இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 3 நவம்பர், 2013

நீ - படும் பாடு

என்பாட்டில்
தனியே இருந்தேன்
என்னை செத்தவன்
போல் ஆக்கிவிட்டாய்
யார் நீ
**************
என்னை மட்டும்
நினைத்த மனதில்
உன்னையும் நினைக்க
வைத்தாயே
ஏன் நீ
***************
யாரையும் காதலிக்க
மாட்டேன் என்றிருந்தேன்
உன்னை கண்டேன் -எல்லாம்
மாறிவிட்டது
எப்படி நீ ..?
***************
தினமும் வருயாய்
புதினம் தருவாய்
இப்போது எல்லாம்
நிறுத்தி விட்டாயே
எதற்காக நீ
***************
இருவராய் இருந்தோம்
ஒருவராய் மாறி விட்டாய்
எப்போது நீ
***************
இதயத்தில் இருந்து
உடல் முழுதும்
ஓடித்திரிந்த நீ -இப்போ
மனதில் கூட இல்லையே
எங்கு நீ
***************
ஏன் சந்தேகப்பட்டாய்
எதற்காக பிரிந்தாய்
எவர் தூண்டியது
எவரால் நீ
***************
எனக்காக வாழவில்லை
உனாக்காகவும் வாழவில்லை
அப்படிஎன்றால் ..?
யாருக்காக நீ
***************
பார்க்கும் இடமெல்லாம்
பார்க்கும் பொருள் எல்லாம்
தொடும் இடமெல்லாம்
எங்கும் நீ
****************
யாரெல்லாம் என்னை
காதலிக்கலாம்
எவருக்கெல்லாம் என்னை
திருமணம் பேசலாம்
ஆனால் என் மனதில்
எப்போதும் நீ