இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 6 ஜனவரி, 2016

இனியவன் ஹைபுன் 02

தாத்தா நான் நல்லா சைக்கிள் ஒடுறானா ..? என்ற பூட்டனின் கேள்விக்கு பதில் சொல்ல முதல் தடீரென விழுந்தான் பூட்டான் ..யாரப்பா பிள்ளையை தூக்குங்கோ பூட்டான் விழுந்திட்டான் ...!!!

தனது வலது காலை பார்த்தார் அப்புத்துரை... பெரிய தழும்பு சின்ன வயதில் மாட்டு வண்டி ஓடியபோது வண்டிளால் விழுந்த காயம் நினைவு வந்தது ...!!!

மதியம் சாப்பாட்டு நேரம் பேரன் வந்தான் வயது 18 இருக்கும் வந்தவுடன் அவன் தாய் நித்திய பூசையை ஆரம்பித்தாள் நேத்து எங்கடாபோண்ணி ஸ்கூலுக்கு போறாண்டு
விஜய் படத்துக்கு போனது தெரியாதா எனக்கு அப்பா வரட்டும் ...
அப்பாவரட்டும் ......தாத்தா சிரித்தார் 
போடா போ கைகாலை கழுவிட்டு சாப்பிடு ....!!!
தான் பொய் சொல்லி நாடகத்துக்கு போனதும் தனக்கு அடிவிழுந்ததையும் எண்ணி சிரித்தார் .....!!! தாத்தா 
அன்று தண்டனையாக இருந்தவை வேதனையாக இருந்தவை இன்று இனிமையாக இருந்தது அவருக்கு ...!!!


இளமையின் இனிமை    
தாமதமாக இனித்தது 
முதுமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக