இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

நண்பன் நிழல் அல்ல உயிர் .........!!!

என்னோடு இருந்தவள் 
என்னை புரியவில்லை 
என் காதலையும் 
புரியவில்லை ...!!!

தனியாக இருந்து 
தவிர்த்தேன் 
புலம்பினேன் ....!!!
யாரிடம் என் துயரை 
சொல்லியழுவேன் 
தவித்தேன் 
தவித்தேன் 

நண்பனே உன்னுடன்
பழகியபின்புதான்
நட்புக்கும் காதலுக்கும் 
வரைவிலக்கணம் 
அறிந்துகொண்டேன்

நிழல் போல் வருவது - காதல் 
வெளிச்சம் வந்தால்
விலகிவிடுவது காதல் ....!!!
இதயமாய் இருப்பது -நட்பு 
உயிர் இரிருக்கும் வரை 
தொடர்வது நட்பு ....!!!

நண்பர்களே -ஒரு 
வேண்டுகோள்....?
நண்பனிடம் சொல்லாதீர் -நான் 
உனக்கு நிழலாய் இருப்பேன் 
என்று -நண்பன் நிழல் அல்ல 
உயிர் .........!!!