இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 15 மார்ச், 2016

உண்மையின் மறு பக்கம் பார்க்கிறேன்-02

அறிவின் மறு பக்கம் சிக்கலானது ....!!!
உண்மையின் மறு பக்கம் பார்க்கிறேன்-02
-----------------

உண்மையிடம்  
கேட்டேன்  ஒரு கேள்வி ...?
அறிவு எது ..? ஞானம் எது ..?

உண்மை சொன்னது .....

அறிவுக்கும் ஞானத்துக்கும் ...
எப்போதும் முரண் தொடர்தான் .....
அறிவு வளர வளர ....
அறிவை தேட தேட .....
ஞானம் காணாமல் பொய் விடும் ....
அறிவு தான் அத்தனை மன ....
குழப்பத்துக்கும் காரணம் .....!!!

அறிவுக்குள் நீங்கள் ....
மூழ்கும் போதெலாம் ஆசை ....
அதிகரித்துகொண்டே போகும் ....
துன்பத்தையும் கோபத்தையும் ...
துயரத்தையும் பெருக்கிக்கொண்டே ....
செல்லும் .....!!!

அறிவை பெருக்க பெருக்க ....
உலக பற்றுதல் கூடிகொண்டே ....
போகும் அறிவிலிருந்து தூர ....
விலகும் காலம் எப்போது ....
உன்னில் ஆரம்பிக்கிறதோ ....
அப்போதுதான் நீ ஞானத்தில் ....
அக்கறை செலுத்துவாய் .....!!!

அறிவினால் எப்போதும் நீ ...
ஒன்றை பற்றிப்பிடிப்பாய் ....
அந்த பற்று உன்னை கொஞ்சம் ...
கொஞ்சமாய் விழுங்கிகொண்டே ...
இருக்கும் மீள் முடியாவிட்டால் ....
கடும் துன்பத்துக்குள் விழுந்து ...
விடுகிறாய் .......!!!

அறிவு நிறைந்தால் தான் ....
பெருமை என்று நினைப்பவர்கள் ....
அறிவின் மறுபக்கத்தை புரியாதவர்கள் ....
அறிவினால் கிடைக்கும் இலாபத்தை ....
மட்டும் ரசிப்பவர்கள் - அறிவின் மறு
பக்கம் சிக்கலானது ....!!!

^
^
^
உண்மையின் மறு பக்கம் பார்க்கிறேன்
பார்க்கின்றபோதேலாம் உங்களோடு ...
பகிர்ந்து கொள்வேன் ....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக