இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

உன் இடை மெல்ல சாகப்போகிறது ....!!!

உன் இடை மெல்ல சாகப்போகிறது ....!!!

மெல்லிடையாளே ....
உன் இடையின் மென்மை..
அறியாதவளே ..
மென்மை ராணி பூவாம் 
அனிச்சம் பூவை காம்போடு 
அணிந்து விட்டாயடி ....!!!

போச்சு போச்சு ...
உன் மெல்லிடை ஒடிந்து 
இடையின் ஓசையை இழக்க 
போகிறேன் -பூவின் காம்பின் 
கனம் தாங்காமல் உன் இடை 
மெல்ல சாகப்போகிறது ....!!!


திருக்குறள் : 1115

நலம்புனைந்துரைத்தல்

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு 
நல்ல படாஅ பறை.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 35

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக