இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2021

கவிப்பேரரசு இனியவன்

 இன்றைய சின்னக் கருத்து 

🌹🌹🌹

வியர்வை காயமுன் ஊதியத்தை கொடுத்துவிடு

( நன்நெறி நூல்கள்)


 வியர்வை வரும்வரை

 உழைப்பைக் கொடுத்து விடு

( நற் சிந்தனை)


திங்கள், 23 ஆகஸ்ட், 2021

கவிப்பேரரசு இனியவன்

 உன் 

பார்வையால் ...

ஜனனம் ஆனேன் .....

வார்த்தையால் ....

மரணமானேன் ....!!!


காதல் 

பார்வையில் ...

பிறந்து ....

வார்த்தையால் ....

இறக்கிறது .......!!!


காதலில் தோற்ற ....

ஒவ்வொரு இதயமும் ....

வலித்துக்கொண்டு ...

துடித்துகொண்டிருக்கும்..!


காதலில்லாத ....

ஒவ்வொரு இதயமும் ...

வலிக்காக ........

துடித்து கொண்டிருக்கும் ..


@

கவிப்பேரரசு இனியவன்

🌹

(என் கவிதைகள் உன்னை காயப்படுத்தினால் என்னை மன்னித்து விடு )

சனி, 21 ஆகஸ்ட், 2021

கவிப்பேரரசு இனியவன்

 எனக்கு 

காதல் செய்யத்தான் 

தெரியும் உயிரே .....

எப்படி மறப்பது என்பதை 

என் 

இதயம் மறந்து விட்டது


உனக்கு 

கவிதை எழுதி ...

உன்னை மயக்க வேண்டும் ...

என்று ஒரு துளி எண்ணமும் ...

எனக்கில்லை ....!!!


ஆனால் 

ஒன்று மட்டும் ..

உண்மை

உன்னில் மயங்கா விட்டால் .....

நிச்சயம் கவிதை வராது ....!!!


@

கவிப்பேரரசு இனியவன்



வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

கவிப்பேரரசு இனியவன்

 அந்த நிமிடம்

வரை வலியில்லை

இந்த நிமிடம் வரை

வலியில்லாமல்

இருந்ததில்லை ....

உன்னை காதலித்ததால் ....!!!


இதயத்தில் 

என் ஒவ்வொரு

நரம்பையும்

முற்களாக மாற்றியவள் 

நீ


என் இதயம் 

ஈரமாக இருப்பதால்

காத்திருக்கிறேன் 

உன் இதயமும்

 ஈரமாகும்

என்ற சின்ன

ஆசையுடன் .......!!!