இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

நாளிதழை திறந்து பார்த்தால்.....

மாட்டு....
வண்டியில் போன சுகம்....
மாருதியில் இல்லையடா ....!!!

பாட்டி ....
சொன்ன நம் ஊரைப்போல்.....
பட்டணம் இல்லையடா ....!!!

நாட்டு .....
நடப்பு எல்லாவற்றையும்...
நாழிகையில் சொல்லும் தாத்தா...
நாளிதழை திறந்து பார்த்தால்.....
நாற்றமடிக்குதடா சமூக சீரழிவு....!!!

தெருவோர தாக சாந்தி....
தேர் திருவிழாவை....
சிறப்படையும் வைக்கும்....
இப்போ -தெருவுக்கு தெரு....
கோயில் வந்ததால்.....
தெருவோரத்தை காணோமடா ...!!!

சமுதாய முன்னேற்றம்.....
ஒரு சாண் ஏறினால்...
சமூக சீரழிவு முழம் கணக்கில்.....
ஏறுதடா .......!!!

^
சமூக புலம்பல்
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக