இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 16 மார்ச், 2016

உண்மையின் மறுபக்கம் பார்க்கிறேன் - 03

உண்மை அநாதையானது ....!!!
.......................உண்மையின் மறுபக்கம் பார்க்கிறேன் - 03
^^^
குற்றவாளி கூண்டில் .....
குற்றம் சாட்டப்பட்டு ஒருவன் .....
கூண்டில் நிற்கிறான் ....
சட்டவாதிகள் குற்றத்தின் மேல் ....
குற்றம் சாட்டி குற்றமற்றவனை .....
குற்றவாளியாக்க முயற்சித்தனர் ....!!!

பார்வையாளராக இருந்த ....
உண்மைக்கு கோபம் வரவே .....
சட்டென்று எழுந்து - இவை ...
அனைத்தும் பொய் . எனக்கு ....
எல்லா உண்மையும் தெரியும் ....
என்று உரத்த குரலில் சொன்னது .....!!!

அதிர்ச்சியடைந்த நீதிபதி ....
மன்றத்தின் அமைதியை கெடுதீர் ...
குற்றம் சுமத்தி -உண்மையை ...
மன்றத்திலிருந்து வெளியேற்றினார் ....!!!

உண்மை ....
வேலையில்லாமல் அலைந்தது ....
பட்டதாரியாகவும் இருந்தது ......
சிறு வேலையென்றாலும் கிடைக்டும்....
தோட்ட முதலாளியிடம் வேலை கேட்டது ....
என்ன படிதிருகிறாய் நீ ....?
பட்டதாரி என்றது -உண்மை ....
உனக்கு வேலை கிடையாது போ ....
எதற்கு என்று வினாவியது உண்மை ...?

இங்கே 
படிக்காதவர்களே வேலை செய்கிறார்கள் ....
நீ அவர்களையும் கெடுத்துவிடுவாய் ......
தொழிற்சங்கம் அமைப்பாய் -போராடுவாய்....
சம்பளம் கூட்டி கேட்பாய் .....
அப்பாப்பா உன்னை வைத்திருந்தால் ....
என் நிம்மதி கெட்டு விடும் .....
இவனை வெளியேற்றுங்கள் ...
கட்டளையிட்டார் முதலாளி .....!!!

சட்ட துறையும் தூக்கி எறிந்து விட்டது ....
பொருளாதார துறையும் எறிந்து விட்டது ....
அப்போ உண்மை ஒரு அநாதை தானே ....!!!
^
^
^
உண்மையின் மறு பக்கம் பார்க்கிறேன் 
பார்க்கின்றபோதேலாம் உங்களோடு ...
பகிர்ந்து கொள்வேன் ....!!!
^
கவிப்புயல் இனியவன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக