இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 21

21) இன்பத்தை அள்ளி தரவல்ல...?

மின்னனை ....
தோற்கப்பண்ணும் ....
ஒளிகொண்ட வளையல்...
என்னவள் கரங்களில் தான் ..
காணமுடியும் .....!!!
என் ஐயம் பொறிகளை
மயக்கி இன்பத்தை அள்ளி
தரவல்ல வளையல்
என் இல்லத்தாளின் கரங்களில்
தானே கிடைக்க முடியும் ...!!!

திருக்குறள் : 1101
புணர்ச்சிமகிழ்தல்
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள.
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 21

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக