இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 ஏப்ரல், 2015

என் காதலும் நீ என் கவிதையும் நீ

என் 
கவிதையை ரசிக்கிறாய் 
கண்ணீர் விடுகிறாய் 
காதலை வெறுக்கிறாய் 
உயிரே ...!!!

என் காதல் வரிகள் 
எழுத்துக்கள் அல்ல -உன்னை 
நினைத்து எழுதும் ஆத்மாவின் 
உயிர் வரிகள் ....!!!

##########

அவளுக்கு
எப்படி இரக்கம் இருக்கும் ..?
அவள் இதயம்
என்னிடமல்லவா இருக்கிறது ..
தயவு செய்து அவளை திட்டாதீர்

எல்லா நினைவுகளையும்
என்னிடம் தந்து விட்டு
ஒரு பிணமாக இருக்கும்
அவளுக்கு எப்படி வலிக்கும் ..?
அவளின் வலியையும் சேர்த்து
நானே சுமக்கிறேன் ...!!!

###########

 
உன் நினைவுகளால் ....
இந்த நொடிவரை இதயம் ...
துடிக்கிறது ......!!!

உன் நினைவுகள் தான் .....
இந்த நிமிடம்வரை ...
கவிதை எழுத வைக்கிறது ....
என் கவிதையும் நீ காதலும் நீ ....!!!

###########

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக