இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 ஏப்ரல், 2014

மணமகள் கண்கலங்குகிறாள் ...!!!

மணமகள் கண்கலங்குகிறாள் ...!!!
-------------------------------------------------

மணவறையில் ஆரவாரம்
பெரியோர்கள் ஆசீர் வாதிக்க
ஆயத்தம் ...!!!

கொட்டும் மேளம்
காதை பிளக்கிறது
எழுந்துநின்று   எல்லோரும்
அறுகரிசியுடன் நிற்கிறர்கள்
புரோகிதர் கட்டளையிடுகிறார்
மணமகன் கட்டுகிறான்
மணமகள் கண்கலங்குகிறாள் ...!!!

யாரை நினைத்து அழுதாய் உயிரே ...?
உன் பெற்றோரை நினைத்தா...?
வருங்கால மாமியை நினைத்தா ..?
எமது வாழ்க்கையை நினைத்தா ,,?
அத்தனைக்கும் தலையாட்டினாள்
இல்லை இல்லை இல்லை ...
அப்போ எதற்காக ....?

இத்தனை வருடம் இன்பமாக
காதல் செய்தோம்
சுதந்திரமாக பேசினோம் ..
அந்த அற்புத காதல் இந்த
இந்த நிமிடமே அழிந்து போகிறதே
அதை நினைத்து அழுதேன் என்றாள்..!!!

காதலித்து திருமணம் செய்தவர்கள்
திருமணத்தின் பின் காதலிப்பதில்லை
அவளின் கண்ணீரில் உண்மை
இருக்கத்தான் செய்கிறதோ ...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக