இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

இயற்கை

இயற்கை

மரபுக்கவிதை

இயற்கையைக் கண்டு அதில் மனத்தைப் பறிகொடுக்காதவர்கள் கவிஞர்களாகவே இருத்தல் இயலாது. மயிலைக் கண்டு மனம் மகிழ்ந்த பாரதிதாசனார், மயிலை விளித்துப் பாடுகின்றார்.
அழகிய மயிலே ! அழகிய மயிலே ! 
கடிமலர் வண்டு நெடிது பாடத்
தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்
தாடு கின்றாய், அழகிய மயிலே ! 
ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்
மரகத உருக்கின் வண்ணத் தடாகம்
ஆனஉன் மெல்லுடல், ஆடல் உன்உயிர்
இவைகள் என்னை எடுத்துப் போயின
(புளகித்தல் = சிலிர்த்தல்)
இவ்வாறு மயிலின் ஆடலில் மனம் பறிகொடுத்த பாடலாக இஃது அமைகின்றது.

புதுக்கவிதை

மரங்களைக் குறித்து அமைந்த மேத்தாவின் கவிதை வருமாறு : 
நாங்கள்
காற்று மன்னவன்
கால்நடை யாத்திரையைக்
கண்டு முரசறையும்
கட்டியங்காரர்கள் ;
தரையில் நடக்கப்
பிரியப்படாத போது
காற்று எங்கள்
தலைகளின் மீதே
நடந்து செல்கிறது
இவ்வாறாகப் பல்வேறு பாடுபொருள்கள் மரபுக் கவிதையிலும் புதுக்கவிதையிலும் அமைகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக