இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 22 ஜூன், 2016

கதைக்கும் கவிதைக்கும் காதல் 02

அவன் ; இனிமை
----------
நண்பனின் திருமண வீட்டுக்கு இரவு வேளை இனிமையும் அவன் நண்பர்களும் வீடடையும் தெருவையும் அலங்கார படுத்த சென்றார்கள் . இரவு முழுவதும் அலங்கார படுத்தல் இருந்தது . நண்பர்களுக்கிடையே கடி ஜோக்குகள் மாறி மாறி நடைபெற்றன . அந்த வேளையில் தான் வின்னியா திருமண வீட்டுக்கு வான் ஒன்றில் இறங்கி வந்தாள். யாரடா மாப்பு இவங்க என்று நண்பனை கேட்க "அவன் அது அக்காவின் "பிரண்ட் குடும்பம் என்று சொல்ல .... வந்தவர்கள் வீட்டுக்குள் போனார்கள் . இரவு ஆகிவிட்ட்து .ஆரவாரமாக இருக்கும் இவர்களுக்கு தேநீர் தேவைப்பட .நண்பன் அம்மா தேநீர் வேணும் என்று சொன்னான் .

இதோ தருகிறேன் என்று சொல்லிக்கொண்டு " வின்னியா " இந்த தேநீரை ஊறி அவங்களுக்கு குடும்மா .என்று சொல்லிவிட்டு தாய் தான் வேலைகளை பார்த்தார் . வின்னியா தேநீரை ஊற்றி கொண்டு சென்றாள். பத்து தேநீரை ஒரே தட்டில் கொண்டு சென்று கொடுத்தபோது . எதிர் பாராமல் வின்னியாவுடன் மோதிவிடடான் இனிமை . தேநீர் அனைத்தும் .கொட்டி விட்ட்து . "சாரி சாரி"மன்னிச்சுடுங்க என்று அடிக்கடி சொன்னான் இனிமை .

வின்னியா ஒன்றும் பேசாமல் .சென்றுவிடாள்.இனிமைக்கு  ஒரே  மன குழப்பம் அவள் கோபித்து விடடாளா ....? என்று குழப்பத்தில் இருக்கும் போது மீண்டும் தேநீரோடு வந்தாள் வின்னியா .....!!! இப்போதான் இனிமைக்கு நிம்மதி மீண்டும் மன்னிப்பு கேட்டு  உங்க பெயர் என்ன என்று தயக்கத்தோடு கேடடான் . அப்போதும் அவள் மௌனமாக சென்று விடடாள் .

அவள் ;வின்னியா
---------
மௌனம்
ஒரு கொலைக்கொள்ளி ......
கொஞ்ச்ம கொஞ்சசமாய் ....
ஒருவனை கொல்லட்டும்.....
என்ற சின்ன இறுமாப்புடன் ....
இருந்தாள் வின்னியா .....!!!

துயரத்தில் இருந்து ...
அவனை பார்ப்ப்தும் ....
அவன் பார்க்கும்போது ....
முகம் திருப்புவதுமாய் ....
காதல் அரும்பு விளையாட்டு .....
விளையாடினாள் வின்னியா ....!!!

&
கதைக்கும் கவிதைக்கும் காதல்
கதையும் கவிதையும் 02
கவிப்புயல் இனியவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக