இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

நல்ல உறவை தேடிவிடு ...

வெளிச்சம் வரும் போது 
நிழல் வருவதுபோல் 
வசதி வரும் போதுதான் 
உறவுகள் பெருகும் ...!!!

வறுமையில் இருந்த போது 
பார்க்காத உறவு -வசதியில் 
வருவது வினோதமல்ல ...!!!

உறவுகள் இருக்கும் போதே 
நல்ல உறவை தேடிவிடு ...
நல்ல உறவென்பது -நீ 
அழுதால் அழும் உறவல்ல ..!!!
நீ அழுதால் கண்ணீரை 
துடைத்துவிடும் உறவு ...!!!