அம்மா ஒருதிசையில் வாழ்க்கை ....!!!
அப்பா ஒரு திசையில் வாழ்க்கை .....!!!
நான் சிறு வயதில் என் தோழியோடு ....
கூட்டாஞ்ச்சோறு விளையாட்டில் .....
அம்மா அப்பா விளையாட்டில் பெற்ற.....
சந்தோசத்தை கூட அனுபவிக்காத ......
என் பெற்றோரின் வாழ்க்கையை ......
நினைத்து வெம்பிக்கொண்டிருக்கிறேன்.....
தட்டிக்கேட்கும் வயதும் இல்லை ......
இந்த சூழலில் வாழவும் முடியவில்லை ....!!!
ஏன் இவர்களிடம் இந்த மனமுறிவு ...?
புரிந்து கொள்ளும் அறிவும் இல்லை ....
அதற்கான அனுபவமும் இல்லை ....
அடிக்கடி அம்மா சொல்லும் வார்த்தை...
அவள் வேண்டும் என்றால் எங்களை.....
விட்டு விடு எங்களை வதைக்காதே .....
நான் பிச்சை எடுத்தாயினும் என் .....
குழந்தையை காப்பாற்றுவேன் .....!!!
அடுத்து அம்மாவுக்கும் அப்பாவுக்கும்.....
இடையில் என்ன நடக்கும் என்ற பயத்தில் .....
போர்க்களத்தில் வாழுகிறான் நான் ....
அம்மாவின் முகத்தில் சிரிப்பு இல்லை....
அப்பாவின் நெஞ்சில் அரவணைப்பு இல்லை ....
ஒப்பந்த திருமணத்தில் வாழ்க்கை வியாபாரம்....
செய்வதுபோல் வாழ்கிறார்கள் என் பெற்றோர் .....
எனக்கு வேலை மூலையில் நின்று அழுவது ....!!!
அம்மாவின் பாசத்துக்கு ஏங்குகிறேன் ...
அப்பாவின் அரவணைப்பிற்கு துடிக்கிறேன்.....
அம்மா விவாக ரத்துக்கு ஏங்குகிறார்....
அப்பா தனிமையை விரும்புகிறார் .....
உச்ச கட்ட மனமுறிவில் என் குடும்பம்....
என் கற்றல் முற்றாக தடைப்படுகிறது.....
கண்டு கொள்ள யாரும் இல்லை.....
உறவுகள் வரும்போது மட்டும் ...
சந்தோசம் நிலவும் போலி ....
வாழ்கையில் என் குடும்பம் ....!!!
பெற்றோரே எனக்கு...
புது ஆடை வேண்டாம் ...
சுற்றுலா பயணமும் வேண்டாம் ....
என் வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்கனும்...
அம்மா சிரிக்கணும் ..
அன்போடு என்னை முத்தமிடனும் ....
அப்பா சிரிக்கணும் பாசத்தோடு
என்னை தூக்கணும் ...
எங்கள் வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்டு ...
பலமாதங்கள் ஆகிவிட்டது ....!!!
பெற்றோரே ..
வேண்டாம் விவாக ரத்து ...
வேண்டாம் தொலைக்காட்சியில் ....
குடும்ப பிரச்சனை தீர்வு நிகழ்ச்சி ....
முடிந்தால் எனக்காக வாழுங்கள் ....!!!
என் தோழிகளின் பெற்றோர்
போல் வாழுங்கள்
முடியவில்லையம்மா
என்னால் தாங்க...!!!
இரு கரம் கூப்பி கேட்கிறேன்
" பிஞ்சு மனம் கெஞ்சி கேட்கிறேன் "
எங்கள் வீட்டில் சிரிப்பு சத்தம் கேட்கட்டும் ....???
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக