இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 20 டிசம்பர், 2013

வெந்து துடிக்கும் எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!!

வாழ்க்கையில்... 
நடந்து வந்தபாதையை  
திரும்பி பார்க்கிறேன் 
வாழ்ந்த காலத்தில் 
வாசமும் இருந்தன 
துர் நாற்றமும் இருந்தன 
வலிகளும் இருந்தன 
துடிப்புகளும் இருந்தன ....!!!

பாசத்தோடு உறவாடிய உறவுகள்.... 
பாசத்தை ஒரு முகமூடியாய் 
அணிந்து உறவாடிய உறவுகள்..... 
தோள் கொடுக்கும் நண்பர்கள்.... 
தோன்றியதை சுருட்டிய நண்பர்கள் ...!!!

கண்ட இடத்திலே கைகுலுக்கி 
இவன் ஏதும் உதவி கேட்டிடகூடாது 
என்று எங்கும் உறவுகள் .....
கஷ்டத்தில் கை கொடுக்கும்
உண்மை உறவுகள் 
இப்படியே ஏராளம்.....!

பிறந்த உடன் பிறப்புக்களை 
சொல்லாமல் விடுவேனா ..?
பேசி திருமணம் செய்த அக்கா 
குடும்பம் பாசத்தில் இமயம் 
பாசத்தின் இமயத்தில் கொடுத்த 
சீர்வரிசை .....!!!

ஓடிப்போய் திருமணம் செய்த 
தங்கையின் குடும்பத்தில் 
பாசத்தை காணோம் ...
கொடுத்தால் தானே பாசம் வர ...!!!

தான் மட்டும் வாழ்க்கையில்
உயர்ந்திட நினைக்கும் தம்பியின் 
குடும்பம் ....!!!

தங்களை விட உயர்ந்திட  கூடாது 
என்பதில் மிக கவனமாக இருக்கும் 
அண்ணியின் குடும்பம் ....
சற்று உயந்தால் என் மனைவியின் 
குறையை குத்திக்காட்டும் அண்ணி 
இப்படியே ஏராளம்.......!!!

இத்தனையை பார்த்துகொண்டு 
பேசவும் முடியாமல் -நியாயத்தை 
சொல்லாவும் முடியாமல் 
இன்றோ நாளையோ என்று 
ஏங்கிகொண்டிருக்கும் பெற்றோர் 
அக்காவின் வீட்டில் வசிக்கும் 
உயிர்கள் .....!!!

இத்தனை துயரங்களுக்கும் 
அவர்கள் தான் காரணம் என்று 
சொல்லிவிட மாட்டேன் ...
எனது பங்கு என்ன என்பதை 
அறியாமலும் இல்லை ...
மனதுக்குள் வெந்து துடிக்கும் 
எண்ணங்களுடன் வாழ்கிறேன் ....!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக