இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

சிறுவயதில் பேசிவைத்த திருமணம்

சிறுவயதில் பேசிவைத்த திருமணம்
-------------------------------------

சிறுவயதில் பேசிவைத்த
பெருவயது திருமணம்
பருவவயதுவரை -பள்ளி
தோழிகளின் கிண்டலும்
கேலியும் சின்ன இன்பத்தை
தந்ததது மறுப்பதத்கில்லை

கல்லூரி வயதில்
கண்ணில் பட்டான் -காளை
ஒருவன் -கண்மூடி திறக்கமுன்
காதல் விதை வந்துவிட்டதும்
உண்மைதான் -என்றாலும்
உறவுகளின் எதிர்பார்ப்பு
பெற்றவர்களின் நம்பிக்கை
காதல் விதைக்கு சுடுநீர்
ஊற்றி விட்டேன் .....!!!

திருமணம் முடிந்தது
குழந்தைகள் பிறந்தன
இன்பமான குடும்பவாழ்க்கை
அமைதியாக ஓடுகிறது ....
என் பிள்ளைக்கு முறைமாமன்
எனக்குப்போல் முறைகேட்டு
சிறுவயதில் பேசிவைக்க -பேச்சை
ஆரம்பித்தார் - வைத்து விட்டேன்
முற்றுப்புள்ளி .....!!!

பெற்றோரே உறவுகளே ...
சிறுவயதில் பேசிவைக்கும்
திருமண முறையை தயவு
செய்து நிறுத்திவைப்போம் ...!!!
உறவுகள் பிரியக்கூடாது
உடமைகள் பிரியக்கூடாது
என்பதற்காக உறவுத்திருமணம்
வேண்டாம் -அது
உளத்துக்கும் உடலுக்கும் கேடு
சொல்லுகிறது விஞ்ஞானம் ,,.....!!!
**********************************************************
(மீண்டும் மீண்டும் உறவுக்குள் திருமணம் செய்தால் குழந்தைகளின்
பல ஆற்றல்கள் மழுங்கும் என்று விஞ்ஞானம் உறுதி செய்துள்ளது )

வாழ்க்கை கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக