5 அக்டோபர், 2017

சமுதாய கஸல் கவிதை 10

சமுதாய கஸல் கவிதை
---------------------------------

விவசாயி வீட்டில்.....
அடுப்பு எரியவில்லை
வயிறு நன்றாகவே.....
எரிகிறது..........!

நிலம் ....
சேறானால் சோறு.......
வறண்டால்.......
பட்டினி...............!

விவசாயிகளுக்கு.....
பருவ மழை - பன்னீர்
பருவம் தப்பிய மழை....
கண்ணீர்..........!

&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

புதன், 4 அக்டோபர், 2017

கொப்புபாயும் குரங்கு

கொக்கரிப்பவனிடம் வீரமில்லை.....
கொச்சைப்படுத்துபவனிடம் பண்பில்லை.....
கொடுமைப்படுத்துபவனிடம் மனிதமில்லை.....
கொடூரம் கொண்டவனிடம் புத்தியில்லை.....!

கொடிவழிவாழ தர்மம் காக்கும்.......
கொட்டம்போட்டால் தண்டனைவரும்.......
கொண்டாட்டம் கலாச்சாரமாகும்.......
கொடுங்கோல் ஆட்சி நாட்டைக்கெடுக்கும்.....!

கொப்புபாயும் குரங்கு மன உறுதியானது........
கொடும்புலி கொள்கையானது.......
கொக்கின் பொறுமை விசித்திரமானது.......
கொம்புமானுக்கு அழகு மயக்கத்தக்கது.....!

&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

சமுதாய கஸல் கவிதை 07

எங்களை சுத்தமாக்கி.....
தங்களை அசுத்தப்படுத்தும்.....
துப்பரவு தொழிலாளர்கள்.....!

என் வீடு சுத்தம்
குப்பையை
தெருவில் வீசி விட்டேன்....!

காலையில்
தெரு கூட்டப்படும்.....
மதியம் குப்பைவண்டி....
தெருவை குப்பையாக்கும்...!

&
சமுதாய கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்

செவ்வாய், 3 அக்டோபர், 2017

கையசைத்தேன் கண்ணசைத்தாள் (கை)

கையசைத்தேன் கண்ணசைத்தாள்......
கைவிலங்கிட்ட கைதியானேன்........
கைகோர்த்து பேசக்கேட்டேன்........!

கையோடு கை இணையக்கேட்டேன்.....
கை சாத்திட்டு என் கையைப்பிடி.......
கைதியாகிறேன் உனக்காகவென்றாள்.....!

கைநழுவி போகாமல் இருக்க........
கைசாத்திட சம்மதித்தேன்........
கைப்பிடி விழாவும் முடிந்தது.........!

கைவழி இசைபோல் அவள்பேச.......
கைஞ்ஞானமாகியது என் புத்தி.......
கையோடு கைசேர்த்தாள் என்னவள்.....!

&
தமிழோடு விளையாடு
கவிப்புயல் இனியவன்
யாழ்ப்பாணம்

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

சமுதாய விழிப்புணர்வு கவிதை

எத்தனையோ......
கடவுளின் உருவங்கள்.....
அத்தனையையும் அழகாக.....
சிலையாக வடித்துவிட்டான்.....
மனிதன்..........!

இத்தனை கடவுளை வடித்த.......
மனிதனால் ஒரு மனிதனை......
இனங்கான முடியவில்லை.......
அவனுக்கொரு சிலையை.......
வடிக்க முடியவில்லை.......?

&
கவிநாட்டியரசர், கவிப்புயல்
^^^^^^^^^^இனியவன்^^^^^^^^^
சமுதாய விழிப்புணர்வு கவிதை

என்னவளை கண்டுபிடி.....!

என்
மூச்சோடு மூச்சாய்......
இருந்தவளை காணவில்லை....
என் மூச்சு காற்றே.....
என்னவளை கண்டுபிடி.....!

எப்படி
அவளை கண்டுபிடிப்பேன்.....
என்று அஞ்சாதே மூச்சே......
இந்த பிரபஞ்சத்தில்.......
என்னவளின்
மூச்சு கண்ணீரோடு.......
கண்ணீரோடு கலந்திருக்கும்....!

^
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன் 

சனி, 30 செப்டம்பர், 2017

என் மூச்சு நிற்கவேண்டும் ....!!!

உன் அருகில் நானிருந்து ..
என் மூச்சை நீ வாங்கி ...
என் மூச்சு நிற்கவேண்டும் ....!!!

