இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 1 மே, 2016

அதிசயக்குழந்தை - அநாதை

அதிசயக்குழந்தை - அநாதை
-----

அதிசயக்குழந்தையிடம் ....
உன் அப்பா பெயர் என்ன ...?
உன் அம்மா பெயர் என்ன ...?
உனக்கு உடன் பிறப்புக்கள் ...
எத்தனை பேர் .....?

எனக்கு யாருமே இல்லையே ...
என்றான் ....!!!

அப்போ நீ அநாதையா...?
என்று கேட்டேன்....
யாருமே இல்லை என்றுதானே ...
சொன்னேன் அநாதை ...
என்று சொன்னேனா  என்றான் ...!!!

என்ன உளறுகிறாய் ....?

சொல்ல தொடங்கினான் அவன்
கருத்தை .....................!!!!!!!!!!!!

உங்கள் ....
அம்மா அப்பா இப்போ ....
இருகிறார்களா ....?
இல்லையே ....!!!

அப்போ நீங்கள் ...

அநாதையா ....?
இல்லையே ....!!!

உங்கள் பெற்றோர் இறந்தவுடன் ...
உங்களுக்கென ஒரு குடும்பத்தை ...
அமைத்து மனைவி குழந்தை....
மாமனார் மாமியார் என்று ஒரு ...
உறவை வளர்த்தீர்களே......
உங்களை யாரும் அநாதை ..
என்று அழைத்தார்களா ....?

உங்களின் தவறு என்ன தெரியுமா ...?
நீங்கள் பிறரை காப்பாற்றுவதாக ....
நினைப்பதும் நீங்கள் இல்லையென்றால் ...
அவர்கள் அனாதையாகிவிடுவர் ....
என்ற உங்கள் தப்பான எண்ணமே ....!!!

நான்
ஒரு அநாதை எனக்கு உதவுங்கள் ....
என்று சொல்பவர்கள் அநாதை ...
என்ற சொல்லை தம் ஆயுதமாய் ....
எடுத்து தம்மீது எல்லோரும் இரக்கப்பட...
பயன்படுத்தும் தந்திரம் .....
உழைத்து உண்பவனுக்கும் ...
நம்பிக்கை உள்ளவனுக்கும் ....
அநாதை சொல் அருவருப்பான ....
சொல்லாகும் ஆசானே என்றான் ....!!!

^
அதிசயக்குழந்தை
வசனக்கவிதை
கவிப்புயல் இனியவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக