இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 14 செப்டம்பர், 2013

அதுதான் உனக்கு விளங்கவில்லை .....!!!

பசும் பாலில் கலந்த 
தண்ணீர்போல் -உன்னில் 
நான் கலந்திருக்கிறேன் 
அதுதான் உனக்கு 
விளங்கவில்லை .....!!! 

நான் வாக்கியமாக 
இருந்தால் -நீ 
சத்தமாக இருக்க வேண்டும் 
மௌனமாக இருக்கிறாய் ....!!! 

சூரிய காந்தி பூ 
சூரியன் திசையில் தான் 
திரும்பும் -நீ 
சந்திரன் வந்தால் தான் 
திரும்புவேன் என்று 
அடம்பிடிக்கிறாய் .....!!! 

கஸல் 472