இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 30 ஏப்ரல், 2013


நான் கருவில் உருவான போதே கலைக்க முயற்சித்தாய் 
நான் பிறந்ததும் நெல்மணி கொடுத்து கொல்ல 
நினைத்தாய் -முடியவில்லை -என்னை அழிக்க 

நான் உன் வயிற்றில் இருந்த போது உதைத்தேன்
என்பதற்காகவா என்னை இந்த நரகத்தில் தனியே விட்டு வதைக்கிறாய்? 

நீ ஈன்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை அதற்குள்
எங்கு சென்றாய் என்னை இந்த குப்பைத் தொட்டியில் எறிந்து விட்டு? 

அனாதை என்றொரு ஜாதியையே எனக்காக உருவாக்கிவிட்டாய்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக