இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 டிசம்பர், 2016

இனியவனின் என் மனைவி

என் மனைவி
-------------
ஒரு வேளை 
எனக்கு முன் என் 
மனைவி இறந்தால்
அவளுக்காக உலகிலையே 
புதிய கோயில் 
ஒன்றைக்கட்டுவேன் ..
இதுவே மனைவிக்கு கட்டிய
மனைவி மஹாலாகஇருக்கும் ..
அந்த கோயிலை நான் தான்....!!!

நான் 
தான் அமைப்பை வடிவமைப்பேன்
நான் தான் கல் உடைப்பேன்
நான் தான் மண் சுமப்பேன்
நான்தான் கட்டி முடிப்பேன்
நானே அழகு பார்ப்பேன் -...!!!

அந்த 
கோவிலில் என்குடும்ப உறுப்பினரை 
யாரையும் வணங்க விடமாட்டேன் .-
அவர்கள் கோவிலாக பார்ப்பார்கள் 
.நான் கடவுளாக பார்க்கிறேன் ...
என் மீதிக்காலத்தை அங்கேயே 
உண்ணா நோன்பிருந்து இறந்து விடுவேன் ...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக