இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 13 செப்டம்பர், 2013

மனிதனாக அவர்களை பார் ...

உடல் நாற்றம் மறைக்க
உள்ள வாசனையெல்லாம்
உடல் முழுக்க பூசி -உன்
உண்மை அழகை கெடுக்கும்
சுத்த வாங்களே....!!!
உன் வீட்டு கழிவு கிடங்கு
உடைந்து விட்டால் -உன்
மூக்கை நீயே பொற்றி...
வாந்தியும் எடுக்கிறாய் ...!!!

கழிவு அகற்றும் தொழிலாளியை
சற்று நினைத்துப்பார் -உன் கழிவை
தன் கழிவாக தன்னுடல் மேல்
சந்தனம் போல் பூசிவிட்டு வேலைசெய்யும்
சந்திர ஒளியனைபார் ....!!!

மனிதா உன்னிடம் நான் கேட்பது ...?
அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை
வார்த்தையால் -கொடு ...
மனிதனாக அவர்களை பார் ...
அடிமை தொழில் செய்யும் அடிமையாக
பார்க்காதே ...!!!

செய்த வேலைக்கு ஊதியத்தை ...
மனமகிழ கொடு ...!!!
முற்பிறப்பில் அவர்கள் செய்தபாவம்..
என்று -பொருத்தமற்ற ஆன்மீகத்தை
பேசும் ஞானவான்களே ...?
அவர்கள் அழிவை உடலில் சுமக்கிறார்கள்
நீ மனதில் சுமர்ந்து கொண்டே இருக்கிறாய் ...!!!

( கழிவகற்றும் தொழிலாளர்களுக்கு இக் கவிதை
சமர்ப்பணம் )