இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 ஜூன், 2015

விஞ்ஞானமும் காதல் கவிதையும்

வேதியியலும் காதலும்

ஐதரசனின் இரண்டு பங்கும் .... 
ஒட்சிசனின் ஒருபங்கும் .... 
சேர்ந்த கலவையே 
நீர் -H2O .....!!! 

என்னுடைய 
நினைவுகளையும் ..... 
உன்னுடைய நினைவுகளையும் .... 
வேதனையுடன் சுமந்து கொண்டு .... 
இருக்கும் நம் காதல் ... 
வேதியல் சூத்திரம் தான் ....!!! 

வகுப்பறையில் .... 
வேதியல் படித்தபடி ....
வேளை தவறாமல் ... 
உன் வேடிக்கைகளையும் 
ரசித்திருக்கிறேன் .....!!! 

வேதியலில் ... 
ரேடியத்தை கண்டு பிடித்த .... 
மேரி கியூரி குடும்பம் .... 
வேதனையான மரணத்தை .... 
அடைந்தார்கள் .... 
புற்றுநோய் ......!!! 

காதலும் .... 
ஒரு புற்றுநோய் .... 
உன் நினைவுகளால் நானும் ... 
என் நினைவுகளால் நீயும் .... 
கொஞ்சம் கொஞ்சமாக .... 
இறந்து கொண்டிருக்கிறோம் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக