இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

அழகுக்கும் மென்மைக்கும் -நீ

அழகுக்கும் மென்மைக்கும் -நீ 

ஏய் பூக்களின் ராணியே 
மென்மையில் சிகரமாம் நீ 
அழகின் வானமாம் நீ 
பூக்களில் கர்வம் கொண்டவளே 
அனிச்சம் பூவே! - நீ 
எதுவாகவும் இருந்திட்டுப்போ ...!!!

என்னவளின் 
அழகுக்கும் மென்மைக்கும் -நீ 
ஏணிவைத்தாலும் எட்டாதவள் 
மென்மைக்கு அனிச்சம் இல்லை 
என் மனைவிதான் இனி மேல் ...!!!



திருக்குறள் : 1111

நலம்புனைந்துரைத்தல்

[b]நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் 
மென்னீரள் யாம்வீழ் பவள்.[
/b]

திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 31

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக