இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 செப்டம்பர், 2013

ஞானம் உள்ளிருக்கும்

உண்டியை சுருக்கு 
இறைவன் வருவார் 
என் பார்கள் ...!!! 

ஆசனம் செய் 
ஆண்டவன் வருவார் 
என்பார்கள் ....!!! 

ஆசையை நீக்கு 
ஆண்டவன் தெரிவார் 
என்பார்கள் ....!!! 

இத்தனையாலும் 
இறைவன் தெரிய 
மாட்டார்- நீ 
அறியவும் மாட்டாய் ...!!! 

ஞானம் பயிற்சியால் 
வருவத்தில்லை 
முயற்சியால் வருவது ...!!! 

ஞானத்தை தேடுகிறேன் 
என்றால் தவறு ..! 
தொலைந்த பொருள் 
தான் தேடப்படும் ....!!! 

ஞானம் உள்ளிருக்கும் 
பொருள் -உன் அறியாமை 
மறைத்து வைத்திருக்கிறது 
தேடாதே -கண்டுபிடி ....!!!