இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

பூக்களே தலை குனியும் அழகியே ....!!!

பூக்களே தலை குனியும் அழகியே ....!!!

உயிரே
அழகையும் கண்ணையும் காணும் 
பாக்கியத்தை குவளை பூக்கள் 
பெற்றிருந்தால் ....!!!

உன் 
பொன் நகையையும் 
புன்னகையும் அழகையும் 
காந்த கண்ணையும் கண்டு 
உனக்கு நிகராக தாம் இல்லையே 
வெட்கப்பட்டு வேதனை பட்டு 
தலைகுனியும் -என் அழகியே ...!!!


திருக்குறள் : 1114

நலம்புனைந்துரைத்தல்

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் 
மாணிழை கண்ணொவ்வேம் என்று.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 34

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக