இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

அழகுக்கு சிகரமானவளே....

அழகுக்கு சிகரமானவளே....

வெண்ணிலவே 
அழகுக்கு சிகரமானவளே....
என்னவளின் கண்கள் 
ஆயிரம் ஆயிரம் மலர் 
அழகுக்கு நிகரானவை ....!!!

என்னவளின் கண்ணுக்கு 
நீ ஆசைப்படாதே 
அழகு கண்ணை நீ பெற்றால் 
சந்தை பூவாக மாறி விடாதே 
நான் ரசிக்கும் பூவாக 
இருந்து விடு .....!!!


திருக்குறள் : 1119

நலம்புனைந்துரைத்தல்

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின் 
பலர்காணத் தோன்றல் மதி.

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 39

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக