இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 15 ஜூலை, 2014

படத்துக்கு ஏற்ற கவிதைகள்


முதியோர் அகத்தில்  இருந்தால்தான் ...!!!
------------------------------------------------------- ------

முதுமையின் இன்பத்தை
புரிந்து கொள்ளவில்லை
இந்த உலகம் - முதுமையை
பிள்ளைகள் சுமையாகவும்
பெரியோர்கள் நோயாகவும்
நினைக்கிறார்கள் .....!!!

வாடியம்மா .....!!!
முதுமையின் இன்பத்தை
வாழ்ந்து காட்டுவோம் நாம்
காவோலை மரத்தில் இருந்தால்
தான் குருத்தோலையின் அழகு
தெரியும் .- முதியோர் அகத்தில்
இருந்தால்தான் இளையோரின்
அழகு தெரியும் ....!!!


கே இனியவன்
படத்துக்கு ஏற்ற கவிதைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக