இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஜூலை, 2013

உரையாடற்பாங்கு

உரையாடற்பாங்கு

மரபுக்கவிதை

உரைநடையில் அமையும் நாடகம், நாவல் ஆகியவற்றில் மட்டுமன்றிச் செய்யுளிலும் உரைநடை அமைவதுண்டு. கலித்தொகை, சிலப்பதிகாரவழக்குரை காதை, காப்பியங்கள், தனிப் பாடல்கள் எனப் பலவற்றில் உரையாடற்பாங்கு மரபுக்கவிதையில் அமைந்துள்ளமையைக் காண்கிறோம்.
சிவப்பிரகாசர், தம் இளவல்களுக்கு மணம் செய்வித்து வாழ்த்தியபோது பாடிய தனிப்பாடல் வருமாறு :
அரனவ னிடத்திலே ஐங்கரன் வந்துதான்
‘ஐயஎன் செவியை மிகவும்
ஆறுமுகன் கிள்ளினான்’ என்றே சிணுங்கிடவும்
அத்தன்வே லவனை நோக்கி
விரைவுடன் வினவவே ‘அண்ணன்என் சென்னியில்
விளங்குகண் எண்ணினன்’ என
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்துநீ அப்படி
விகடம் ஏன்செய் தாய்என
‘மருவும்என் கைந்நீள முழம்அளந் தான்’என்ன
மயிலவன் நகைத்து நிற்க
மலையரையன் உதவவரும் உமையவளை நோக்கி நின்
மைந்தரைப் பாராய் எனக்
கருதரிய கடலாடை உலகுபல அண்டம்
கருப்பமாப் பெற்ற கன்னி
கணபதியை அருகழைத்து அகமகிழ்வு கொண்டனள்
களிப்புடன் உமைக்காக்கவே
இதில் விநாயகனுக்கும் முருகனுக்குமிடையிலான விளையாட்டுச் சண்டையும் முறையீடுகளும் இடம் பெற்றுள்ளன.

புதுக்கவிதை

அரசியல்வாதியிடம் நிருபர் பேட்டியெடுப்பதாய் ஈரோடு தமிழன்பன் கவிதை வழங்குகிறார்.
‘தாங்கள் தவறாது
படிக்கும் பத்திரிகை எது?’
‘படிப்பது வழக்கமில்லை
பத்திரிகைகளுக்குச் செய்தி
வழங்குவது வழக்கம்’
'தாங்கள் அரசியல்துறவு 
பூணுவதாக 
எண்ணம் உண்டா?'
‘இல்லை. . . 
அரசியல்வாதிகளை
அநாதைகளாக்கமாட்டேன் நான்’

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக