இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 14 ஆகஸ்ட், 2013

உன் ஈரமான பார்வைதான்..... ?




உன்
கண்ணில் இருந்த .....
ஈரமான பார்வைதான்.....
என் இதயம் என்னும்......
மண்ணில் விழுந்து ....
காதல் என்னும் பயிரை.....
உருவாக்கி வைத்தது ....!!!

உன்
அன்பான் வார்த்தைகள்
காதல் என்னும் பயிருக்கு
வளமான தரமான
உரமாக வந்து வளர வைத்தது ....!!!

உன்
நினைவுகள் கனவுகள்
சிறு மரமாக இருந்த
காதலை விருட்சமாக்கியது ....!!!

உன்
வலியான வார்த்தைகள்
இடையிடையே காதல் மரத்தில்
இலையுதிர்வை ஏற்படுத்தின
என்றாலும் -நம் காதல்
மரம் ஒன்றும் முருங்கை
மரமல்ல விரைவில்
முறிவதற்கு .......!!!