இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 ஜூலை, 2014

விழியை ஓரமாக்கி பார்க்கும்....!!!



விழியை ஓரமாக்கி பார்க்கும்....!!!

காதலில் 
வெட்கம் ஒரு அழகு ...!!!
நாணம் 
இன்னுமொரு அழகு ...!!!
என்னவள் என்னை ...
வெட்கப்பட்டு வெட்கபட்டு 
பார்க்கும் அழகு அழகோ 
அழகு ......!!!

நேரே பார்க்க முடியாத 
வேளையில் விழியை 
ஓரமாக்கி பார்க்கும் அழகை 
தனக்குள்ளே 
நினைத்து சிரிக்கும் அழகு 
அழகுக்கெல்லாம் சிகரம் ...!!!


திருக்குறள் : 1095

குறிப்பு அறிதல்

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் 
சிறக்கணித்தாள் போல நகும்


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக