இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 18 செப்டம்பர், 2013

கதை கதையாய் கவிதையாய்

உன்
புகைப்படம் எனக்கு வேண்டாம்
அதில் நீ சிரித்தவண்ணம் இருக்கிறாய்
உன்னை நான் சீண்டி நீ கோபப்படும்
அந்த அழகு -நான் பேசியதும்
உன் கண்ணில் வடியும் முத்து துளி
இத்தனை அழகை புகைப்படத்தில்
எப்படி பார்ப்பேன் - இறந்த உடலும்
ஒன்றுதான் ஒரே படத்தை வைத்திருப்பதும்
என்னை பொறுத்தவரை ஒன்றுதான் ....!!!

( கதை கதையாய் கவிதையாய்)