@@@@@

உன்னை தவிர எதையும்
நினைக்காத ஞான நிலையை
என் இதயம் பெறவேண்டும் ....!!!

@@@@@

என்னில் இருக்கும் கண்ணீர்
உனக்கே உரியது -நீயே வலியை
தந்து நீயே எடுத்து விடு .....!!!

@@@@@

நானும் ஒரு இயந்திர மனிதன்
உன் நினைவுகளாலும் -உன்
இயக்கத்தாலும் இயங்குகிறேன் ...!!!

@@@@@

காற்றில்லாமல் வாழ முயற்சிப்பேன்
உன் காதல் இல்லாமல் ஓர் நொடி
கூட வாழ விரும்பமாடேன் ...!!!

@@@@@

கவிப்புயல்  இனியவன்
எஸ் ம் எஸ் கவிதைகள்

முள் வேலிபோடுகிறாய்.....?

இதயத்தில் இருந்து.....
எதற்காக முள் வேலி.....
போடுகிறாய்.....?

தீ மிதிப்பு......
இறைவனுக்காக.......
செய்யவேண்டும்......
காதலுக்காக .....
செய்பவன் - நான் ....!

மயானத்தின்.......
பாதையால் சென்றால்.....
உன்னை அடைய முடியும்....!

^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன் -07
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

காதல் எழுதிவிட்டது.....!

நீ
இதயத்தில் இருந்த .....
காலத்தில் என்....
தலையெழுத்து.....
மாறிவிட்டது.......!

யார் சொன்னது.....?
கண்ணீர் வருகிறது.....
என்று.......
இதயத்தில் இருந்த-நீ
வெளியேறுகிறாய்.....!

என்
ஆயுள்ரேகையை.....
ஆண்டவன் எழுதவில்லை.....
காதல் எழுதிவிட்டது.....!
^^^
கஸலால் காதலுடன் பேசுகிறேன் -06
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
கவிப்புயல்.கவிநாட்டியரசர்
இனியவன்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

"ஆறுமுகம். குமார"சாமி"

என் தந்தை.....
"ஆறுமுகம். குமார"சாமி"

சொத்தில் பற்றற்ற
முகம் ஒன்று.......!

பாசத்தில் வேடம் போடாத ......
முகம் இரண்டு........!

உறவுகளில் பற்றற்ற  ....
முகம் மூன்று........!

உழைப்பில் பற்றுள்ள......
முகம் நான்கு........!

ஒழுக்கத்தில் பற்றுள்ள.......
முகம் ஐந்து...........!

பூரணத்துக்கு பூரணமாய்.....
வாழ்ந்த முகம் ஆறு.........!

என் தந்தை.....
"ஆறுமுகம். குமார"சாமி"

&
குமார சாமி உதயகுமாரன்
கவிப்புயல் இனியவன்

வெள்ளி, 29 செப்டம்பர், 2017

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்-கீ-கு-கூ-

கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!

கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!

கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!

கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும் .....!!!

----
குப்பையில் போட்டாலும் ....
குண்டுமணி மங்காது .....
குடிசையில் வாழ்ந்தாலும் ....
குடிகள் போற்றும்படி வாழ்.....!!!

குடி குடியை கெடுக்கும் ....
குணம் கெட்டாலும் குடி கெடும் .....
குப்பை கூடினாலும் குடி கெடும் ....
குருவோடு பகைக்கின் குடி கெடும் ....!!!

கும்பிடு பெற்றோரை கும்பிடு .....
குரல் கொடு அநீதிக்கு குரல் கொடு ....
குறிப்பெடு படிப்பில் குறிப்பெடு.....
குறள் வழிவாழ் குறிக்கோளோடு வாழ் ....!!!

குற்றம் செய்யாதே தலை குனியாதே ....
குன்னம் (அவமானம்) படாதே அவதி படாதே ....
குறிக்கோள் ஒன்றில்லாமல் வாழ்ந்து பழகாதே ....
குருவின் துணையிலாமல் வித்தை பழகாதே.....!!!

-------------

கூடு துறந்து போனால் .....
கூச்சலிட்டு பயனில்லை ....
கூட்டுறவு வாழ்கை முறையில் ....
கூச்சலிடல் தவிர்க்க முடியாது ....!!!

கூடா ஒழுக்கம் வாழ்க்கைக்கு கேடு .....
கூட்டு குடும்பம் வாழ்கைக்கு பலம் .....
கூடி பேசுதல் சச்சரவை கொண்டுவரும் .....
கூடி பேசினால் மனக்குழப்பம் தீரும் .....!!!

கூத்தாடி பிழைப்பது குற்றமில்லை .....
கூத்தாடியே ஊர் சுற்றுவது கேவலம் .....
கூத்து தமிழனின் பாரம்பரியம் .....
கூட்டத்தோடு கூத்தை ஆதரிப்போம் ....!!!

கூக்குரல் கூட்டத்தில் எழுந்தே தீரும் .....
கூனல் முதுமையில் வந்தே தீரும் .....
கூந்தல் என்றால் உதிர்ந்தே தீரும் .....
கூட்டம் என்றால் குழப்பம் இருந்தே தீரும் .....!!!

-----

கெடுதி கொண்ட உணவுகள் வேண்டாம் ....
கெடுதி கொண்ட உணர்வுகள் வேண்டாம் ....
கெடுதி என தெரிந்த செயல்கள் வேண்டாம் ....
கெடுதி கொண்ட எண்ணங்கள் வேண்டாம் ....
கெடுதிக்கு கெடு வைக்காமல் வாழ்ந்திடுவோம் .....!!!

கெட்ட உணர்வால் கெட்டார் கோவலன் ....
கெட்ட எண்ணத்தால் கெட்டனர் கௌரவர் .....
கெட்ட செய்யலால் கெட்டார் ராவணன் ....
கெட்ட நடத்தையால் கெட்டுப்போகாதே .....
கெட்டவன் என்றபெயர் சடுதியில் நீங்காது ....!!!

கெச்சைக்கு தேர் கொடுத்தான் பாரி ....
கெட்டியாய் வள்ளல் பெயர் பெற்றான் பாரி ....
கெம்பி செய்யும் செயல்களால் கெட்டவர் அதிகம் ......
கெக்கலித்து சிரிக்கவைக்கும் செயல்வேண்டாம் ....
கெடியுடன் கெழி கொண்ட வாழ்க்கை வாழ்வோம் ....!!!
-----------

கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!

கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!

கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!

கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும் .....!!!
-------

கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!

கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!

கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!

கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும் .....!!!
--------

கேடயம் வாழ்க்கைக்கு ஒழுக்கம் கேடயம் ...
கேவலம் பிறரில் சாந்திருப்பது கேவலம் ....
கேசவன்(இறைவன் ) நினைவில் வாழ்தல் கேடயம் ....
கேள்வன்(கணவன் ) மனைவிக்கு கேடயம் ....

கேட்பார் சொல் கேளாதே
கேட்டவுடன் எதையும்  கொடுக்காதே ....
கேள்விக்கு பிழையாய் பதிலளிக்காதே ....
கேவலமானவன் என யாரையும் கருதாதே ....!!!

கேணியில் குளிப்பது மனதுக்கு உறுதி
கேட்டறிதல்   அறிவுக்கு  உறுதி ....
கேசம் வளர்ப்பது அழகுக்கு உறுதி ....
கேளார் (பகைவர் ) துறத்தல் வாழ்கைக்கு உறுதி ....!!!
----------

கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!

கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!

கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!

கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும் .....!!!
---------------

கீரியும் பாம்பும் போல் வாழாதே .....
கீதமும் ஓசையும் போல் வாழ்.....
கீழ்மரம்(அச்சு) போல் எதையும் தாங்கு ....
கீர்த்தியுடனும் ஆயுளுடனும் வாழ்வாய் ....!!!

கீர்த்தனை மனதுக்கு நன்று .....
கீரை கண்ணுக்கு நன்று ....
கீரம்(பால்) ஆரோக்கியத்துக்கு நன்று ....
கீழ் கிழங்கு உணவை தவிர்ப்பது நன்று ...!!!

கீழ்பால் என்று யாரும் இல்லை ....
கீழ்நிலை என்று எவரையும் எண்ணாதே .....
கீறல் இல்லாமல் வாழ்கை வாழ்ந்திடு ......
கீழ்மை(பண்பு) கொண்டு வாழ்ந்திட பழகு ....!!!

கீர்(சொல்) உறுதி வேண்டும் ....
கீளுடையில் சுத்தம் வேண்டும் ....
கீறலிலும் தெளிவுவேண்டும் ....
கீதை நெறி வாழவேண்டும் .....!!!


இவைகளைப் படித்துப் புரிந்து கொள்ளவே இவ்வளவு நேரம் எடுக்கிறதே எங்களுக்கு
நீங்கள் எப்படி இப்படி வரிகளைப் புரிந்து கருத்தாழமிக்க இலக்கிய நயத்துடன் கவிதை வரிகளை கோர்க்கிறீர்கள் பிரமாதம் ஐயா பிரமாதம்
நன்றியுடன் நண்பன்

உண்மையில் சற்று சிரமமா தான்
முதலில் அகராதியில் சொல்லை தேடி பின்பு வரியை எளிய முறையில் உருவாக்குகிறேன்
நன்றி நன்றி

மிக்க மகிழ்ச்சி கவி அருவி என்றும் உங்களைச் சொல்ல முயுடிம்
உங்கள் கவிதைகள் ஊற்றுக்களாக வருகிறது மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி

உங்களைபோல் கவிதையில் பற்றுள்ளவர்கள் காண்பது அரிது
எல்லா கவிதையும் ரசிக்கும் திறன் எல்லோருக்கும் இல்லை
மிக்க நன்றி .....


 அப்படியோ நிறைய நிறைய பட்டங்கள்  வந்து குவிகிறது
 ஒரு தளத்தில் மகா கவி - என்கிறார்கள்
 இன்னொரு தளத்தில் - ஆத்மான கவி  என்கிறார்கள் ...
 மற்றும் கவினாட்டியாரசர் - என்கிறார்கள் ...
 காதல் மன்னக்கவி  என்கிறாகள் ....

 இவை எல்லாவற்றிலும் எனக்கு பிடித்தது தமிழ் சேனையில் சொன்ன சொல் - கவிப்புயல்.......!!!

-----
மிக்க மகிழ்ச்சி கவி அருவி என்றும் உங்களைச் சொல்ல முயுடிம்
உங்கள் கவிதைகள் ஊற்றுக்களாக வருகிறது - உங்கள் அன்பு ரசிகன் -நண்பன் (இலங்கை)

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - க-கி

கண்ணில் காந்த சக்தியுடன் ....
கடமையை மூச்சாய் கொண்டு....
கதிரவன் முக மலர்வுடன் ஆசியுடன் ...
கண்ணியத்துடன் பணிகளை தொடர்வோம் ....!!!

கட்டளை செய்துவிட்டு நீ மட்டும் ....
கடப்பாட்டில் இருந்து விலக்கிவிடாதே .....
கண்டதே காட்சி கொண்டதே கோலமாகிவிடதே ....
கண்ணால் கண்டதும் கேட்டதும் பொய் .....!!!

கரும்புபோல் பேச்சில் இனிமையும் .......
கதிரவன் போல் மனதில் ஒளிமையும் .........
கற்பூரம் போல்சிந்தனையில் விரைவும் .......
கல்வியும் உடையவனே மாமனிதன் .......!!!

கம்பீரம் என்பது உடல் அல்ல ,செயல் .....
கண்ணியம் என்பது பேச்சல்ல ,நடத்தை ....
கருணை என்பது உதவியல்ல ,அன்பு ......
கடவுள் இருப்பது வெளியே இல்லை ,உள்ளே ......!!!
---------

காற்றை போல் பலமாய் இரு ....
காற்றை போல் மறைமுகமாய் இரு ....
காற்றை அசுத்தபடுத்தாதே .....
காற்று போனால் பேச்சு போகிடும் ....!!!

காடுகளை அழிக்காதீர் ....
காடு மிருகங்களின் வீடு ......
காடுகளை போணுவோம் .....
காடு சமூகத்தில் பொதுச்சொத்து .......!!

காக்கை போல் ஒன்று கூடி வாழ்வோம் ....
காக்கை போல் கற்புடன் வாழ்வோம் ....
காக்கைக்கு கண்மணி ஒன்று பார்வை தெளிவு ......
காக்கை போல் சூழலை பாதுகாப்போம் ........!!!

காதல் என்பது இருபால் கவர்சியல்ல .....
காதல் எல்லாவற்றிலும் அன்பு செலுத்துவது ....
காதல் செய்யுங்கள் இயற்கைமீது ....
காதலோடு காலமெல்லாம் வாழ்ந்திடுவோம் ....!!!
+

இயற்கை மேல் அன்பு செலுத்துவோம்
இயற்கை கவிதை
--------

கிழக்கில் இருந்து ஆதவன் ....
கிழந்தெழும்பும் போதே ....
கிழம்பிவிடு... போராடு ....
கிழக்கின் ஆதவன் நீதான் ....!!!

கிரகதோசத்தை காரணம் காட்டி ....
கிடைக்க பெறும் வாய்பை இழக்காதே ...
கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்து .....
கிரகபதி என்றும் நீதான் .....!!!

கிரகித்தல் திறனை வளர்த்துக்கொள் .....
கிராமமாக அறிவை பெற்றுக்கொள் ....
கிலியை முற்றாக அறுத்து எறி ......
கிருபாகரனின் கிருபை கிடைக்கும் ....!!!

கிறுக்கன் என்று பெயர் எடுக்காதே ....
கிரக சித்திரம் நிம்மதியை கெடுக்கும் .....
கிரக பெயர்ச்சி வானில் ஏற்படும் நிகழ்வு ......
கிரகப்பேர்ச்சியை சாட்டி வாழாதே ....!!!

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - ஓ

கோ என்று வாழ ஆசைப்படாதே .....
ர்மம் மட்டும்கொண்டும் வாழ்ந்திடாதே ....
டம்போல் தத்தளிக்கும் முடிவெடுக்காதே .....
டு ஓடு இலக்கு அடையும் வரை ஓடு .....!!!

ட்டுக்காக அரசியல் நடத்தாதீர் .....
ரங்கட்டி மக்களை ஒதுக்காதீர் ....
ரம்போய் மக்களை விற்காதீர் .....
லமிட்டு மக்களை மயக்காதீர் .....!!!

வியம் போல் மனதை அழகாக்கு....
சையின் சொற்களை இனிமையாக்கு ....
லை போல் விழுந்தாலும் பயன் கொடு .....
ய்வெறாலும் அளவோடு பயன்படுத்து .......!!!

ர் அறிவு தாவரம் முதல் அன்பு செய் ....
ராயிரம் உதவிசெய். பெருமைகொள்ளாதே....
தல் மூலம் உலகை விழிப்படைய செய் ...
ரினமே உண்டு அதுவே மனித இனம் ....!!!

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - ஒ

ளி கொண்ட இதயங்களே .....
ன்றுபட்டு வாழ்வோம் வாருங்கள் ....
ற்றுமைதான் உலகத்தின் தேவை ....
ன்றே குலம் ஒருவனே தேவன் ......!!!

டுக்கு முறைகள் நிலைப்பதில்லை .....
ன்று கூடியே துடைத்தெறிந்தோம் .....
ற்றர் கூட்டம் ஒற்றுமையை கெடுக்கும் ....
ரு அணியில் வாழ்வோம் வாரீர் .....!!!

ழுக்கமாக வாழ்ந்தால் உலகை .....
ரு குடையின் கீழ் கொண்டு வரலாம் .....
ற்றுமையின்றியும் ஒழுகமின்றியும் வாழ்ந்தால் ....
ற்றர்களின் நோக்கமே நிறைவேறும் .....!!!

ளிவட்டம் போல் இதயத்தை மாற்று .....
ளிவு மறைவின்றி பேசிப்பழகு .....
ளி கொண்ட அறிவை பெருக்கிடு .....
டுக்கு முறைக்கு ஒடுக்கு முறைசெய்....!!!

தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள் - ஐ

ம் பொறியை அடக்கி ....
யங்களை தெளிவுபடுத்தி ....
ம்பூதத்தை வசப்படுத்தி .....
ந்து வகை நிலத்தை ஆழும் ...
யன்- நீ - விழிப்போடு வாழ் மனிதா ....!!!

யங்களை தூக்கி எறிந்து விடு ....
க்கியத்தோடு வாழ்ந்து பழகு ....
யக்காட்சிக்கு இடமளிக்காதே .....
யமின்றிஇனிமையாய் பேசிப்பழகு .....
யங்கரன் என்றும் துணையிருப்பான் ......!!!

சுவரியத்தை  நேர்மையாய் உழை ....
க்கிய உணர்வோடு எப்போது வாழ் .....
யிரண்டு கைவிரலால் கடினமாய் போராடு ....
யிரண்டு கால்விரலால் இலக்கில் பயணம் செய் .....
ம்முகன் ஆசி என்று உனக்கு இருக்கும் ....!!!

யா என்று பணிபோடு முதியோரை அழை ....
யர் (தேவர் ) ஆசீர்வாதம் உனக்கு வரும் ....!
ம்புல அறிவோடு அகிலத்தை நேசி .....
வாய் (சிங்கம் ) போல் அரசனாய் வாழ்வாய் ...!
யனே என் அன்பனே என்றும் இன்பமாய் இரு ...!!!