இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 20 அக்டோபர், 2016

காதலில்லாமல் வாழ்ந்திடாதே

காதல் ஒரு காவியம்.......
காவியகதைகளில்.........
சோகங்கள் உண்டு........
சோகத்தை தாங்க .........
தயாராக இரு .............!!!

காதல் ஒரு சமுத்திரம்......
விழுந்தால் மூழ்குவாய்.......
மூழ்காமல் இருக்க.........
கற்றுக்கொள் .............!!!

காதல் ஒரு கத்தரிக்காய்.......
சிலவேளை புரியும் ...............
சில வேளை ருசிக்கும் ...........
சில வேளை கருகும் ............!!!

காதல் ஒரு கானல் நீர்....
உண்மைபோல் .....
சில விடையங்கள் தெரியும் ........
ஆனால் அது முழுப்பொய்..........!!!

காதல் ஒரு கண்ணாடி ........
உன்னையே நீ பார்த்து........
சிரிப்பாய் அழுவாய் ........!!!

காதல் ஒரு கற்பூரம்............
காதல் வெற்றியோ தோல்வியோ............
அடைந்தால் இறுதியில் ................
ஒன்றுமே இல்லை என்று ...............
உணரப்பண்ணும்.........!!!

காதல் ஒரு காற்று..............
தென்றலும் உண்டு ..............
புயலும் உண்டு ...............!!!

காதல் ஒரு நட்பு ...........
தியாகம் செய்யத்தயாராக ............
இரு நட்புதான் கலங்காமல்..........
தியாகம் செய்யும்..............!!!

காதல் ஒரு கற்பு ...........
உடலும் உணர்வும் தண்டவாளம்...........
போன்றது காதலிக்கும் ............
போது இவை இணையக்கூடாது ......!!!

காதல் ஒரு கலாச்சாரம் .........
காதலின் பண்பாடும் ............
பழக்கங்கலும் மரபு வழியாக ..............
கடத்தும் பண்போடு..............
காதலிக்கவும் .................!!!

காதல் ஒரு ஆசான் .......
வலியாலும் வெற்றியாலும்...............
வாழ்க்கை வரும் அதனால் ...............
உனக்கு கவிதையும் வரும்..............
தமிழ் தாய் வளர்தெடுப்பாள்...........!!!

காதல் தான் ...............
உலக வாழ்க்கை ................
காதலில்லாமல் வாழ்ந்திடாதே ............
வாழவும் முடியாது ............!!!

&
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக