இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 31 ஆகஸ்ட், 2013

கூலிக்கும் காதல் வரும்

கூலி வேலை செய்தேன்
 உன் வீட்டில்
யார் கண்டது நீ கண்ணில்
படுவாய் -என்று ?
கூலிக்கும் உன்மீது ஆசை .
உனக்கும் தான் .
கூடி ஒருநாள்கூட போசமுடியாத
-தினக்கூலினான் .
வீட்டுவேலை முடிந்ததும்
-முடிந்தது என் காதல்
கண்ணே முடியவில்லை
உன் நினைவுகளை மறக்க
முடியவில்லை யாருக்கும் சொல்ல .
கூலிக்கு தேவையா?
இந்தக்காதல் என்பார்கள் .
கூலிக்கும் இதயம் இருக்கு
 என்று ஏன் புரிவதில்லை
இந்த உலகத்துக்கு ....
கூலிக்கும் காதல் வரும் -என்று
இன்னுமொரு கூலிக்கு புரிந்தால் போதும் ....