இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

சீ சீ என்னே உன் அறிவு ....!!!

சீ சீ என்னே உன் அறிவு ....!!!

ஓ மனமே ....
நீ பூக்களின் ராணிகளை ...
பார்த்திருப்பாய் வியந்திருப்பாய் ...!!!
என் கண்கண்ட என்னவளின் ...
கருவிழிகண்கள் -மனமே... 
நீ இதுவரை கண்ட மலர்களை ....
போல் இருக்கும் என்று மயங்காதே ...!!!

மனமே இதுவரை 
பிறர் பார்த்த பூக்களைப்போல் 
என்னவளின் கண்னை 
பார்க்கிறாயே ....!
சீ சீ என்னே உன் அறிவு ....!!!


திருக்குறள் : 1112

நலம்புனைந்துரைத்தல்

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண் 
பலர்காணும் பூவொக்கும் என்று.


திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 32

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக