இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 12 செப்டம்பர், 2013

என் நண்பர்கள்தான் .....!!!

வாழ்க்கையில் நான் 
பல துன்பங்களை கடந்து 
வந்தபோது -துன்பங்கள் 
சுட்டெரிக்கும் சூரியனாக 
இருந்தன -அப்போதெல்லாம் 
நிழலாக இருந்தவை 
என் நண்பர்கள்தான் .....!!! 

இருக்க இடமின்றி 
உடுக்கடையின்றி 
தூங்க பாயின்றி 
உண்ண உணவின்றி 
இருந்த காலங்கள் எம் மக்கள் 
மத்தியில் அதிகம் அதிகம் 
அப்போதெல்லாம் உதவிய 
ஒரே கரம் அவனணனின் 
நட்புதான் ....!!! 

இன்றுவரை அந்த நட்பை 
மறக்கவில்லை -மீண்டும் 
அவர்களை பார்க்கவும் 
முடியவில்லை -யாருக்கு 
தெரியும் .... 
அவனின் நிலை .....??? 

ஊர் விட்டு ஊர்திரிவோம் 
நாடுவிட்டு நாடுதிரிவோம் 
நட்புள்ள இதயங்கள் எம்மை 
அகதி- என்று சொல்வதில் 
உடன் பிறப்புக்கள் என்றே 
அழைக்கின்றன - இதுதான் 
நாங்கள் விரும்பும் நட்புநாடு ....!!!