இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 ஆகஸ்ட், 2014

வயல் காற்று கிராமிய காதல் 06

நிலத்தை
உழவு இயந்திரம் ஆழமாக
உழுகிறதோ இல்லையோ
என்னவளே உன் பார்வை
இதயத்தை ஆழமாக
உழுது விட்டது .....!!!

ஏக்கமும் தாக்கமும்
நிறைந்த என் இதயத்தை
எப்போது பண்படுத்த
போகிறாய் அன்பே ....!!!

உழுத நிலத்தில் பயிர்
வளர்வது உறுதி ..
உன் இதயத்தில் என் காதல்
வளர்வதும் உறுதி ....!!!
+
+
கே இனியவன்
வயல் காற்று கிராமிய காதல்
காதலன் ஏக்க கவிதை 06

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக